இன்ஜினியர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர் பட்டியல், மற்றும் அரசு உதவி வழக்கறிஞர் தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்ப தாரர் பட்டியல் ஆகியவற்றை, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) வெளியிட்டு உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு:
இன்ஜினியர் பணியில், 220 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, மார்ச்,2ம் தேதி, எழுத்து தேர்வு நடந்ததது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், 454 பேர், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இத்தேர்வு, வரும் 22ம் தேதி முதல், 25ம் தேதி வரையிலும், பின், 28ம் தேதியும், தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும்.இதற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர் பதிவெண் பட்டியல், www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கான அழைப்பு கடிதம், தனித்தனியாக அனுப்பப்படும்.
உதவி வழக்கறிஞர் பணி:
அரசு உதவி வழக்கறிஞர் பணியில், 90 இடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஏப்ரல், 27,28 தேதிகளில், தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, 137 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதன் விவரம், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் நகல்களை, வரும், 17ம் தேதிக்குள், தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, தேர்வாணையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி