பிளஸ் 2 துணைத்தேர்வு செப்., 25ம் தேதி துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2014

பிளஸ் 2 துணைத்தேர்வு செப்., 25ம் தேதி துவக்கம்

'பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள், செப்., 25ம் தேதி துவங்கும்' என, அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.செப்டம்பர் மற்றும் அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, துணைத் தேர்வுகள், செப்., 25ம் தேதி துவங்குகின்றன. பிளஸ் 2 துணைத் தேர்வுகள், செப்., 25ம் தேதி துவங்கி, அக்டோபர், 9ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு தேர்வுகள், அக்., 4ம் தேதி வரையும் நடக்கின்றன.

விண்ணப்பிக்க அவகாசம்

ராமநாதபுரம்: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம் நீடிக்கப்பட்டுஉள்ளது.பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு சேவை மையங்கள் (நோடல் சென்டர்கள்) மூலம் விண்ணப்பிக்க, இன்று (ஆக., 14) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆக., 19 வரை அவகாசம் (3 நாள் விடுமுறை தவிர) நீடிக்கப்பட்டுள்ளது.
'அந்தந்த கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலம் www.tndge.in என்ற இணையதள முகவரியில், தேர்வு சேவை மைய விவரத்தை தெரிந்து கொண்டு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்,' என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி