இந்த வழக்கை நீதிபதிகள் பால் வசந்தகுமார், ரவிசந்திர பாபு ஆகியோர் விசாரித்து 2 வாரத்தில் தமிழக அரசு மற்றும் 760 பள்ளிகளும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.இதை தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, மழலையர் பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.பின்னர் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கிருஷ்ணகுமார் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாதாடும் போது, அங்கீகாரம் பெறாமல் செயல்படும் நர்சரி பள்ளிகள் மூடப்படும். அதற்காக, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ம் தேதிக்குள் அங்கீகாரம் பெறாத மழலையர் பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுக்க வும், அக்டோபர் 15ம் தேதிக்குள் விளக்கம் பெறவும், நவம்பர் 30ம் தேதிக்குள் தொடக்க கல்வி அதிகாரிகள் பள்ளிகளை நேரில் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உரிய அங்கீகாரம் பெறாவிட்டால் அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசு விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத பள்ளிகளை ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் மூட உத்தரவிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 20112012ம் கல்வி ஆண்டு அங்கீகாரம் பெறாத 1459 மழலையர் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தொடர்ந்து மற்ற அங்கீகாரம் பெறாத பள்ளிகளும் மூடப்படும். அதற்கான நடவடிக்கை எடுப்போம் என்றார்.இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, அரசே அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூட நடவடிக்கை எடுப்பதால் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. வழக்கை முடித்து வைக்கிறோம் என்று தீர்ப்பு கூறினர்.
Dear friends.... We got permission from chennai commisioner for giving petition to trb office or CM office related to the selection list of tet and mention that for giving preference to above 90 .we will assemble monday morning 9 am at valluvar kottam in chennai without fail my dear friends because this is our life. Contact no: 1)Mr.CHINNU-9942320011 2)Mrs.SUDHA-8883095696
ReplyDelete