ஆசிரியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு[தலையங்கம்-dailythanthi) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2014

ஆசிரியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு[தலையங்கம்-dailythanthi)


சமீபத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கட்டிடத்துக்குள்வேட்டி அணிந்து வந்தார் என்ற ஒரே காரணத்துக்காகஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கே அனுமதி மறுக்கப்பட்டது.
இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்து சட்டசபையிலும் எதிரொலித்து, இப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதாவே நடவடிக்கை எடுக்கும் கட்டத்துக்கு சென்றுவிட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு ஆடை கட்டுப்பாடு என்ற வார்த்தை பிரபலமாகிவிட்டது. சில பல பணிகள் நிமித்தம் சீருடை அல்லது ஆடை கட்டுப்பாடு என்பது காலம்காலமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த பணிக்கேற்ப நிர்ணயிக்கப்படும் இந்த ஆடைகளை அணிந்தால்தான் அந்த பணியும் சிறக்கும், அதை ஆற்றுவதற்கும்உறுதுணையாக இருக்கும். மேலும், அந்தந்த பணிக்கேற்ற அடையாளம் நிச்சயம் தேவை. அந்த உடையை அவர்கள் அணிந்துவந்தால்தான் ஒரு தனித்துவம் தெரியும். இந்த உடைகளை அவர்கள் அணிந்து வரும்போது அந்த உத்தியோகத்துக்குரிய ஒரு கம்பீரம் தானாகவே வரும்.இவ்வாறு சீருடை நிர்ணயிக்கப்படாத பணிகளில், எந்த உடை அணிய வேண்டுமானாலும் அணியலாம், ஆனால், அந்த பதவிக்கேற்ற, பணிக்கேற்ற கவுரவத்துக்கு உகந்த ஆடைகளையே அணியவேண்டும் என்பதுஎழுதப்படாத நியதியாக உள்ளது. எங்களுக்கு சீருடை இல்லை என்று சொல்லிக்கொண்டு எந்த உடையை அணிந்துவேண்டுமானாலும் வரலாம் என்ற நடைமுறைதமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டில் பிளஸ்–2 வரை அனைத்து பள்ளிக்கூடங்களிலும் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசே இலவச சீருடைகளைவழங்குகிறது.தனியார் பள்ளிக்கூடங்களிலும் அவர்களே மாணவர்கள் எந்த சீருடை அணிந்து வரவேண்டும் என்று நடைமுறைக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள். உலகில் பெரும்பாலான நாடுகளில் இத்தகைய சீருடைகள் நடைமுறையில்உள்ளன. ஆனால், கனடா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற சிலநாடுகளில் மட்டும் சீருடையோ, ஆடை கட்டுப்பாடோ இல்லை. அமெரிக்காவில்கூட பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் சீருடை இல்லை. தேவையில்லாதகட்டுப்பாடுகளை இளம் மாணவப்பருவத்தில் திணிக்கவேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து அங்கு இருக்கிறது.தமிழ்நாட்டிலும் பள்ளிக்கூட படிப்பை முடித்துவிட்டு, கல்லூரிகளுக்குள் நுழைந்தவுடன் யூனிபாரம் அல்லது சீருடை என்று தனியாக இல்லை. ஆனால், பல கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள்.இப்போது மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்துவர வேண்டாம், சட்டையை பேண்டுக்குள் இன் பண்ணி, காலில் ஷூ அணியவேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.

இதுபோல, மாணவிகள் சேலை,சல்வார் கமீஸ் அல்லது சுரிதார் அணிந்து வரவேண்டும், தலைமுடியை கட்டிக்கொண்டு வரவேண்டும், நிறைய நகைகள் போட்டுக்கொண்டோ, பூ வைத்துக்கொண்டோ வரக்கூடாது, மோதிரம் அணியக்கூடாது என்றெல்லாம்எழுதப்படாத விதிகளாக நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதை மருத்துவ கல்லூரி மாணவர்களும் பெருமையோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.இங்குமட்டுமல்ல, என்ஜினீயரிங் கல்லூரிகளிலும், வேளாண்மை, கால்நடை மருத்துவம், பாலிடெக்னிக் போன்ற தொழில் கல்லூரிகளிலும், அனைத்து கலைக்கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால்,ஆசிரியர்களுக்கு உடை கட்டுப்பாடு இல்லாததால், சில பள்ளிக்கூடங்களில் குறிப்பாக கிராமப்புற பள்ளிக்கூடங்களில் சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்ட ஆடைகளை சர்வசாதாரணமாக அணிந்துவருகிறார்கள் என்றும், ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் பல ஆடை கட்டுப்பாடுகள் உண்டு.

ஆனால், பணிக்கு சேர்ந்தபிறகு பெரும்பாலானோர் கடைப்பிடித்தாலும், சிலர் கடைபிடிப்பதில்லையே என்றும் கூறுபவர்களால் ஆசிரியர்களுக்கு சீருடை தேவையில்லை, மாறாக அவர்கள் அணியும் ஆடைகளுக்குகட்டுப்பாடு வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. ஆசிரியர்கள் ஆடை அணியும் முறைதான், எதிர்காலத்தில் மாணவர்கள் பின்பற்றவும் வழிவகுக்கும்.குஜராத் மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு சீருடைபரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சீருடை தேவையில்லை, அதற்கு பதிலாக இன்னென்ன ஆடைகளைத்தான் அணியலாம், அதை இந்தெந்த வகையில்தான் அணியலாம், மாணவர்களைவிட வேறுபடுத்தி இருக்கும் வகையில், ஆசிரியர் பணியே அறப்பணி என்றுகூறுவதற்கேற்ற வகையில், அந்த பணியின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில் ஆடை கட்டுப்பாடு கொண்டுவரலாம் என்ற கோரிக்கையை பள்ளிக்கூட கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும்.

2 comments:

  1. TNTET – ன் தற்போதைய குளறுபடி: HEART BREAKING NEWS

    .05 இலவச வெயிட்டேஜ் மதிப்பெண்கள்

    49.25 = 4.93 இது தவறு
    49.75 = 4.98 இது தவறு
    TRB பயன்படுத்தியுள்ள மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது. புள்ளிக்குப் பிறகு 5 அல்லது அதற்கு மேற்பட்ட எண் வரும்பொழுது ஒரு தசம மதிப்பை AUTOMATIC –ஆகக்கூட்டிக்கொள்கின்றது. எடுத்துக்காட்டாக PLUS TWO மதிப்பெண் 45.17 யை 45.2 ஆகக் கணக்கிடுகின்றது.......இதாவது பரவாயில்லை 49.25 யை 49.3 ஆகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !)மேலும் TNTET தேர்வில் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 35.59 ( 89 * .6 = 35.59) மட்டுமே வழங்கப்படவேண்டும் ஆனால் 35.6 ஆகக் கணக்கிடுகின்றது. .01 மதிப்பெண் வித்தியாசம் உங்கள் வாழ்கையை மாற்றிவிடும்.

    நீங்களே உங்கள் நண்பர்களின் பதிவு எண்களை சோதித்துக் கொள்ளுங்கள்…நான் மேற்குறிப்பிட்ட குறை உடைய எண்களை கொடுத்துள்ளேன் 13TE65200722
    13TE63204905
    மேலும் விவரங்களுக்கு
    www.facebook.com/profile.php?id=100004403297597

    ReplyDelete
    Replies
    1. Unmai than nanba. Yarum nambave matanga. List varum pothu therium nanba

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி