மொழியுணர்வை வளர்ப்போம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2014

மொழியுணர்வை வளர்ப்போம்.

 "மொழி" மனித இனத்திற்கு மட்டுமே உரித்தான, பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட, பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட, அவ்வபோது மாற்றத்திற்கு உட்படும் மனித உணர்வுகளை,உணர்ச்சிகளை,சிந்தனையை வெளிப்படுத்தும் ஒரு கருவி.

ஒரு மாணவன் நன்றாக படிக்கிறான்  என்றால் அவன் நிச்சயம் அவன் தன் தாய் மொழியில் சிறப்பான அறிவை பெற்றிருக்கிறான் என்று பொருள்.

உதாரணமாக அறிவியலில் மின்னூட்டம்,மின்னோட்டம் என்பனவற்றின் வரையறைகளை படிக்கும் போது தாய் மொழியறிவு  மிகுந்த மாணவன்  மின்னூட்டம்=மின்+ஊட்டம், மின்னோட்டம்=மின்+ஓட்டம் எனப் பிரித்துப் படித்து மிக எளிதாக புரிந்து கொள்வான்.ஆனால் மொழியறிவு குறைந்த ஒருவன் "மின்னூட்டம் என்றால் என்ன?"  என்ற கேள்விக்கு மின்னோட்டத்திற்கான பதிலை எழுதுவான்.

தாய் மொழியறிவில் சிறந்திருந்தால்  மட்டுமே நல்ல கவிஞாகவும், அறிவியலறிஞகவும் மற்றும் நல்ல சிந்தனையாளாராகவும் திகழ முடியும்.

இந்த உலகத்தில் இதுவரை பிறந்த அறிவாளிகளிலேயே மிகச் சிறந்த அறிவாளி யார்  என்று தேடும் பொழுது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அகப்படுகிறார்.அவருக்கு மிகச்சிறந்த மொழியறிவு இருந்திருக்கக் கூடும்.அதனால்தான் தன் கற்பனையாலே பிரபஞ்ச ரகசியங்கள் பலவற்றை வெளிக் கொணர்ந்தார்.கார்ல் மார்க்ஸின் சிந்தனை வளார்ந்ததும் மொழியறிவு வளர்ச்சியின் உட்சத்தின் வெளிப்பாடுதான்.

சுதந்திர தினமாகிய இன்று  வெறுமனே வழக்கம் போல்  சுதந்திர தினப் போராட்ட வீரர்களை நினைவூட்டினால் போதாது.அவர்களின் உண்மையான வீரத்தை,தியாகத்தை மாணவர்களுக்குக் கொண்டு செல்ல, மாணவர்கள் புரிந்து கொள்ள அவர்களுக்கு தாய் மொழியின் முக்கியதுவத்தை உணர்த்த முயற்சி செய்ய வேண்டும்.

"தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்  
இந்த ஜகத்தினை அழித்திடுவோம் "

என்று பாரதியார் பாடியிருப்பார்.இந்த வரிகள் மொழியறிவு மிகுந்த ஒருவன் படிக்கும் பொழுது மனதில் ஒரு எழிச்சி ஏற்படும்,பாரதியின் மீது காதல் ஏற்படும்.அவனது மனதில் இந்த வரிகள்  என்றும் நிலையாக நின்று போகும்.மொழியறிவு குறைந்த ஒருவன் படிக்கும் பொழுது அதை மனனம் செய்துகொண்டிருப்பான்.

அண்மையில் "சுதந்திர போராட்ட வீரர்களிலேயே உங்களிடம் அதிக தாக்கத்தை உண்டு பண்ணியவர் யார்?"  என்ற கேள்வி இணையதளம் ஒன்றின் மூலம் கேட்கப் பட்டது.அதில் காந்தி,நேரு,நேதாஜி,பகத்சிங் போன்றோரின் பெயர் இடம்பெற்றிருந்தது.சுதந்திர யுத்தத்தில் அவர்கள் அணைவரும் வெற்றி பெற்றாலும் இந்த யுத்தத்தின் இறுதியில் யார் வென்றது தெரியுமா? பகத் சிங்.

சுதந்திரத்திற்காக விரல்விட்டு எண்ணுமளவிலே அவனது செயல்பாடுகள் இருந்திருக்கலாம்.ஆனால் அந்த ஒரு சில செயல்பாடும் மிக வீரமானதாக இருந்ததே இணையதளத்தில் இப்போது வென்றிருப்பதற்கு  காரணம்.

                                                           


 சேலத்திலிருந்து  சென்னை செல்ல பணமில்லாத காரணத்தினால் கழிவறையில் பதுங்கி சென்ற, சென்னையில் வயிற்றுப் பசிக்காக "watchman" எனப்படும் காவலாளியாக வேலை பார்த்த திரு கருணாநிதி அவர்கள் நம் தமிழகத்தை  5 முறை  ஆண்டிருக்கிறார் என்றால் அவருக்கிருந்த,அவருக்கிருகின்ற முதன்மையான தகுதி மொழியறிவு மட்டுமே.

வள்ளுவனும் கம்பனும் இளங்கோவனும்  இன்று நம் தமிழ்ச் சமுதாயத்தில் மிகப் பெரிய அளவில் கொலோச்சிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் பல்துறை அறிவு பெற்றவர்கள் என்பதால் மட்டுமல்ல,அதை மிக உயர்ந்த தரத்தில் வெளிப் படுத்தியதே காரணம்.காதல்,காமம்,நீதி,அராசாட்சி,ஒழுக்கம் என இவர்கள் எந்த துறையையும் ஒதுக்கவில்லை.அவர்கள் அந்த துறை சார்ந்த அறிவை பெற்றிருந்ததோடு தனக்குத் தெரிந்ததை கொஞ்சம் கூட பிசறாமல் பிழையில்லாமல் தன் எழுத்தின் மூலம் வெளிப்படுத்தக் கூடிய மொழியறிவை பெற்றிருந்தார்கள் என்பதே உண்மை.

"தமிழுக்கு அமுதென்று பேர்  
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் 
உயிருக்கு நேர் உயிருக்கு நேர்!"

"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் 
மங்காத தமிழென்று சங்கே முழங்கு...."

-பாரதிதாசன்

உலகில் வேறெந்த மொழியிலும் அமிழ்தம் என்பதற்கு இணையான  சொல்லோ அல்லது அமிழ்தம் என்று பொருள் படும் வகையில் சொல்லோ  இருப்பதாக தெரியவில்லை.ஆனால் உலகிலேயே அமிழ்தம் என்று  ஒரு பொருள் இருக்கிறது,அதை உண்டால் மரணமே ஏற்படாது என்றும்,அந்த அமிழ்தத்திற்கு இணையான மொழி எங்கள் தமிழ் மொழி என்றும் உருவாகப் படுத்தி பெருமையடைந்த மொழி நம் தமிழ் மொழியாகத்தான் இருக்கும். அதாவது அமிழ்தத்தை உண்டால் எப்படி மரணமேற்படாதோ அப்படியே  தமிழை கற்றவனுக்கும் மரணமேற்படாது என்றார் பாரதிதாசன்.

இங்கு "கற்றவன்" என்பதற்கு "தமிழ்ப்புலவன்" என்று பொருள். உண்மைதானே! கம்பனும் வள்ளுவனும்,பாரதியும் செத்ததுண்டா? இந்த உலகம் அழியும் வரையில், தமிழ் தன்னுடைய இறுதி மூச்சை இழக்கும் வரையில் அவர்களும்  வாழ்வார்கள்.

அதனால் உண்மையான சுதந்திர தினத்தை  கொண்டாட வேண்டுமென்றால்,சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை கொஞ்சம் கூட சிதறாமல் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டுமென்றால் அவர்களுக்கு முதலில் மொழியின் முக்கியதுவத்தை உணர்த்த வேண்டும்.

அவர்கள் மொழியின் இன்பத்தை சுவைக்கக் கற்றுக் கொண்டால் பிறர் துணையின்றி தானாகவே வீரியம் மிக்கவர்களாக மாறுவார்கள. அதுவே உண்மையான சுந்திர தினத்தை கொண்டாடுவதாகவும்,சுதந்திர நாட்டில் சுதந்திரமாக செயல்படவும் வழிவகுக்கும்.

சுதந்திர தினமாகிய இன்று  தலைப்பில் "சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்" என்ற வாக்கியம்  இடம் பெறுவதற்கு பதில் "மொழியுணர்வை வளர்ப்போம்." என்ற வாக்கியம் இடம் பெற்றிருறுப்பதற்கு இதுதான் காரணம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
மணியரசன் (armaniyarasan@gmail.com)

89 comments:

  1. கண்டிப்பாக மொழியுணர்வு மற்றும் நாட்டுப்பற்று ஏற்படுத்திய நண்பர் மணியரசன் சார்க்கு நன்றி சுகந்திர தின வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. All friends sorry naan yen ippadi solluren ninaikathnga kandippa second list varathungo yannu poi Jai barthiyedam kelunggo case mela case pottikittu yallathiyum thudiviitu case poda vaikeran ithanala unnmaya TRB rombave absetaga ullanar poi rajabarathi kellunga one sollern kelunga intha rajabarathiyala unga ellatthkkum velai kidaipathu kastame

    ReplyDelete
    Replies
    1. Hai suresh sir 2 nd list cunfirm varum aanal Rajabarathi & group irukara varaikum 2nd líst delay aagum sir.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Maniyarasan sir paper1 pathi ethaavathu thagaval therinthal sollungal

    ReplyDelete
    Replies
    1. தெரிந்தால் கண்டிப்பாக எழுதுகிறேன் madam

      Delete
    2. மணி சார் நான் B.ED JOINT பண்ணலாம்னு இருக்கேன் BUT பேப்பர் 1 ல நல்ல wt உள்ளது 70.94.SO JOINT பண்ணலாமா இல்ல போஸ்டிங் போட்ட பிறகு JOINT பண்ணலாமா ?

      Delete
    3. அண்ணா பிறந்த நாள் அன்று (1 5.9.2014)cm அம்மா கையால் பணி நியமன ஆணை வழங்க படும் என்ற செய்தி உண்மையா சார்

      Delete
    4. Palani M sir,

      மேற்கண்ட கேள்விகளுக்கு காலச்சூழல் பொறுத்துதான் முடிவு அமையும்.

      Delete
  6. Dear friends.... We got permission from chennai commisioner for giving petition to trb office or CM office related to the selection list of tet and mention that for giving preference to above 90 .we will assemble monday morning 9 am at valluvar kottam in chennai without fail my dear friends because this is our life. Contact no: 1)Mr.CHINNU-9942320011 2)Mrs.SUDHA-8883095696

    ReplyDelete
    Replies
    1. Ramasamy Rajabarathi group pa nee above 90 friends ivankala nambathinka intha go 71 method Rajabarathi &group m than karanam Rajabarathi pondatiku job kedaikalayam athan ippa vera oru go kondu vara group form pandrar idiot rajabarathi ozhika rajabarathi &group.

      Delete
    2. ABOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......

      இதுவரை நடந்தது
      Answer key - Revised Answer key
      Cv list - Revised Cv list

      இதுவும் நடக்கும்
      Selection list - Revised Selection list

      * தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.

      தமிழகம் முழுவதும் சுமார் 500 -1000 ஆசிரியர்கள் வழக்கில் இணைய உள்ளனர் என்பது வழக்கை மேலும் வலுபடுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது .

      வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
      உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.

      சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
      * TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்

      * வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
      சேம்பர் எண் : 222
      *வழக்கறிஞர் திரு .சங்கரன்
      சேம்பர் எண்: 354
      * வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
      * வழக்கறிஞர் திரு .நமோ.நாராயணன்

      மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....
      நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
      திரு. கருப்பையா 9942342608.

      Delete
  7. Dear Maniarasan,

    Dear Maniarasan ,
    Some candidates come under the Tamil Preference certificate
    Eventhough they bornbefore 1982.Implementation of Tamil medium by G.o is 2000-2001
    the Government of Tamil Nadu passed G.O.Ms.No.117 (School Education C2 Department) dated 3.5.1999 and the English translation of the said Government Order, as furnished by the State of Tamil Nadu is as under:
    "GOVERNMENT OF TAMIL NADU
    ABSTRACT
    Education-Implementation of Tamil Medium of Instruction from Nursery to Higher Education Level-Constitution of Committee-Orders issued.
    School Education (C2) Department
    Orders were issued in the G.O. read above that these orders will take effect from the next academic year i.e. 2000-2001
    introduction of Tamil Medium of Instruction in the Departments of Higher Education, such as Medical. Engineering, Law and Technologies
    As the text books in Tamil are already available/in the stage of introduction in all departments of Higher Education
    Kindly think ,how can the below candidates got the preference certificates.
    Name Reg.No Exam Centre Community DOB Weightage
    Mahalakshmi.N 13TE50201056 Tanjavore BC 11.07.72 56.38
    Leela.M 13TE20209803 Madurai BC 30.05.74 61.77
    Sivasankari.G 13TE48203161 Pattukkottai BC 05.11.77 65.96
    Kokilapriya.K 13TE25200176 Tirupur BC 09.06.78 60.98
    Ashok Kumar.K 13TE49205853 BC 09.06.81 58.93
    Selvarani.S 13TE63204072 Chennai MBC 02.03.72 57.05
    Radha.V 13TE34212078 Dharmapuri MBC 25.06.73 59.44
    Meenakshi.N 13TE00295131 MBC 14.03.74 59.59
    Meena.D 13TE54204397 Cuddalore MBC 02.12.79 60.62
    Govindaraj.M 13TE 34215029 Dharmapuri MBC 30.05.81 60.29
    Tamilarasi.M 13TE00305221 MBC 27.2.82 59.83
    Murugesan.S 13TE34214313 Dharmapuri SC 03.06.72 53.67
    Sureshkumar.R 13TE30201223 Sangagiridurgam SC 18.05.78 57.15
    Padma.A 13TE50201157 SC 15.05.79 58.89.

    Yesterday I asked the manonmaniam Sundaranar University Asst.Registrar. Manonmaniam University had a B.ED recognition for English Medium only, there is no tamil medium eventhough they issued books ,lectured & exam also in tamil medium . They told us the welfare of the students only we lectured in Tamil medium .Science Teachin book is written by Ex. Manonmaniam Sundaranar University Registrar Mr.S.Packiam .

    ReplyDelete
    Replies
    1. Dear Perumal Ramasamy, Please feel free to contact me
      selvankl@gmail.com / 09742267262

      Delete
    2. நீங்கள் குறிப்பிடுவது உண்மையாக இருக்கலாம் sir, ஆனால் அதற்குத் தீர்வு கிடைக்க நம்மால் என்ன செய்ய முடியும்?

      வழக்குத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை.if you are affected by this, you go ahead.

      Delete
    3. நாம் நினைப்பது போல 5% relaxation ல வந்தவுங்க ரொம்பபேர் select ஆகவில்லை SC, ST யில் அதுவும் ஆங்கிலம், வரலாறு பாட பிரிவுக்கு 2% உதவி மற்ற படி அனைவரும் 90 க்கு மேல் அதுவும் அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு தான் இது வாய்ப்பு . select. ஆகாமல் போனது நமக்கு மிகவும் வருத்தம் என்ன செய்வது நாம் 8 மாதம் wait பண்ணியதால் மிகவும் சோகம். இதற்கு யார் ஆறுதல் கூறினாலும் நம்மை தேற்ற முடியாது. உண்மையாகவே மதிப்பிற்கு உரிய ஐயா திரு நாகமுத்து அவர்களின் scientific formula மிக சிறந்த தீர்ப்பு அதைத்தான் TRB பின்பற்றி உள்ளன. நாம் select ஆகாத்து. நமது TET மதிப்பெண் பற்றாக்குறை அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு படிக்க தொடங்குவோம் .. வீணாக சோர்ந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் யாருக்கு லாபம் வாருங்கள் இனியாவது படிக்க தொடங்குவோம்.. வெற்றி பெறுவோம்

      Delete
  8. மணியரசன் கட்டுரையின் நோக்கம் நன்றாக இருப்பினும் சில அடிப்படையான குறைகளைச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

    முதலாவது மொழியின் மீதான தன் சொந்த முன்முடிவுகளுக்கேற்ப பொதுவான உண்மைகளை வளைக்க முயல்வது. ஐன்ஸ்டைன் மொழியில் விற்பன்னரல்ல. அவர் வாழ்க்கையை அதிகாரபூர்வமாக எழுதிவரும் ஜெர்மானிய வலைத்தளத்தின் இணைப்பும் அதில் அவரது மொழியறிவுக் குறைவைக்குறித்த குறிப்பும் கீழே;
    http://www.einstein-website.de/z_information/faq-e.html

    "He received especially good marks in maths and the natural sciences, some worse marks in the languages, in drawing and in sports"

    அறிவியலாளர்கள், சிந்தனையாளர்கள் சிறந்த மொழி வல்லுனர்களாக இருக்கவேண்டும் என்பது blunder என்று சொல்லக்கூடிய பெரும் தவறு. உண்மை இதற்கு நேரெதிரானது. இந்த விஷயத்தைக் கட்டுரையின் அடிநாதமாக அமைத்திருப்பதால் இக்குறைபாட்டைச் சுட்டவேண்டியுள்ளது. குறைந்தபட்ச வலைத்துழாவலாவது நிகழ்த்தி சில தகவல்களை உறுதி செய்துகொள்வது எந்த ஒரு கட்டுரையாளரின் அடிப்படைக்கடைமையும் கூட.

    இரண்டாவது, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோட முயல்வது. உதாரணமாக சுதந்திரபோராட்டத்தின் தியாகங்களை சிதறாமல் ஊட்டவேண்டுமானால் முதலில் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டும் என்று எழுதியுள்ளது. மொழியறிவற்ற பாமரர்களே தேசவிடுதலைக்காக அதிகம் முன்வந்தது நம் சுதந்திர வரலாறு. சுதந்திர உணர்வும் மொழியறிவும் எந்தத்தொடர்புமில்லாத விஷயங்கள். முன்னைக்காட்டிலும் இன்று மக்களின் சராசரி கல்வியறிவு அதிகம் ஆனால் தேசபக்தி குறைவு (முகனூல் தேசபக்திதான் மிகுந்துள்ளது). இது நடைமுறை உண்மை. இங்கே மொழியறிவுக்கு என்ன இடம்?! பசுவைப்பற்றி படித்துவிட்டுப்போன மாணவன் மரத்தைப்பற்றிய கேள்வி வந்தவுடன் பசுவைப்பற்றி தான் படித்தவற்றையெல்லாம் எழுதி, இப்படியாபட்ட பசுவை இந்த மரத்தில்தான் கட்டுவார்கள் என்று முடிச்சுபோட்ட கதைதான் ஞாபகம் வந்தது.

    கடைசியாக ஒன்று. மின்+ஊட்டம் என்று மொழியறிவினால் புரிந்துகொள்வது 'என்றால் என்ன?' என்று காலம்காலமாகக் கேட்கப்பட்டுவரும் மனனம் செய்து மதிப்பெண்கள் குவிக்கும் முறைக்குத்தான் உதவும். மின்னூட்டத்தை உண்மையாகப் புரிந்துகொள்வதற்கும் மின்னூட்டத்தின் வரையறையை மொழியறிவின் உதவியால் சிறப்பாக மனதில் இருத்திக்கொண்டு மதிப்பெண்கள் குவிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை எதிர்கால ஆசிரியர்களாகிய நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது மிகவும் முக்கியம்.

    மணியரசன் தொடர்ந்து கட்டுரைகள் எழுதவேண்டும். ஆனால் மனம்போன போக்கில் எழுதாமல் கட்டுரைக்கான அடிப்படை உழைப்பைச்செலுத்தி நேர்த்தியாக எழுதிட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் இதைப் போன்ற ஒரு பதிலைத்தான் எதிர்பார்த்தேன்.மிக நீண்ட நாட்களுக்குப் பின்(திரு அசோக் குமார் ) எனக்கு ஒரு நண்பர் கிடைத்திருக்கிறார்.

      ஐன்ஸ்டைன் மொழி விற்பன்னர் அல்லர்.உண்மைதான்.அவரது சம காலத்தில் வாழ்ந்த வங்கத்து தாகூர் போல், தமிழகத்து பாரதி போல் அவர் மொழியை மட்டுமே மையமாக வைத்து வரலாற்றில் இடம் பெறவில்லை.அறிவியலை மையமாக வைத்து, பிரபஞ்சத்தின் சில ரகசியங்களை யாரும் எதிர்பார்க்காத வேளையில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்.

      முதலில் அவரது நிறை ஆற்றல் சமன் பாட்டை எடுத்துக் கொள்வோம்.

      E=MC2(Square) இந்த சமன்பாட்டை உருவாக்குவதற்கு முன் ஐன்ஸ்டைன் நிறை, ஆற்றல்,வெற்றிடத்தில் ஒளியின் வேகம் போன்றவை குறித்த தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.அதற்கு மொழிதான் உதவுமேயன்றி சமிக்ஞை(SIGNAL) உதாவது.உலகில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்தாலும் மனித இனம் மட்டுமே இந்த பிரபஞ்சஞ்சத்தின் மீதும், அதிலுல்லுள்ள மற்ற உயிருள்ள,உயிரற்ற பொருட்களின் மீது சொல்ல முடியாத அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.இவை யாவற்றிற்கும் காரணம் தன்னுடைய முன் சந்ததியினரின் அறிவு மொழியின் மூலமாக நன்றாக கவனியுங்கள் மொழியின் மூலமாக எடுத்துச் செல்லப்படுவதுதான் காரணம்.

      காய்ந்த நிலத்தில் இருக்கும் மீன்முட்டை ஒன்று மழை பொழிந்த உடன் உயிர் பெறுகிறது.உயிர் பெற்றத அடுத்த கணமே அது தண்ணீரில் நீந்தத் தொடங்குகிறது.அந்த மீன்குஞ்சு அவ்வாறு நீந்தத் தொடங்குவதற்குக் காரணம் அதனுடைய உள்ளுணர்வும்,அதனுடைய உடலமைப்பும்தான்.

      மனிதனும் இந்த உலகில் ஒரு உயிரினம்தான்.அவனுக்கும் பிற உயிரினங்களைப் போல் மரமுண்டு.ஆனால் அவன் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்புகிறான் என்றால் மீன்குஞ்சு செய்வது போல் உள்ளுணர்வு காரணம் அல்ல.மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து சேகரிக்கப் பட்டு வந்த அறிவை மொழியின் மூலம் நன்றாக கவனியுங்கள் மொழியின் மூலம் தானும் பெற்று அவற்றை மேலும் மெருகூட்டி விண்வெளி ஓடத்தை அனுப்புகிறான்.வெறும் உள்ளுணர்வினாலோ அல்லது சைகையினாலோ எந்த அறிவியல் சாகத்தையும் நிகழ்த்தி விட முடியாது.

      நீங்கள் குறிப்பிடுவது போல் ஐன்ஸ்டைன் மொழி விற்பன்னர் இல்லைதான். ஆனால் அவர் மொழியறிவை விட அறிவியல் சிந்தனை மிக கூடுதலாக கொண்டவர்.அவ்வளவுதான்.ஆனால் அவருக்கு கொஞ்சம் கூட மொழியறிவே இல்லை என்று சொல்லி விட முடியாது.

      இந்தியாவில் 10 வகுப்பில் ஆங்கிலத்தில் தோல்வி கண்ட ராமானுஜம் இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் மற்றவர்களுடன் தன்னுடைய கட்டுரையை விளக்கத் தொடங்கினார்.அப்படியானால் 10 ஆம் வகுப்பில் அவருக்கு ஆங்கில மொழியறிவை விட கணிதத்தின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது என்று பொருள்.

      தகவல் கல்வியாக வேண்டும்,கல்வி அறிவாக வேண்டும்,அறிவு ஞானமாக வெளிப்பட வேண்டும். இதுதான் மனிதனுக்குண்டான பகுத்தறிவின் படிநிலைகள்.

      இங்கு முதல் படிநிலையான தகவல் முதல் கடைசி படிநிலையான ஞானத்தை வெளிப்படுத்துவது வரை மனித இனத்தில் மொழியின் மூலமாகவே நடைபெறுகிறதேயன்றி வேறு எதன் மூலம் நடைபெறுகிறது? நீங்கள்தான் தெளிவு படுத்த வேண்டும்.

      இருங்கள் உங்களது கேள்விகளுக்கு நிறைய பதில் இருக்கிறது.அடுத்த பதிலில் எழுதுகிறேன்.

      Delete
    2. நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ரிச்சர்ட் பெய்ன்மனின் இந்தக் காணொளியைப் பாருங்கள். நாம் விவாதிக்கும் விஷயத்துக்கும் இதற்கும் தொடர்பிருக்கிறதாக நினைக்கிறீர்களா?
      http://youtu.be/05WS0WN7zMQ

      Delete
    3. நிச்சயமாக மொழி ஒரு கருவியாக செயல்பட்டு தலைமுறை தலைமுறையாக அறிவைக்கையளிக்கவும் மெருகூட்டவும் உதவியிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இங்கு விவாதப்பொருளான கட்டுரையின் பிரச்சனை என்னவெனில் ஒருவரின் மொழியறிவு மேம்பட மேம்பட அது அவரது தேசபக்தி முதல் விஞ்ஞான அறிவுவரை அனைதையும் பிரகாசிக்கச்செய்யும் என்ற correlation concept-ஐ வலியுறுத்துகிறது. அது பிழையானது என்பதைச் சுட்டிக்காட்டுவதே என் நோக்கம்.

      Delete
    4. நிச்சயமாக, ஒருவரின் மொழியறிவு மேம்பட மேம்பட அது அவரது தேசபக்தி முதல் விஞ்ஞான அறிவுவரை அனைதையும் பிரகாசிக்கச்செய்யும்.

      எப்படியெனில் நீங்கள் நினைப்பது போல் மொழியறிவு என்பது வெறுமனே குறிப்பிட்ட மொழியின் இலக்கணத்தை கற்பது மட்டுமல்ல.இலக்கணத்தை கற்பது மட்டுமே "மொழியறிவு" என்பதற்கான வரையறை என்றால் அது தவறு.

      5 ஆம் வகுப்பு மாணவனை விட 10 வகுப்பு மாணவன் திறமையான அறிவியல் கட்டுரை எழுதுகிறான் என்றால் அவனுக்கு மூளை வளர்ச்சியோடு மொழியறிவும் கூடுதலாக இருக்கிறது என்று பொருள்.

      என்னதான் ஒருவர் ஒரு சிறந்த ஞானியாக இருந்தாலும் (அவர் ஞானியாகவே மொழியறிவுத் தேவை) அவர் தான் ஒரு ஞானி என்று நிரூபிக்க சிறப்பான மொழியறிவால் மட்டுமே முடியும்.( உதாரணம்:பொன்னம்பல அடிகளார்)தனக்குத் தெரிந்ததை சிறப்பான மொழியில் எடுத்துக் கூறுபவரே இந்த உலகில் சிறப்பு பெறுகிறார்கள்.

      இன்றைய அறிவியல் நூலகள் யாவும் பிற மொழியிலிருந்து குறிப்பாக ஆங்கிலத்திலிருந்து அப்படியே தமிழுக்கு மொழிப் பெயர்க்கப் படுகிறது. அவ்வாறு மொழி பெயர்க்கும் ஆசிரியருக்கும் மொழிப் பெயர்த்த அந்த ஆங்கில கட்டுரையை படிக்கும் மாணவனுக்கும் மொழியறிவு என்பது மிக முக்கியம். சிறப்பான மொழியறிவு கொண்டவர் சிறப்பான முறையில் மொழி பெயர்ப்பார்.சுமாரான மொழியறிவு கொண்டவர் சுமாரான அளவிலே மொழிபெயர்ப்பு செய்வார்.அதே போல்தான் அதிக மொழியறிவு கொண்ட மாணவன் அந்த கட்டுரையை முழுமையாக புரிந்து கொள்வான். சுமாரான மொழியறிவு கொண்ட மாணவன் மனனம் செய்ய ஆரம்பித்து விடுவான்.

      எனக்கு ஓரளவு நல்ல மொழியறிவு இருப்பதனால்தான் நான் நினைப்பதை அப்படியே தெளிவு பட எழுத்துக்களாக மாற்றி உங்களுக்கு அனுப்புகிறேன்.அதே போல்தான் நீங்களும்.

      இந்தக் கட்டுரையை வேறு பலரும் படித்திருப்பார்கள்.ஆனால் அவர்கள் எல்லோரும் விமர்சிக்காமல் போனதற்கு (வேறு பல காரணம் இருந்தாலும்) மொழியறிவும் ஒரு காரணமாக இருக்கலாம்.நான் எழுதிய கட்டுரை படித்து அதை விமர்சிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது கூட உங்களுக்கும் மொழியறிவு சற்று அதிகம் என்பதால்தான்.சுமாரான மொழியறிவு கொண்ட ஒருவர் விமர்சிக்கத் தயங்குவார்.அப்படியே விமர்சனம் செய்ய நினைத்தாலும் அவர்கள் நினைப்பதை முழுமையாக வெளிப்படுத்திட முடியாது.

      அதனால்

      ஒருவரின் மொழியறிவு மேம்பட மேம்பட அது அவரது தேசபக்தி முதல் விஞ்ஞான அறிவுவரை அனைதையும் பிரகாசிக்கச்செய்யும்

      நீங்கள் குறிப்பிட்டுள்ள காணொளியை கண்டு அதை முழுமையாக புரிந்து கொள்ள எனக்கு சிறப்பான ஆங்கில மொழியறிவு மிக முக்கியம்.

      Delete
    5. Niyamana article
      Arthamulla kelvi
      Aalamana alluthamana badhilurai
      Vaazhga valamudan
      Iruvar sellum palligal valam perattum
      Enakku verumane sudhandira dhina vaalthu endru koorikolvadhil udanpadillai. Indraya soolalil manavanukku indian endra unarvu cricket match il india aadum pozhudhu mattume varugiradhi
      Avargalukku andha unarvai undakka valarkka MOZHI nichayamaga oru nalla ayudham......
      Thodarattum ungal iruvarin vaadhangal
      Natpu maramal
      Kalviseithiyin karppu maramal

      Delete
    6. மிக அழகான ,ஆழமான விவாதம் .

      Delete
    7. மிக அழகான ,ஆழமான விவாதம் .

      Delete
  9. Dear Maniarasan ,
    I got RTI letter from TRB,

    All questions should have asked from samacheer Book upto +2 only .

    There is no G.K .Question. All questions from the text book only.

    In psychology the answer within the age of 11-14 is coorect as the psychology syllabus . Legal Maturation is wrong. ( Govt Ans .Child Marriage is banned from the government the child has the reached the age of legal maturation that is 18 -----------wrong ).

    The books to be followed is , the date of publication and the followed the syllabus is before the date of TET Announcement only , that is Caldwell died in Kodaikanal is violated the rules & they inserted the answers in the outcoming books ---------------legally it is wrong answer .

    Think all the students after seven months they gave the answers through RTI . They are working very swift.

    In science the answer which can be solved is the correct answer from TRB through RTI , the answer average velocity they can not be solved so the answer is wrong . In Court rejected the answer because of Genius Expert Committee told Govt.Answer is correct.

    ReplyDelete
    Replies
    1. mr perumal can i talk to you? please mail ur number jegansaran@gmail.com or call me 8144170981

      Delete
  10. Dear friends.... We got permission from chennai commisioner for giving petition to trb office or CM office related to the selection list of tet and mention that for giving preference to above 90 .we will assemble monday morning 9 am at valluvar kottam in chennai without fail my dear friends because this is our life. Contact no: 1)Mr.CHINNU-9942320011 2)Mrs.SUDHA-8883095696 3) Mr. Selvaraj 09742267262

    ReplyDelete
  11. Ramasamy sir next tet ku padinka Rajabarathi ya nambi poratam case nu povathinka Rajabarathi avar wife ku job kedachita unkala kalati utturuvar because go 71 ku karanam Rajabarathi Ozika Rajabarathi & group.

    ReplyDelete
  12. செம்மொழியாம் தமிழ் மொழி.... தமிழை தரணியில் ஓங்கி உயர வைத்த தமிழ் நாயகன்.. செம்மொழி ஞாயிறு.. மள்ளர் இன வேந்தர்.. தேவநேய பாவணர் அவர்களை வணங்குவோம்... களப்போராளி.. ரா.அருள் தேவேந்திரன் நெல்லை.....

    ReplyDelete
  13. பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் போர்ப்படை தளபதியும் இந்தியாவின் முதல் தற்கொலைப்படை தளபதியுமான மாவீரன் சுந்தரலிங்கத்தையும் இந்நாளில் போற்றுவோம்....

    ReplyDelete
  14. Dear Muruga, Please mail me your contact number. selvankl@gmail.com

    ReplyDelete
  15. மொழியை வளர்ப்பவனும் ஜாதியை வளர்ப்பவனும் ஒன்றுதான் ஆரியன் சமஷ்கிரத்தை வளர்க்க முயர்ச்சிக்கிறான் திராவிடன் தமிழை வளர்க்கிறான்.பிறப்பால் தமிழனாக அமெரிக்க தமிழனுக்கூ தமிழறிவே கிடையாது ஏன் அவன் சீந்திக்கவில்லையா இல்லை வாழ்க்கையில் தான் உயரவில்லையா குண்டிசட்டியில் குதிரை ஓட்ட நினைப்பவன்தான் ஜாதியம் மொழிப்பற்று என்று பிதற்றுவான்.திரு மணியரசனுக்கு பிடிக்கவில்லை என்றால் கலைஞரை கக்கூசுடனும் காந்தியை வேறேதடுனூம் ஒப்பிடுவார் சமூதாய விடிவெள்ளியான பெரியாரையும் அண்ணாவையும் கலைஞரையும் கேவலமான வார்த்தைகளால்

    ReplyDelete
    Replies
    1. பவி அவர்களே,

      இந்தக் கட்டுரையின் கருத்தே உங்களுக்குப் புரியாமல் போனதால்தான் நீங்கள் இப்படியொரு பதிலை எழுதியிருக்கிறீர்கள்.பிறப்பால் தமிழனான அமெரிக்கன் ஆங்கிலத்தில் சிந்திக்கவும் மொழியறிவு மிக முக்கியம்.ஏனெனில் ஆங்கிலம் என்பதும் ஒரு மொழிதான்.

      நீங்கள் மொழியறிவில் சிறப்பு பெறுவது உத்தமம்.

      Delete
  16. திட்டாமல் திட்டக்கூடிய திறன் படைத்தவர் நம் மணியரசன் அவர்கள். மொழிதான் அனைத்தூக்கும் மூலக்காரணம் என்பது ஒரு ஆசிரியனாக கூறுவது தவறு ஒரு தமிழச்சிக்கு பிறந்த குழந்தையை பிறந்த உடனே அதனை ஜப்பானில் கொண்டு வளர்த்தால் அதன் தமிழ்மொழி பிரகாசிக்குமோ நிங்கள் கூறிய மீன் குஞ்சிக்காக கூறுகிறேன் தாங்கள் கல்வி உளவியியல் படித்துவிட்டுதானே வந்தீர்கள்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சிவானந்தம் அவர்களுக்கு எழுதிய பதிலின் ஒரு பகுதியை அப்படியே உங்களுக்கும் எழுதுகிறேன்.

      எனக்கு ஓரளவு நல்ல மொழியறிவு இருப்பதனால்தான் நான் நினைப்பதை அப்படியே தெளிவு பட எழுத்துக்களாக மாற்றி உங்களுக்கு அனுப்புகிறேன்.அதே போல்தான் நீங்களும்.

      இந்தக் கட்டுரையை வேறு பலரும் படித்திருப்பார்கள்.ஆனால் அவர்கள் எல்லோரும் விமர்சிக்காமல் போனதற்கு (வேறு பல காரணம் இருந்தாலும்) மொழியறிவும் ஒரு காரணமாக இருக்கலாம்.நான் எழுதிய கட்டுரை படித்து அதை விமர்சிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது கூட உங்களுக்கும் மொழியறிவு சற்று அதிகம் என்பதால்தான்.சுமாரான மொழியறிவு கொண்ட ஒருவர் விமர்சிக்கத் தயங்குவார்.அப்படியே விமர்சனம் செய்ய நினைத்தாலும் அவர்கள் நினைப்பதை முழுமையாக வெளிப்படுத்திட முடியாது.

      நீங்கள் இரண்டாம் வகையா நண்பர் திரு பவி அவர்களே?

      நீங்கள் என் நலம் விரும்பி என்பதை கடந்த கால உங்களின் பதிவுகள் மூலம் அறிந்து கொண்டேன்.

      ஆயினும் ஏதுவாக இருந்தாலும் pavi என்ற பெயரிலேயே உங்கள் விமர்சனத்தை எழுத வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.வழக்கம் பிற ID களிலிருந்து பதில் எழுதக் கூடாது.

      Delete
    2. Language knowledge is important for everyone. But someone has more knowledge in language can apply for useful things do not take more head weight. Its my personal opinion especially not for you Mr. maniyarasan ranganathan

      Delete
    3. Mr.Selvaraj Ramasamy,

      what do you mean by your sentence that Its my personal opinion especially not for you Mr. maniyarasan ranganathan?

      Delete
    4. If I am not mention here you will going start an article to touch myself. My comment is not correct you leave it that. I am not hit you. Already i am very upset. Eagerly I am waiting for any changes.

      Delete
    5. திரு Selvaraj Ramasamy,

      உங்களுக்கு ஆங்கிலத்தில் சிக்கல் இருந்தால் தமிழில் கூட எழுதலாம்.

      "If I am not mention here you will going start an article to touch myself"

      " I am not hit you"

      என்ற வாக்கியங்களுக்கு முழுமையான பொருள் புரியவில்லை.

      நீங்கள் upset ஆக இருந்தால் நான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? upset ஆக உள்ள நீங்கள் ஏன் தவறான ஆங்கிலத்தில் எனக்கு பதிலெழுத வேண்டும்?

      தவறை சுட்டிக் காட்டுவதும் ஆசிரியரின் முக்கியமான கடமை.அப்படி சுட்டிக் காட்டுவது தலைக்கனம் அல்ல.ஒரு வேலை தவறிணை சுட்டிக்காட்டுவது மாணவர்களோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களா?

      Delete
    6. If you are not understand that is not my problem. Better you can check with somebody they can tell that correct meaning. I can understand I put to in between( going start). No other mistake Mr. maniyarasan ranganathan. Thanks for your finding the error. I do not want to go for till 3.30am next day. Bye.

      Delete
    7. ஆங்கிலத்தில் சிறு இலக்கண பிழை செய்தாலும் அதன் பொருள் புரியாமல் போய்விடும் mr Selvaraj Ramasamy.

      " I am not hit you" அல்லது i did or do not hit you என்று எழுதியிருந்தால் பொருள் படும்.

      "If I am not mention here you will going start an article to touch myself" என்பதன் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது உங்களுக்கு மட்டும்தான் தெரியும்.

      Delete
    8. My answer is there @ 2014 at 4:07 PM

      Yesterday Someone
      Today me
      Tomorrow Who?

      Its not rhyme.

      Delete
    9. திரு செல்வராஜ் ராமசாமி,

      இந்த காற் புள்ளி, அரைப்புள்ளி இதைப் பற்றி ஏதாவது தெரிந்து கொண்டு phrase அமைக்க முற்படுங்கள்.பிழையே இல்லை என்று சொன்னீர்கள் பின் TO விடுபட்டு போனது என்று சொல்கிறீர்கள்.

      i am not hit you என்பது சரியான வாக்கியம் என்பது உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்த பாடம் என்பது தெரியவில்லை.நான் கீழே தவறை சுட்டிக் காட்டியும் அது தவறில்லை என்று மறு பதில் வேறு.

      "Yesterday Someone
      Today me
      Tomorrow Who?" என்று வேறு இன்னொரு பதில்.கல்விச்செய்தியில் நூற்றுக் கணக்கானவர்கள் comments எழுதுகிறார்கள்.நான் இன்றைக்குத்தான் Selvaraj Ramasamy என்ற பெயரைப் பார்க்கிறேன்.அதுவும் எனக்கு நீங்களாகவே பதில் எழுதியிருப்பதான் மூலமாக...

      இவ்வளவு பயம் உணர்வு கொண்ட நீங்கள் எதற்காக தேவையின்றி நீங்களாகவே முன் வந்து எனக்கு பதிலெழுத வேண்டும்?

      உங்களுக்கும் அதைத்தான் சொல்கிறேன் Selvaraj Ramasamy நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள்.நான் என் வழியில் செல்கிறேன்.

      Delete
    10. இதுபோல் ஆரோக்கியமான போட்டி இருந்தால் நன்று திரு மணியரசன் சார் அவர்களே உண்மையில் உங்கள் விவாதம் நன்றாக இருக்கிறது நன்றி சார் முதலில் இங்கு விவாதம் செய்யும நபர்கள் புரிந்து கொள்ளவேண்டியது அனைவருக்கும் ஒரு ஒரு கருத்து தங்கள் கருத்தில் இருந்து பின் வாங்காமல் இருப்பது இது இப்படியே ஆரோக்கியமான விவாதமாக இருப்பது நன்று மேலும் மணி சார் இவ்வாறு எழுதும் கருத்துக்ளை ஆதரிக்காவிட்டாலும் யாரும் அறிவாளிகள் போல் மிகைப்படுத்தி கருத்து தெரிவிக்க வேண்டாம் எல்லாம் தெரிந்தவனும் இல்லை எதுவும் தெரியாதவனும் இல்லை என்பதை அனைவரும் மனதில் புரிந்து கொண்டு செயல்படுங்கள்

      Delete
  17. நாம் நினைப்பது போல 5% relaxation ல வந்தவுங்க ரொம்பபேர் select ஆகவில்லை SC, ST யில் அதுவும் ஆங்கிலம், வரலாறு பாட பிரிவுக்கு 2% உதவி மற்ற படி அனைவரும் 90 க்கு மேல் அதுவும் அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு தான் இது வாய்ப்பு . select. ஆகாமல் போனது நமக்கு மிகவும் வருத்தம் என்ன செய்வது நாம் 8 மாதம் wait பண்ணியதால் மிகவும் சோகம். இதற்கு யார் ஆறுதல் கூறினாலும் நம்மை தேற்ற முடியாது. உண்மையாகவே மதிப்பிற்கு உரிய ஐயா திரு நாகமுத்து அவர்களின் scientific formula மிக சிறந்த தீர்ப்பு அதைத்தான் TRB பின்பற்றி உள்ளன. நாம் select ஆகாத்து. நமது TET மதிப்பெண் பற்றாக்குறை அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு படிக்க தொடங்குவோம் .. வீணாக சோர்ந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் யாருக்கு லாபம் வாருங்கள் இனியாவது படிக்க தொடங்குவோம்.. வெற்றி பெறுவோம்

    ReplyDelete
  18. இதுவரை நடந்தது
    Answer key - Revised Answer key
    Cv list - Revised Cv list

    இதுவும் நடக்கும்
    Selection list - Revised Selection list

    ReplyDelete
  19. Mozhi enpathu veru
    sindhanai eboathu veru
    irandum ondrodu ondru
    thodarpudaiana
    kakai kuruvikum mozhi undu
    kadavulal padaikapata
    ovoru uyiranthukum
    mozhi undu
    ela uyrinakalukum pothuvanathu udal mozhi ( body language)
    mozhi arivukum
    thesa pakthikum thodarpilai
    daily paper pathalay therium
    padikathavanai vida
    padithavan than neraya thavarilaikiran
    padikathavan ku satathirkum
    sathiyarthirkum payam
    padithavanuku satathil irunthu thapipathu therium
    so mozhi kum thesa pakthikum thodarpu ilai
    enpathu enudaya thalmaiana karuthu nanpargalay

    ReplyDelete
    Replies
    1. திரு அலெக்ஸ்பாண்டியன்,

      மொழி என்பது வேறு சிந்தனை என்பது வேறுதான்.ஆனால் மொழியின்றி சிந்திக்க முடியாது.

      சிந்தனை மனிதனுக்கு மட்டுமே உரியது.மொழியும் அப்படிதான்.

      காக்கைக் குருவிகளுக்கு உடல் மொழியுண்டுதான்.ஆனால் அந்த உடல்மொழி கொண்டு சிந்தனை செய்ய முடியாது.அப்படி சிந்தனை செய்ய முடியுமானால் சிங்கம்,யானை இன்று மனிதனுக்கு அடிமை பட்டு சர்க்கஸ் காட்டிக் கொண்டும் ,பல்லாக்கு தூக்கிக் கொண்டுமிருக்காது.உங்கள் வீட்டில் சிறு தானியம் கூட மிச்சமிருக்காது.புறாவை நீங்கள் சுடும் முன் அவை உங்களது மூளையை தனது மூக்கால்(அலகு) கொட்டித் தின்று விடும்.

      மொத்தத்தில் மனித இனமே இன்று உலகில் இருந்திருக்காது.

      சுவாரசியமாக இன்னும் நிறைய எழுதலாம்.ஆனால் எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது.

      மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் யாவும் உள்ளுணர்வால் செயல் படக்கூடியவை.

      Delete
  20. Mr maniarasan sir ungal karuthai parkum pothu enaku siripu than varugirathu
    inum science nandraga padiungal
    ella uyirangalum ull unarval seyalpadukindranava?
    uyirinangaluku brain undu
    dog 68 katalaigal varai napakam vaithukolum
    elephent 22 katalaigalai napakam vaithu kolum
    simpancy patri nan sola vendiathilai
    ungaluku doubt irunthal net la search panunga
    maslow theory mcgland theory bavlov theory
    and etc
    ull unarvu ela uyirinagalukum undu
    nam sila neram manasu solratha ketpom
    sila neram mind solratha ketpome
    athu pola than matra animals
    oru visayam purintghu kolungal
    sindhanaiai velipadutha mozhi arivu avasiyam
    mozhi arivukum thesa pakthi kum entha thodarpum ilai
    and thavarugali suti katinal etru kolungal
    athuvay nala thalaivanai uruvakum
    and inga vara elarukum gnanam undu
    seruku kudathu nanparay

    ReplyDelete
    Replies
    1. திரு அலெக்ஸ் பாண்டியன் sir,

      உங்களின் அறியாமை கண்டு பதிலெழுதவே வேண்டாம் என நினைத்தேன்.ஆனாலும் எழுதுகிறேன்.

      "mozhi arivukum thesa pakthi kum entha thodarpum ilai" என எழுதியுள்ளீர்கள்.

      அப்படியானால் நீங்கள் குறிப்பிடும் யானைக்கும் நாய்க்கும் தேசபக்தி உண்டா அலெக்ஸ் பாண்டியன்?

      மனிதனுக்கு அடுத்த படியாக 5 ஜீவன்களுக்கு மூளை வளர்ச்சி அதிகம் குறிப்பாக நிலத்தில் வாழும் உயிரினங்களில் யானை,சிம்பன்ஸி வகை குரங்கிற்கும் நீரில் வாழ்வனவற்றில் திமிங்கலம்,டால்பின் போன்றவற்றிற்கும் மூளை வளர்ச்சி மற்ற 5 அறிவு உயிரினங்களை விட அதிகமாக காணப்படுகிறது.

      நீங்கள் குறிப்பிட்டுள்ள நாய் இந்திய தேசத்திற்கு சொந்தம் என்பதால் அது இந்த தேசத்தின் மீது தேசப் பற்று கொண்டு இந்திய மக்களை கடிக்காதா? ஆல்து அதே நாயை அயல் நாட்டிற்கு எடுத்துச் சென்றால் நான் இந்திய தேசத்து நாய் இந்தியாவின் மீது மட்டுமே பற்று வைத்துள்ளேன்.அதனால் அமெரிக்க தேசமாகிய உங்களுக்கு திருடனைப் பிடிக்க உதவ மாட்டேன் என மறுக்குமா?

      உளவியலின் கற்றல் கோட்பாடுகளை தேசபக்திக்கு உதாரணமாக காட்டுவதிலேயே தெரிகிறது உங்கள் அறிவியல் அறிவு.

      தேசபக்தியைப் தெரியாத ஒருவனுக்கு தேசபக்தியை ஏற்படுத்த முயற்சி முற்படுவோமானால் அவன் முதலில் "தேசபக்தி" என்றால் என்ன? என்றுதான் முதலில் கேட்பான்.அங்கேயே ஆரம்பித்துவிடுகிறது மொழியறிவு.

      கல்லாத ஒருவனுக்கு மொழியறிவு ஓட்ட வேண்டுமானால் திரைப்பட வடிவில் காணொளி கொண்டு முயற்சி செய்யலாம்.ஆனாலும் அங்கும் அதில் பேசப்படும் வசனங்களை புரிந்து கொள்ள மொழியறிவு தேவை.

      அதிலும் சிறப்பான மொழியறிவு கொண்டவன் முழுமையாக புரிந்து கொண்டு இந்த தேசத்தின் மீது பற்று கொள்வான்.சுமாரான மொழியறிவு கொண்டவன் படம் நல்ல இருந்தது அல்லது சரியில்லை என்று அவனது மனநிலை அல்லது முன்னறிவு கொண்டு பதிலுரைப்பான்.

      நீங்கள் குறிப்பிடும் உடல் மொழியை கொண்டு ஒன்றும் செய்ய முட்டியாது.வேண்டுமானால் மண்டையை ஆட்டி ஆட்டிக் காட்டலாம் அல்லது குத்தாட்டம் போடலாம்.வேறுதுவும் செய்யமுடியாது.

      என் கட்டுரையின் கருத்தை புரிந்து கொள்ள முதலில் உங்களுக்குத்தான் மொழியறிவு புகட்ட வேண்டும்.

      எனெனினும் ஆரோக்கியமான விவாதத்திற்கு நன்றி.

      Delete
    2. "nam sila neram manasu solratha ketpom
      sila neram mind solratha ketpome
      athu pola than matra animals"

      என்று எழுதியிருக்கிறீர்கள்.

      முதலில் நீங்கள் மனதை மூலையோடு ஒப்பிட்டுருப்பதே தவறு sir.

      மூளை என்ற ஒரு உறுப்பை கற்பனை ஒன்றோடு ஒப்பிடுவது தவறு.மனித மூளை மனிதனின் தலைப் பகுதியில் மிக கடினமான மண்டை ஒட்டினைக் கொண்டு பாதுகாக்கப் படுகிறது.ஆனால் நீங்கள் குறிப்பிடும் மனது எங்கே இருக்கிறது நண்பரே?

      நீங்கள் அறிவியலையும் உளவியலையும் ஆழமாகக் கற்க வேண்டும்.

      மனது என்பது நமது அனுபவத்தின் ஒட்டுமொத்தத் தொகுப்பு அவ்வளுவுதான்.அதுவும் மூளையின் புறணி பகுதியில்தான் சேமித்து வைக்கப் படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

      தவறுகளை சுட்டிக் காட்டினால் நான் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன் நண்பரே!

      கட்டுரை என்று ஒன்று நிச்சயம் அது விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டும்.அது பிரபல எழுத்தாளர்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

      அப்படி வரும் விமர்சனத்திற்கு விளக்கம் அளிப்பதில்தான் அந்த கட்டுரையாளனது வெற்றியே உள்ளது.மேலும் அப்பொழுதான் அந்தா கட்டுரையே முழுமையான விளக்கம் கொண்டதாய் மாறும்.

      ஆனால் உங்களது அனைத்துக் கேள்விகளும் இன்னும் கடினமானதாக எனக்கு பதிலெழுத தெரியாத அளவிற்கு அமைந்தால் நான் மகிழ்வேன்.மேலும் என்னுடைய தவறிணையும் ஏற்றுக் கொள்வேன்.

      Delete
    3. Moliarivukum ....thesapakthikkum thodarpillaya.??????
      Mani sir ..
      Ivalavu koorathevai illai ..
      Bharathi ...yentra oru varthai pothum ..
      Viggana thodarpukku namathu Abthulkalam ,pothum..

      Delete
    4. இந்த கட்டுரையே அவர்களை மனதில் வைத்துதான் எழுதப் பட்டது madam.

      ஒரே வரியில் அவர்களைக் குறிப்பிட்டால் விவாதமே நடைபெறாது.பாரதி எப்போதும் என் ஆதர்சம்.

      thank you madam.

      Delete
  21. Atleast sando chinapa thevar produce pana old film parunga ilaina rama narayanan film parunga nanparay
    animals ku ul unarvu matumala katalaiku keelpadinthu nadakum arivum irukindrathu
    nanparay
    nan thangalai kayapadutha kooravilai
    nan maru padugindra karuthukal irandu
    1) mozhi arivukum thesa pakthikum thodarpu ilai
    2) animals ku ul unarval seyal padum and avaikaluku brain undu athaium use panum

    ReplyDelete
  22. Indru america naatin valarchiyil indiya ilangargalil moolaiye mukkiya pangu vahikkiradhu
    Anniyan vandhu adimai paduthinan
    Ivargal thaamagave sendru adimaipaduvadhI latchiyamaga vaithirukkirargal
    Karanam avargalukku ariviyal arivu kidaithirukkiradhu mozhi arivu ettavillai
    Nam mozhi endru ennubavane nam naadu endru ennuvan
    Enadhu maanavargalidam nan brain drain pattri pesadha naale illai. Nichayamaga mozhikkum naatu pattrukkum mukkiya thodarbhu undu
    Ethanai uravugal vandhalum en thai en thai mozhi en thainaadu endra unarvu melonga mozhi arivu mukkiyam.
    This is not a partiality
    It is just an identity
    Adhanaldhan mozhi paada puthagathil mattum dhesiya geethathin porulum thelivuraiyum kodukkapattuladhu

    ReplyDelete
  23. திரு அலெக்ஸ் பாண்டியன் sir,

    உங்களின் அறியாமை கண்டு பதிலெழுதவே வேண்டாம் என நினைத்தேன்.ஆனாலும் எழுதுகிறேன்.

    "mozhi arivukum thesa pakthi kum entha thodarpum ilai" என எழுதியுள்ளீர்கள்.

    அப்படியானால் நீங்கள் குறிப்பிடும் யானைக்கும் நாய்க்கும் தேசபக்தி உண்டா அலெக்ஸ் பாண்டியன்?

    மனிதனுக்கு அடுத்த படியாக 5 ஜீவன்களுக்கு மூளை வளர்ச்சி அதிகம் குறிப்பாக நிலத்தில் வாழும் உயிரினங்களில் யானை,சிம்பன்ஸி வகை குரங்கிற்கும் நீரில் வாழ்வனவற்றில் திமிங்கலம்,டால்பின் போன்றவற்றிற்கும் மூளை வளர்ச்சி மற்ற 5 அறிவு உயிரினங்களை விட அதிகமாக காணப்படுகிறது.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள நாய் இந்திய தேசத்திற்கு சொந்தம் என்பதால் அது இந்த தேசத்தின் மீது தேசப் பற்று கொண்டு இந்திய மக்களை கடிக்காதா? ஆல்து அதே நாயை அயல் நாட்டிற்கு எடுத்துச் சென்றால் நான் இந்திய தேசத்து நாய் இந்தியாவின் மீது மட்டுமே பற்று வைத்துள்ளேன்.அதனால் அமெரிக்க தேசமாகிய உங்களுக்கு திருடனைப் பிடிக்க உதவ மாட்டேன் என மறுக்குமா?

    உளவியலின் கற்றல் கோட்பாடுகளை தேசபக்திக்கு உதாரணமாக காட்டுவதிலேயே தெரிகிறது உங்கள் அறிவியல் அறிவு.

    தேசபக்தியைப் தெரியாத ஒருவனுக்கு தேசபக்தியை ஏற்படுத்த முயற்சி முற்படுவோமானால் அவன் முதலில் "தேசபக்தி" என்றால் என்ன? என்றுதான் முதலில் கேட்பான்.அங்கேயே ஆரம்பித்துவிடுகிறது மொழியறிவு.

    கல்லாத ஒருவனுக்கு மொழியறிவு ஓட்ட வேண்டுமானால் திரைப்பட வடிவில் காணொளி கொண்டு முயற்சி செய்யலாம்.ஆனாலும் அங்கும் அதில் பேசப்படும் வசனங்களை புரிந்து கொள்ள மொழியறிவு தேவை.

    அதிலும் சிறப்பான மொழியறிவு கொண்டவன் முழுமையாக புரிந்து கொண்டு இந்த தேசத்தின் மீது பற்று கொள்வான்.சுமாரான மொழியறிவு கொண்டவன் படம் நல்ல இருந்தது அல்லது சரியில்லை என்று அவனது மனநிலை அல்லது முன்னறிவு கொண்டு பதிலுரைப்பான்.

    நீங்கள் குறிப்பிடும் உடல் மொழியை கொண்டு ஒன்றும் செய்ய முட்டியாது.வேண்டுமானால் மண்டையை ஆட்டி ஆட்டிக் காட்டலாம் அல்லது குத்தாட்டம் போடலாம்.வேறுதுவும் செய்யமுடியாது.

    என் கட்டுரையின் கருத்தை புரிந்து கொள்ள முதலில் உங்களுக்குத்தான் மொழியறிவு புகட்ட வேண்டும்.

    எனெனினும் ஆரோக்கியமான விவாதத்திற்கு நன்றி.

    ReplyDelete
  24. Ayayaya siru pilaithanamaga pathil alikum ungalai enavendru nn solvathu
    ungalidam vivathithapathy thavaru nanparay
    thesathai indru vitru kondirupavargal palar
    mozhi arivu petravargalay
    thesa pakthi elupa
    mozhi arivu petra mamanithargal
    uthavinargal
    thesa pakthi veru
    mozhi arivu veru
    mozhi arivu nala aalumaiai tharum
    vivathathirku nandri
    i have the knowledge about the language
    neengal enaku mozhi arivu katru thara thevai ilai
    nan ungalidam katru kondathu
    ondru than
    aduthavar koorum karuthil thavarugalai suti kata kudathu
    and also thanks my friend
    enudaya ariamaiai suti katiyatharku nandri
    nan ariamalay irunthu vidugiraen
    ungaludaya arivu enaku vendam
    nandri nanparay

    ReplyDelete
    Replies
    1. என்ன அலெக்ஸ் sir,

      ஆயிரங்கணக்கில் வருகை புரியும் பார்வையாளருக்குத் தெரியும் யாருடைய பதில் சிறு பிள்ளை தானமாக இருக்கிறது என்று!

      நான்தான் நீங்கள் எழுதிய வரிகளை எடுத்தெழுதி அதற்கு தெளிவான விளக்கம் எழுதியுள்ளேன்.
      மீண்டும் அதே கேள்விகளா?

      "thesathai indru vitru kondirupavargal palar
      mozhi arivu petravargalay
      thesa pakthi elupa
      mozhi arivu petra mamanithargal
      uthavinargal" என்று எழுதியுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள படியே ஒருவர் தமது தேசத்தை விற்கத் துணைபுரிந்தார்கள் என்றால் அவருக்கேது தேசப் பற்று?

      மொழியுணர்வு கொண்ட அனைவரும் தேசப்பற்று கொண்டவர்கள் என நான் எங்கேயும் சொல்லவே இல்லை.நீங்களாகவே கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

      "i have the knowledge about the language" என்று நீங்கள் எழுதியிருப்பதிலேயே தெரிகிறது உங்களது knowledge பற்றி. இங்கே எதற்கு knowledge க்கு முன்பு "the" என்ற வார்த்தை வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா?

      சிந்தனை என்பது அறிவோடு தொடர்புடையது.அறிவு என்பது கல்வியோடு தொடர்புடையது.கல்வி என்பது மொழியொடு தொடர்புடையது.மொழியின்றி எதுவும் செய்ய முடியாது.அந்த மொழியறிவில் நான் சிறந்தவர்களாக விளங்கினால் சிறப்பான வெற்றி காணலாம்.

      அறிவின் வாயிலே மொழிதான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

      "nam sila neram manasu solratha ketpom
      sila neram mind solratha ketpome
      athu pola than matra animals"

      என்று எழுதியிருக்கிறீர்கள்.

      முதலில் நீங்கள் மனதை மூலையோடு ஒப்பிட்டுருப்பதே தவறு sir.

      மூளை என்ற ஒரு உறுப்பை கற்பனை ஒன்றோடு ஒப்பிடுவது தவறு.மனித மூளை மனிதனின் தலைப் பகுதியில் மிக கடினமான மண்டை ஒட்டினைக் கொண்டு பாதுகாக்கப் படுகிறது.ஆனால் நீங்கள் குறிப்பிடும் மனது எங்கே இருக்கிறது நண்பரே?

      நீங்கள் அறிவியலையும் உளவியலையும் ஆழமாகக் கற்க வேண்டும்.

      மனது என்பது நமது அனுபவத்தின் ஒட்டுமொத்தத் தொகுப்பு அவ்வளுவுதான்.அதுவும் மூளையின் புறணி பகுதியில்தான் சேமித்து வைக்கப் படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

      தவறுகளை சுட்டிக் காட்டினால் நான் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன் நண்பரே!

      கட்டுரை என்று ஒன்று நிச்சயம் அது விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டும்.அது பிரபல எழுத்தாளர்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

      அப்படி வரும் விமர்சனத்திற்கு விளக்கம் அளிப்பதில்தான் அந்த கட்டுரையாளனது வெற்றியே உள்ளது.மேலும் அப்பொழுதான் அந்தா கட்டுரையே முழுமையான விளக்கம் கொண்டதாய் மாறும்.

      ஆனால் உங்களது அனைத்துக் கேள்விகளும் இன்னும் கடினமானதாக எனக்கு பதிலெழுத தெரியாத அளவிற்கு அமைந்தால் நான் மகிழ்வேன்.மேலும் என்னுடைய தவறிணையும் ஏற்றுக் கொள்வேன்.

      தயவுசெய்து நீங்கள் கேட்கும் கேள்வியில் Logic இருக்கிறதா என்று யோசித்த பின்பு என்னிடம் கேளுங்கள்.

      Delete
  25. அன்புள்ள மணியரசன், நான் விடாப்பிடியாக மொழியின் எல்லைகளைக்குறித்து சொல்ல முயல்கையில் நீங்களும் விடாப்பிடியாக மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திவருகிறீர்கள். மொழியின் அவசியத்தையோ அதன் பயன்பாட்டையோ நான் சந்தேகிக்கவில்லை. முழுமையாகவே ஏற்றுக்கொண்டுவிடுகிறேன். ஆனால் மொழிக்கு ஓர் எல்லையுண்டு. ஓரளவுக்குமேல் அதுமேம்படுவதால் மற்ற துறைகளில் அதன் பிரதிபலிப்பு குறிப்பிடத்தக்க அளவில் ஏதுமிராது. நம்மால் ஓரளவுக்குத் தவறில்லாமல் பேச, எழுத முடிகிறது. நீங்கள் சொல்வதைப்புரிந்துகொள்கிறேன். நான் நினைப்பதை எழுதிவிடுகிறேன். அதற்குமேல் மொழியை வளப்படுத்தினால் சிறந்த மொழியியல் வல்லுனராகவோ பேச்சாளராகவோ ஆகலாமே தவிர மற்ற துறைகளில் பிரகாசிக்க இப்போதிருக்கும் மொழியறிவே நமக்குப்போதுமானது.

    மொழியால்தான் சிந்தனை செய்யமுடிகிறது என்பது உண்மை. ஆனால் கொஞ்சம் மேலோட்டமானது. ஐன்ஸ்டைனின் ஆய்வுக்கட்டுரைகள் வலைதளங்களில் கிடைக்கின்றன. முயற்சிசெய்துபாருங்கள். எந்த அளவுக்கு ஆங்கிலமும் கணிதமும் தெரிந்தாலும் அதைப்புரிந்துகொண்டுவிட இயலாது. மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு 'காட்சிக்கற்பனை' உலகில் அது அவரது மூளையால் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆகவே தனித்தனியாக அவரது சொற்களையும் சமன்பாடுகளையும் சராசரிகளான நாமோ நுண்ணறிவு மிக்க மற்ற அறிவியலாளர்களோ புரிந்துகொண்டுவிடமுடிந்தாலும் அவர் மனக்கண்ணால் கண்ட முடிவுகளைக்கூட 10ஆண்டுகள் கழித்து சோதனைகளால் மெய்ப்பித்தோ, பொய்ப்பித்தோதான் ஓரளவு 'புரிந்து'கொள்ள முடிந்தது.

    ராமானுஜனைக் குறிப்பிட்டிருந்தீர்கள். ராபர்ட் கனிகல் எழுதிய ராமானுஜத்தின் வாழ்க்கை, கணிதம் இரண்டையும் விளக்கும் The man who knew infinity என்ற புத்தகத்தை வாசித்திருக்கிறேன். கணித சவால்களைப்பற்றிய சிந்தனை வந்தவுடன் இரு கண்களின் கருவிழிகளும் மூக்கை நோக்கி squint ஆக, உடனே சடசடவென்று தீர்வை எழுதிவிடுவது அவர் வழக்கம். மொழிசெயல்படுவதெற்கெல்லாம் அங்கு அவகாசமே இல்லை. கடைசிவரை அது எப்படி நிகழ்கிறதென்று அவரால் விளக்கவியலவில்லை. அவர் சிறுவயதிலிருந்து வணங்கிய நாமகிரித்தாயார்தான் காரணம் என்று சொல்லிவிட்டார்.

    மொழியறிவுக்கு ஒரு threshold உண்டு. அதற்குமேல் அது மேம்பட்டால் அதனால் பயனேதுமில்லை. உதாரணமாக, 50மி.லி. விஷம் ஒருவரின் உயிரைக்குடிக்குமெனில் அது ஒரு threshold value. 10மி.லி. குமட்டலாம். 20மி.லி. மயக்கமுற வைக்கலாம். 40மி.லி. சில பாகங்களை செயலிழக்கச்செய்யலாம். ஆனால் 50மி.லி. க்குமேல் எவ்வளவு அதிகரிப்பினும் அதனால் பயனேதுமில்லை. அப்படியில்லையெனில் வாழும் மொழியியல் மேதை நோம் சாம்ஸ்கிதான் (Noam Chomsky) உலகத்திலேயே அனைத்துதுறைகளிலும் வல்லவராக இருப்பார். அவரளவுக்கு மொழியை ஆராய்ந்த சமகாலத்திய அறிஞர்கள் குறைவு. மொழி தன் எல்லையை அடையும் இடம்தான் ஞானத்தின் தொடக்கப்புள்ளியாக இருக்குமோ என்னவோ?

    ReplyDelete
    Replies
    1. மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு 'காட்சிக்கற்பனை' உலகில் அது அவரது மூளையால் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆகவே தனித்தனியாக அவரது சொற்களையும் சமன்பாடுகளையும் சராசரிகளான நாமோ நுண்ணறிவு மிக்க மற்ற அறிவியலாளர்களோ புரிந்துகொண்டுவிடமுடிந்தாலும் அவர் மனக்கண்ணால் கண்ட முடிவுகளைக்கூட 10ஆண்டுகள் கழித்து சோதனைகளால் மெய்ப்பித்தோ, பொய்ப்பித்தோதான் ஓரளவு 'புரிந்து'கொள்ள முடிந்தது."

      என்று நீங்கள் எழுதியிருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.உலகில் பல கண்டுபிடிப்புகள் நீங்கள் குறிப்பிட்டுள்ள 'காட்சிக்கற்பனை' என்ற முறையில்தான் நிகழ்ந்துள்ளது.அது ஆதிகால மனிதன் நெருப்பை கண்டறிந்தது முதல் நியூட்டன் புவியீர்ப்பு விசை கண்டறிந்தது, ராமன் ஒளி விளைவை கண்டறிந்தது கலிலியோவின் கண்டுபிடுப்புகள் எல்லாமே திடீரென நிகழ்ந்தவைதான்.

      ஆனால் கணித சமன்பாடுகளைத் தவிர மற்ற கண்டுபிடிப்புகள் திடீரென தனது மனக்கண்ணில் தோன்றுவதற்கு ஏதேனும் ஒரு நிகழ்வு காரணமாக இருந்திருக்கிறது.

      மரத்திலிருந்து பழம் தரையில் விழுந்ததைக் கண்ட சில மணித்துளிகளிலேயே நியூட்டன் பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்க வேண்டும் என்று உணர்ந்து விடுகிறார்.

      ஆனால் கனிதச் சமன்பாடுகள் அவர்களது மனக்கண்ணில் திடீரென தோன்றுவதற்கு காரணமான நிகழ்வு அல்லது அந்த குறிப்பிட்ட கண நேரத்திற்கு முன்பு அவர்களது சிந்தனை எதனோடு தொடர்பு கொண்டிருந்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் அல்லது மறந்து போய்விடும்.ஏனெனில் ஐன்ஸ்டைன் தனது வீட்டு முகவரியையே அடிக்கடி மறந்து விடுவாராம்.

      சிந்தனை என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.சிந்திக்கப்படப்படும் பொருளும் சிந்திப்பவரது அறிவும் அந்த குறிப்பிட்ட சிந்தனைக்கான கால நேரத்தை தீர்மானிக்கிறது.

      அதாவது ஐன்ஸ்டைன் ஒரே வினாடியில் E=MC2(Square) என்று எழுதியிருக்க முடியாது.E=MC2(Square) என்று அவர் எழுதுவதற்கு முன்பாக அவரது மூளை ஏதோ ஒன்றைக் குறித்து சிந்திருக்க வேண்டும்.அது நனவுநிலையாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.கனவு நிலையாகக் கூட இருக்கலாம்.அந்த நனவு அல்லது கனவு நிலையிலும் சிந்திக்க ஏதோ ஒன்று தேவை. அந்த ஏதோ ஒன்று மொழியறிவால்தான்(இலக்கணம் அன்று) ஏற்படும் .ஆனால் அவ்வாறு சிந்திக்க மொழியின் உட்ச பட்ச அறிவு வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை.இங்கு சிந்தனை என்பதே மொழி என்றாகி விடுகிறது.அதாவது E = mc2 என்றாவது போல சிந்தனை(அறிவு)=மொழி என்றாகி விடுகிறது.

      மொழியையும் அறிவையும் வேறுபடுத்தவே முடியாது. சிந்தனைதான் அறிவு,அறிவுதான் மொழி, மொழிதான் சிந்தனை.

      அதாவது இங்கு அறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள 6 வது அறிவை குறிப்பிடுகிறேன்.அந்த 6 வது அறிவுதான் மொழி.மொழியின் ஒரு கூறுதான் சிந்தனை.சிந்தனைதான் அறிவு. இது ஒரு உள்ளீடற்ற ஒரு புள்ளி.அந்த புள்ளியில் எது மொழி எது அறிவு எது சிந்தனை பிரிக்கவே முடியாது.அப்படிப் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தால் அங்கு அந்த புள்ளியே இருக்காது.வெற்றிடம் தான் மிஞ்சும்.

      நான் உலகிலுள்ள பல்வேறு மொழிகளின் தனமை குறித்து ஆராய விரும்பவில்லை.ஆனால் உலகிலுள்ள எந்த மொழியும் 6 வது அறிவின் வெளிப்பாடு.

      Delete
    2. "ஆனால் அவ்வாறு சிந்திக்க மொழியின் உட்ச பட்ச அறிவு வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை" என்றமைக்கு நன்றி. நாம் ஒரு புள்ளியில் சந்தித்துவிட்டோமென்றே நினைக்கிறேன்.
      இதையே வேறுவேறு வார்த்தைகளில் நானும் வலியுறுத்துகிறேன். ஆனால் இது உங்களின் "மொழியறிவு மேம்பட மேம்பட...." வரிகளுடன் முரண்படுவதுபோல் தோன்றுகிறது. உணர்ச்சிகரமான மன நிலையில் விஷயங்களைப் பொதுமைப்படுத்த முயலும்போது விளையும் பக்கவிளைவாக இதைப்பார்க்கிறேன்.

      நன்றி! Good night!!

      Delete
  26. இன்னொரு விஷயம். உங்கள் தடாலடியான சில வரிகள்தான் முதலில் என்னை எழுத உந்தியது. அதைக்குறிப்பிட மறந்துவிட்டேன்.

    அமிழ்தம் என்ற சொல்லுக்கு உலகிலேயே வேறெந்த மொழிகளிலும் இணையான வார்த்தை இருப்பதாகத்தெரியவில்லை என்றெல்லாம் உங்களால் கூசாமல் எப்படி எழுதமுடிகிறது? எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள்? குறைந்தபட்சம் elixir, elixir of life என்றெல்லாம் படித்திருப்பீர்களே?!

    "தாய் மொழியறிவில் சிறந்திருந்தால் மட்டுமே நல்ல கவிஞாகவும், அறிவியலறிஞகவும் மற்றும் நல்ல சிந்தனையாளாராகவும் திகழ முடியும்" என்பதெல்லாம் என்ன கூத்து? ஹார்வர்டில் பாடமெடுக்கும் பொருளாதார வல்லுனரான சுப்பிரமணிய சுவாமி தன் தாய்மொழியான தமிழில்பேசத் திணறுவதைக் கண்டதில்லையா? அமர்த்யா சென்னுக்கு பெங்காலியைவிட ஆங்கிலம்தான் வசதியாக இருக்கிறது சிந்திக்கவும், எழுதவும், நோபல் பரிசு வாங்கவும்.

    ReplyDelete
    Replies
    1. "ஹார்வர்டில் பாடமெடுக்கும் பொருளாதார வல்லுனரான சுப்பிரமணிய சுவாமி தன் தாய்மொழியான தமிழில்பேசத் திணறுவதைக் கண்டதில்லையா? அமர்த்யா சென்னுக்கு பெங்காலியைவிட ஆங்கிலம்தான் வசதியாக இருக்கிறது சிந்திக்கவும், எழுதவும், நோபல் பரிசு வாங்கவும்."

      என்று நீங்கள் எழுதியிருப்பது உண்மைதான்.ஆனால் ஆங்கிலமே அவர்களது தாய்மொழியாக மாறிபோனதுதான் யதார்த்தம். அவர்களுக்கு முறையே தமிழும் வங்காளமும் இரண்டாம் பட்சம்.இங்கு தாய்மொழி என்பது மேலோட்டமாக பார்த்தால் தன் பெற்றோர் பேசும் மொழி என்று பொருள் கொண்டு கேள்வி கேட்டால் அது தவறு.தன்னுடைய மழலை மொழியே ஆங்கிலாமாக அமையும் பொழுது அவர்கள் தமிழ் நாட்டில் அல்லது வங்காளத்தில் பிறந்ததால் அவர்களுக்கு எப்படி தமிழும்,வங்காளமும் தாய் மொழியாகும்.

      தான் சிந்திக்கப் பயன்படுத்தும் மொழியே அவனது உண்மையான தாய் மொழியாகும்.

      ஜி யு போப், வீரமாமுனிவர் போன்றோரின் தாய் மொழிகள் எது என்று நினைக்கிறீர்கள்?

      நான் தமிழில் சிந்திக்கிறேன் அதனால் தமிழ் எனக்குத் தாய் மொழி.இங்கிலாந்தில் உள்ள ஒருவன் ஆங்கிலத்தில் சிந்திக்கிறான் அதனால் ஆங்கிலம் அவனது தாய் மொழி.ஆங்கிலேய குழந்தை ஒன்று தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு தமிழில் கல்வி வழங்கினால் அக்குழந்தை பெரியவனானலும் தமிழில் தான் சிந்தனை செய்யும்.அப்பொழுது அக்குழந்தையின் தாய் மொழி தமிழ் தானே தவிர அவர்கள் பெற்றோர் பேசிய ஆங்கிலம் அல்ல.

      elixir என்பதற்கு a magic liquid that is believed to cure illness or to make people live for ever. என்பது explanation.

      ஆனால் அமுது என்பது தமிழ் இலக்கிய மேற்கண்ட விளக்கங்களிருந்து சிறு மாறுபாட்டைக் கொண்டிருக்கிறது.

      உணவருந்திவிட்டு வந்து மேலும் பதிலளிக்கிறேன்.

      Delete
  27. மணியரசன்&சிவானந்தம் உங்க 10,12,டெட் மார்க் இந்த பதிவில் வெளியிடுங்கள்... பணிவுடன் கேடகிறேன்

    ReplyDelete
  28. மணியரசன்&சிவானந்தம் உங்க 10,12,டெட் மார்க் இந்த பதிவில் வெளியிடுங்கள்... பணிவுடன் கேடகிறேன்

    ReplyDelete
  29. 1) oruvarthu mozhi arivu membada membada thesapakthium vingana arivaium prakasika seium.
    ingu than enathu karuthu marupadugirathu mozhi arivukum thesa pakthikum thodarpu ilai. mozhi enpathu velipaduthuthal oodagam orvarin sindhanaiay oruvarai vingani aakum antha sindhanai velipaduvatharku mozhi avasiam
    e.g G.D NAIDU
    mozhi arivu ilatha karanathal nam pala vinganikalai ilanthulom enpathu unmai
    2) india dog and elephent ku thesa pakthi itukiratha?
    manitharil than jathi matham nadu niram ena pala verupadugal
    manithanuku than 193 nation and 43 union pavam paraviakalukum vilangalukuma
    and india dog and elephent ku elam kudiurimai passport visa irukiratha enpathai patria adipadai arivu enaku ilai
    aanal ovoru vilangukalukum ellai undu
    thanudaya pradesathil matru oruvar nulayum pothu avesapadum
    e.g dog tiger elephent snake cat etc
    avaigaludaa pradesam than avaigaludaya nadu
    3) manathai kaatungal?
    manathu anupavathin thogupu endru avaray soli vitar. thogupugal engay irukiratho angay manathu irukirathu. oru seedan than guruvidam manathu engay irukirathu endru ketaram atharku antha guru un sundu viralai utru par angay irukirathu endraram. (uthavi: gen story)manam enpathu abstract.
    4) manithanai thavira pira uyirinagal ul unarval iyangum
    ul unarvai thotruvipathu and katupaduthuvathu uyririnangalin brain
    ela uyirangalukum anpu kopam sila uyiranakaluku kanner therium
    5) the knowledge
    etru kolkiraen abstract noun ku article varathu
    vegama pesum pothu kularuvathi pola erpata thavaru meendum oru murai padithu parthu pathivitu irunthal thiruthirupaen avsarathil pathivitu vitaen maniungal nanpargalay

    pothum nanpargalay nan thoonga selkiraen
    vivathangalil vetri petral oru nanpanai ilakirome
    thotralo oru manithanai perugirome
    katru kola inum neraya irukirathu enaku gudnid friends


    ReplyDelete
  30. மிகவும் வருத்தத்தோடு சொல்கிறேன்... விவாதம் தவறான திசையில் செல்கிறது....
    மொழி உருவாக்கப்படுவதில்லை.... உருவாவது....
    மொழி உருவாக்கம் ஒரு நாட்டின் தட்பவெப்பம் காலனிலை உணவுப்பழக்கம் போன்ற காரணிகளால் தோன்றுவது.....பின் இனக்கலப்பு இயற்கை நிகழ்வுகள் போன்ற காரணிகளால் மாற்றமும்.... ஏற்றமும்.... வளமும் பெறுவது... கால மாற்றத்தில் மாற்றமும் பெறக்கூடியது.....

    பாரதி உலகக்கவிஞர் தானறிந்த தமிழில் உலக இலக்கியம் படைத்தவர்.... பிற மொழிகளில் பயிற்சியும் திறனும் மிக்கவர்.... மணிப்பிரவாள நடையை உபயோகப்படுத்தியவர்.... மணிப்பிரவாளம் எப்படி வந்தது ஏன் வந்தது அதனால் தமிழுக்கு நன்மையா தீமையா என எளியவன் சொல்லித்தெரியவேண்டிய அவசியம் இல்லை.... அவருக்குப் பின் வந்த பாரதிதாசன்... மன்னிக்கவும்... தமிழ் தமிழினம் என குறுகிய வட்டத்திற்க்குள் வந்ததாலேயே அவர் உலகக்கவிஞன் என்கிற தகுதியை அடையமுடியாமல் போனது....

    தாய் மொழியறிவு "மட்டுமே" மாமனிதர்களை உருவாக்கும் என்பது "என்னால்" ஏற்றுக்கொள்ள இயலாத கருத்து.... நான் ஏற்றுக்கொள்ளாவிடினும் உலகம் தன் சுழற்சியைத்தொடரும்... ஆதவன் நாளையும் கிழக்கிலே உதிப்பான் என்பதால்.... நான் யாரிடமும் சண்டையோ வழக்காடவோ இதைச்சொல்லவில்லை.....

    மொழியறிவு அத்யாவசியமானது.... அவசியமானது.... மாற்றுக்கருத்து இல்லை..... அறிவு சிந்தனையால் விரித்துக் கொள்ளப்படக்கூடியது..... மொழியறிவும் அப்படியே.... அடிப்படை அறிவை விரித்துக்கொள்ளலாம். அதை தேசிய உணர்வாகவோ அறிவியல் கண்டுபிடிப்பாகவோ அல்லது தத்துவக் கொள்கையாகவோ வளர்த்தெடுக்க சிந்தனையே தேவை... என்பதே என் கருத்து....

    மொழிவளம் எல்லாமனிதர்களுக்கும் கைகூடுவதில்லை.... அப்படி ஒரு அவசியமும் எந்த நாட்டிலும் இல்லை.... பாரதியின் பாடல்களில் கூட தளை தட்டுவதை ஒரு உதாரணமாகக்கொள்ளலாம்....(இது நான் மட்டும் சொல்லும் கருத்து அல்ல தமிழில் தற்போதைய இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான ஜெயமோகன் சொல்லும் கருத்து.... தவறு இருப்பின் அடியேன் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்) பாரதியில் தேசப்பற்று தாசனில் மொழிப்பற்றாகக்குறுகியது எப்படி என நான் என்னையே மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.... நானே ஒருநாள் விடையையும் கண்டடைவேன் என் நம்புகிறேன்.....

    மொழியறிவு அறிவும் அனுபவமும் வளர்ந்த பின் தானே மலர்ந்து விகசித்து இலக்கியம் நோக்கி ஒருவரை இட்டுச்செல்வது என்பதே என் அனுபவம்... எத்தனை பேர் சிலாகித்துப் பேசினாலும் அந்த குறிப்பிட்ட அனுபவமோ... அல்லது தரிசனமோ (Imagination) அல்லது உணர்வெழுச்சியோ இல்லாத ஒருவர் ஒரு கவிதையையோ அல்லது கட்டுரையையோ அல்லது ஒரு இலக்கியப்படைப்பையோ ரசிக்க இயலாது.... அபாரமான மொழியறிவு இருந்தாலும் கூட என்பதே என் அனுபவம்.... (கல்லூரிக்காலங்களில் ரசிக்க முடியாத பல கவிதைகளும் இலக்கியப் படைப்புகளும் என்னால் இப்போது ரசிக்கப்படக்காரணம் என் மொழியறிவு அல்ல... என் அனுபவமே... )இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட அனுபவமே....

    பல கவிதைகளும் படைப்புகளும் ரசிக்கப்படக்காரணம் அவற்றின் மொழிச்சிக்கல் அல்ல எளிமை, வடிவக்கச்சிதம் மற்றும் அனுபவம்... Contemprority எனப்படுகிற தற்காலத்தன்மையே என்பது.... எல்லோருக்குமே தெரியும் என எண்ணுகிறேன்.....

    மொழியறிவு..... மொழிச்சரளத்தை தருவதில்லை.... மொழிச்சரளம் மொழி மேல் ஆளுமையைத்தருவதில்லை.... மொழியின் மேல் ஆளுமை மட்டுமே நல்ல இலக்கியத்தைத்தருவதில்லை....

    "மொழி" மனித இனத்திற்கு மட்டுமே உரித்தான, பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட, பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட, அவ்வபோது மாற்றத்திற்கு உட்படும் மனித உணர்வுகளை,உணர்ச்சிகளை,சிந்தனையை வெளிப்படுத்தும் ஒரு கருவி

    ஆம் அது வெறும் கருவி மட்டுமே.... உளி வைத்திருக்கும் எல்லோரு மைக்கேல் ஆஞ்சலோ ஆக முடியாது........ மொழி சகமனிதர்களுடன் அடிப்படைச் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளமட்டுமே உதவும்... மொழியால் விளக்கப்பட முடியாத மொழியின் சாத்தியக்கூறுகளுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ வாழ்வில் உண்டு..... எப்பேர்ப்பட்ட சிக்கலான விஷயத்தையும் எளிய மொழியிலேயே விளக்க வேண்டியிருக்கிறது... இலக்கியம் போராளிகளுக்கு ஒரு ஓய்வு அல்லது ஒரு மாற்றுச்சிந்தனை அவ்வளவுதான்...

    அதிகம் பேசிவிட்டேன்... Translation & Transliteration என்ற இரண்டு காரணிகளுக்கு இடையே விவாதம் சிக்கி இருப்பதை கண்டு கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக பேசிவிட்டேன் என நினைக்கிறேன்......

    செல்வராஜ் ராமஸ்வாமி அலெக்ஸ் பாண்டியன் மற்றும் சிவானந்தம் ஆகிய நண்பர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்..... மேலே நான் கூறியவை என் அனுபவத்தை என் சிற்றறிவை மட்டுமே சார்ந்து சுய சார்பு சிந்தனையோடு விருப்பு வெறுப்புகளுக்கு இடம் அளிக்காமல் சொல்லப்பட்ட கருத்துக்கள் ஆகும்.... வாதிடுபவர்கள் வாதிடலாம்... நான் வெறும் கண்ணாடி மட்டுமே.... அறிவிலும் ஆற்றலிலும் குறைந்த இந்த எளியவனை தவறு இருப்பின் பொறுத்தருள்க....

    ReplyDelete
    Replies
    1. இதில் வருத்தப்படுவதற்கு எதுவுமே இல்லை Mr DARK KNIGHT,

      ஆரோக்கியமான விவாதம் வரவேற்கப் படுகிறது.

      "மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு 'காட்சிக்கற்பனை' உலகில் அது அவரது மூளையால் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆகவே தனித்தனியாக அவரது சொற்களையும் சமன்பாடுகளையும் சராசரிகளான நாமோ நுண்ணறிவு மிக்க மற்ற அறிவியலாளர்களோ புரிந்துகொண்டுவிடமுடிந்தாலும் அவர் மனக்கண்ணால் கண்ட முடிவுகளைக்கூட 10ஆண்டுகள் கழித்து சோதனைகளால் மெய்ப்பித்தோ, பொய்ப்பித்தோதான் ஓரளவு 'புரிந்து'கொள்ள முடிந்தது."

      என்று நீங்கள் எழுதியிருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.உலகில் பல கண்டுபிடிப்புகள் நீங்கள் குறிப்பிட்டுள்ள 'காட்சிக்கற்பனை' என்ற முறையில்தான் நிகழ்ந்துள்ளது.அது ஆதிகால மனிதன் நெருப்பை கண்டறிந்தது முதல் நியூட்டன் புவியீர்ப்பு விசை கண்டறிந்தது, ராமன் ஒளி விளைவை கண்டறிந்தது கலிலியோவின் கண்டுபிடுப்புகள் எல்லாமே திடீரென நிகழ்ந்தவைதான்.

      ஆனால் கணித சமன்பாடுகளைத் தவிர மற்ற கண்டுபிடிப்புகள் திடீரென தனது மனக்கண்ணில் தோன்றுவதற்கு ஏதேனும் ஒரு நிகழ்வு காரணமாக இருந்திருக்கிறது.

      மரத்திலிருந்து பழம் தரையில் விழுந்ததைக் கண்ட சில மணித்துளிகளிலேயே நியூட்டன் பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்க வேண்டும் என்று உணர்ந்து விடுகிறார்.

      ஆனால் கனிதச் சமன்பாடுகள் அவர்களது மனக்கண்ணில் திடீரென தோன்றுவதற்கு காரணமான நிகழ்வு அல்லது அந்த குறிப்பிட்ட கண நேரத்திற்கு முன்பு அவர்களது சிந்தனை எதனோடு தொடர்பு கொண்டிருந்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் அல்லது மறந்து போய்விடும்.ஏனெனில் ஐன்ஸ்டைன் தனது வீட்டு முகவரியையே அடிக்கடி மறந்து விடுவாராம்..

      Delete
    2. சிந்தனை என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.சிந்திக்கப்படப்படும் பொருளும் சிந்திப்பவரது அறிவும் அந்த குறிப்பிட்ட சிந்தனைக்கான கால நேரத்தை தீர்மானிக்கிறது.

      அதாவது ஐன்ஸ்டைன் ஒரே வினாடியில் E=MC2(Square) என்று எழுதியிருக்க முடியாது.E=MC2(Square) என்று அவர் எழுதுவதற்கு முன்பாக அவரது மூளை ஏதோ ஒன்றைக் குறித்து சிந்திருக்க வேண்டும்.அது நனவுநிலையாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.கனவு நிலையாகக் கூட இருக்கலாம்.அந்த நனவு அல்லது கனவு நிலையிலும் சிந்திக்க ஏதோ ஒன்று தேவை. அந்த ஏதோ ஒன்று மொழியறிவால்தான்(இலக்கணம் அன்று) ஏற்படும் .ஆனால் அவ்வாறு சிந்திக்க மொழியின் உட்ச பட்ச அறிவு வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை.இங்கு சிந்தனை என்பதே மொழி என்றாகி விடுகிறது.அதாவது E = mc2 என்றாவது போல சிந்தனை(அறிவு)=மொழி என்றாகி விடுகிறது.

      மொழியையும் அறிவையும் வேறுபடுத்தவே முடியாது. சிந்தனைதான் அறிவு,அறிவுதான் மொழி, மொழிதான் சிந்தனை.

      அதாவது இங்கு அறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள 6 வது அறிவை குறிப்பிடுகிறேன்.அந்த 6 வது அறிவுதான் மொழி.மொழியின் ஒரு கூறுதான் சிந்தனை.சிந்தனைதான் அறிவு. இது ஒரு உள்ளீடற்ற ஒரு புள்ளி.அந்த புள்ளியில் எது மொழி எது அறிவு எது சிந்தனை பிரிக்கவே முடியாது.அப்படிப் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தால் அங்கு அந்த புள்ளியே இருக்காது.வெற்றிடம் தான் மிஞ்சும்.

      நான் உலகிலுள்ள பல்வேறு மொழிகளின் தனமை குறித்து ஆராய விரும்பவில்லை.ஆனால் உலகிலுள்ள எந்த மொழியும் 6 வது அறிவின் வெளிப்பாடு."

      "ஹார்வர்டில் பாடமெடுக்கும் பொருளாதார வல்லுனரான சுப்பிரமணிய சுவாமி தன் தாய்மொழியான தமிழில்பேசத் திணறுவதைக் கண்டதில்லையா? அமர்த்யா சென்னுக்கு பெங்காலியைவிட ஆங்கிலம்தான் வசதியாக இருக்கிறது சிந்திக்கவும், எழுதவும், நோபல் பரிசு வாங்கவும்."

      "என்று நீங்கள் எழுதியிருப்பது உண்மைதான்.ஆனால் ஆங்கிலமே அவர்களது தாய்மொழியாக மாறிபோனதுதான் யதார்த்தம். அவர்களுக்கு முறையே தமிழும் வங்காளமும் இரண்டாம் பட்சம்.இங்கு தாய்மொழி என்பது மேலோட்டமாக பார்த்தால் தன் பெற்றோர் பேசும் மொழி என்று பொருள் கொண்டு கேள்வி கேட்டால் அது தவறு.தன்னுடைய மழலை மொழியே ஆங்கிலாமாக அமையும் பொழுது அவர்கள் தமிழ் நாட்டில் அல்லது வங்காளத்தில் பிறந்ததால் அவர்களுக்கு எப்படி தமிழும்,வங்காளமும் தாய் மொழியாகும்.

      தான் சிந்திக்கப் பயன்படுத்தும் மொழியே அவனது உண்மையான தாய் மொழியாகும்.

      ஜி யு போப், வீரமாமுனிவர் போன்றோரின் தாய் மொழிகள் எது என்று நினைக்கிறீர்கள்?

      நான் தமிழில் சிந்திக்கிறேன் அதனால் தமிழ் எனக்குத் தாய் மொழி.இங்கிலாந்தில் உள்ள ஒருவன் ஆங்கிலத்தில் சிந்திக்கிறான் அதனால் ஆங்கிலம் அவனது தாய் மொழி.ஆங்கிலேய குழந்தை ஒன்று தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு தமிழில் கல்வி வழங்கினால் அக்குழந்தை பெரியவனானலும் தமிழில் தான் சிந்தனை செய்யும்.அப்பொழுது அக்குழந்தையின் தாய் மொழி தமிழ் தானே தவிர அவர்கள் பெற்றோர் பேசிய ஆங்கிலம் அல்ல.

      elixir என்பதற்கு a magic liquid that is believed to cure illness or to make people live for ever. என்பது explanation.

      ஆனால் அமுது என்பது தமிழ் இலக்கியத்தில் மேற்கண்ட விளக்கங்களிருந்து சிறு மாறுபாட்டைக் கொண்டிருக்கிறது."

      என்ற பதிலைத்தாண்டி விவாதிக்க இதில் ஒன்றுமே இல்லை.

      Delete
    3. ஆனால் நீங்களாகவே ஒரு விளக்கத்தை எழுதி அதிலிருந்து விவாதிக்கலாம் என்றும் எழுதியிருக்கிறீர்கள்.அதற்காக மீண்டும் விவாதத்தைத் தொடங்குகிறேன்.

      "மொழி உருவாக்கப்படுவதில்லை.... உருவாவது....
      மொழி உருவாக்கம் ஒரு நாட்டின் தட்பவெப்பம் காலனிலை உணவுப்பழக்கம் போன்ற காரணிகளால் தோன்றுவது.....பின் இனக்கலப்பு இயற்கை நிகழ்வுகள் போன்ற காரணிகளால் மாற்றமும்.... ஏற்றமும்.... வளமும் பெறுவது... கால மாற்றத்தில் மாற்றமும் பெறக்கூடியது....."

      என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.உருவாக்கப்படுவதில்லை.உருவாகிறது என்றால் மொழி மனிதனால் உருவாக்கப்பட்டதில்லை.தானாக உருவாகியது என்று சொல்கிறீர்களா?

      தானாக உருவாகியிருந்தால் மனிதனுக்காக மட்டும் தானாக உருவான மொழி பிற உயிரினங்களுக்காக ஏன் உருவாகவில்லை?

      "பாரதி உலகக்கவிஞர் தானறிந்த தமிழில் உலக இலக்கியம் படைத்தவர்.... பிற மொழிகளில் பயிற்சியும் திறனும் மிக்கவர்.... மணிப்பிரவாள நடையை உபயோகப்படுத்தியவர்.... மணிப்பிரவாளம் எப்படி வந்தது ஏன் வந்தது அதனால் தமிழுக்கு நன்மையா தீமையா என எளியவன் சொல்லித்தெரியவேண்டிய அவசியம் இல்லை.... அவருக்குப் பின் வந்த பாரதிதாசன்... மன்னிக்கவும்... தமிழ் தமிழினம் என குறுகிய வட்டத்திற்க்குள் வந்ததாலேயே அவர் உலகக்கவிஞன் என்கிற தகுதியை அடையமுடியாமல் போனது...."

      என்றும் எழுதியிருக்கிறீர்கள்.இது முற்றிலும் தவறு.

      பாரதி உலக கவிஞனாக உருவெடுத்தான் என்றால் அதற்கு அவன் வாழ்ந்த காலச்சூழல் கைகொடுத்தது.அதாவது அவன் எழுதிய கவிதைகள் யாவும் இந்த நாட்டிற்காக, இந்த நாட்டின் விடுதலைக்காக சமுதாய புரட்சிக்காக எழுதப் பட்டவை.அதோடு பாரதி இதுதான் எனது எல்லை எதையும் வரையறுத்துக் கொள்ளவில்லை.அனைத்துத் துறைகளையும் தொட்டான் நாத்திகம் ஆத்திகம் என்ற பாகுபாட்டினை மேற்கொள்ளவில்லை. இன்றைய காலகட்டத்தில் என்னதான் பொது நலத்தோடு வாழ்ந்தாலும் மேலும் ஒரு காந்தி எப்படி உருவாக முடியாது.காரணம் காலச் சூழல் அவர்களை கதாநாயகனாக உருவாக்கியது.அதே போல் பாரதியும்.

      அதோடு சுயம்புவிற்கு எப்பொழுதும் அதிக வீரியம் இருக்கும்.பாரதி சுயம்பு.மரபு நடையிலேயே எழுதப் பட்டு வந்த தமிழ் மரபை மாற்றி முதன் முதலாக வசன கவிதையில் எழுத ஆரம்பித்தார்.அதற்காக அவற்பட்ட எதிர்ப்புகள் மிக அதிகம்.அவரை ஒரு பைத்தியக்காரன் என்றே பலரும் விமர்சனம் செய்தார்கள்.

      ஆனால் காலம் அவர் எழுதிய வசன கவிதை நடைமுறைக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழில் அனைவரும் அந்த முறையைத்தான் பின்பற்றுகிறோம். மரபுக் கவிதை இன்றைய காலத்தில் யாருமே எழுதுவதில்லை.அப்படியே எழுதினாலும் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

      பாரதிதாசன் புகழ் அடையவில்லை என்று சொல்ல முடியாது.ஆனால் பாரதி அளவிற்கு புகழ் அடையவில்லை என்றுதான் சில வேண்டும்.அதற்கு தமிழ் என்ற வட்டத்தில் அவர் குறுகி போனது காரணமல்ல.அவர் சில துறைகளை தொடவில்லை.நாத்திகத்தை ஆதரித்தார்.

      அதோடு அவர் பின்பற்றியது பாரதி எழுதிய நடைமுறையை.சுயம்பான நடைமுறையில் எழுதவில்லை.அப்படி ஒரு மொழிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு வடுவத்தை யாராலும் கொடுத்து விட முடியாது.தமிழின் மாற்றத்தை ஆரம்ப காலம் முதல் இக்காலம் வரை கவனித்தால் அது நன்றாக புலப்படும்.

      தமிழில் குறிப்பிட தகுந்த மாற்றம் என்றால் 18 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆங்கிலேயர்களால் உரைநடை முறை அறிமுகப் படுத்தப் பட்டது.அதன் பிறகு பாரதிதான் வசன கவிதை மூலம் மாற்றம் கொண்டு வந்தான்.மற்றபடி வேறு எதுவும் குறிப்பிட தகுந்த மாற்றமாக சொல்லிவிட முடியாது.

      "தாய் மொழியறிவு "மட்டுமே" மாமனிதர்களை உருவாக்கும் என்பது "என்னால்" ஏற்றுக்கொள்ள இயலாத கருத்து.... நான் ஏற்றுக்கொள்ளாவிடினும் உலகம் தன் சுழற்சியைத்தொடரும்..."

      என்று எழுதியிருக்கிறீர்கள்.நான் எந்த இடத்திலும் தாய் மொழி மட்டுமே போதும் என்று குறிப்பிடாவில்லை.தாய் மொழி தான் சிந்திக்கும் மொழி என்பதால் தாய் மொழியில் சிறப்பு பெற்றிருத்தல் அவசியம் என்றேன்.

      பிற நாட்டு நல்லறிஞர்களின் நூல்கள் மொழி பெயர்க்க வேண்டும் என்று பாரதியே சொல்லியிருக்கானே.

      Delete
    4. "திரைகடல் ஓடி திரவியம் தேடு" என்பதில் திரவியம் என்பது பொருளாதாரத்தைத் தரும் பொருளை மட்டும் குறிக்கவில்லை.ஞானத்தையும்(அறிவு) குறிக்கும்.

      "மொழியறிவு அத்யாவசியமானது.... அவசியமானது.... மாற்றுக்கருத்து இல்லை..... அறிவு சிந்தனையால் விரித்துக் கொள்ளப்படக்கூடியது..... மொழியறிவும் அப்படியே.... அடிப்படை அறிவை விரித்துக்கொள்ளலாம். அதை தேசிய உணர்வாகவோ அறிவியல் கண்டுபிடிப்பாகவோ அல்லது தத்துவக் கொள்கையாகவோ வளர்த்தெடுக்க சிந்தனையே தேவை... என்பதே என் கருத்து"

      என்ற உங்கள் கருத்தில் உள்ள சிந்தனை என்ற சொல்லிற்கு

      "சிந்தனை என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.சிந்திக்கப்படப்படும் பொருளும் சிந்திப்பவரது அறிவும் அந்த குறிப்பிட்ட சிந்தனைக்கான கால நேரத்தை தீர்மானிக்கிறது.

      அதாவது ஐன்ஸ்டைன் ஒரே வினாடியில் E=MC2(Square) என்று எழுதியிருக்க முடியாது.E=MC2(Square) என்று அவர் எழுதுவதற்கு முன்பாக அவரது மூளை ஏதோ ஒன்றைக் குறித்து சிந்திருக்க வேண்டும்.அது நனவுநிலையாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.கனவு நிலையாகக் கூட இருக்கலாம்.அந்த நனவு அல்லது கனவு நிலையிலும் சிந்திக்க ஏதோ ஒன்று தேவை. அந்த ஏதோ ஒன்று மொழியறிவால்தான்(இலக்கணம் அன்று) ஏற்படும் .ஆனால் அவ்வாறு சிந்திக்க மொழியின் உட்ச பட்ச அறிவு வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை.இங்கு சிந்தனை என்பதே மொழி என்றாகி விடுகிறது.அதாவது E = mc2 என்றாவது போல சிந்தனை(அறிவு)=மொழி என்றாகி விடுகிறது.

      மொழியையும் அறிவையும் வேறுபடுத்தவே முடியாது. சிந்தனைதான் அறிவு,அறிவுதான் மொழி, மொழிதான் சிந்தனை.

      அதாவது இங்கு அறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள 6 வது அறிவை குறிப்பிடுகிறேன்.அந்த 6 வது அறிவுதான் மொழி.மொழியின் ஒரு கூறுதான் சிந்தனை.சிந்தனைதான் அறிவு. இது ஒரு உள்ளீடற்ற ஒரு புள்ளி.அந்த புள்ளியில் எது மொழி எது அறிவு எது சிந்தனை பிரிக்கவே முடியாது.அப்படிப் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தால் அங்கு அந்த புள்ளியே இருக்காது.வெற்றிடம் தான் மிஞ்சும்."
      என்பதுதான் பதில் முடிந்தால் இந்த பகுதியை திரு சிவானந்தம் அவர்கள் கேட்ட கேள்வியோடு சேர்த்து படியுங்கள் இன்னும் விளக்கமாக இருக்கும்.

      "மொழியறிவு..... மொழிச்சரளத்தை தருவதில்லை.... மொழிச்சரளம் மொழி மேல் ஆளுமையைத்தருவதில்லை.... மொழியின் மேல் ஆளுமை மட்டுமே நல்ல இலக்கியத்தைத்தருவதில்லை...."

      என்றும் எழுதியிருக்கிறீர்கள்.அப்படியானால் மொழிச்சரளமும், மொழி ஆளுமையும் எவ்வாறு ஒரு மனிதனுக்கு உருவாகிறது என்பதை விளக்கினால் உங்களது கேள்வி சிறப்பு பெரும்.

      உங்களது பதிலை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நண்பரே!

      மேற்கண்ட பதிலைத் தொடர்ச்சியாக படிக்கவும்.ஒரே பதிலாகத்தான் எழுதினேன்.ஒரே முறையில் அனைத்தையும் வலைமனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.துண்டு துண்டாக reply செய்தால்தான் ஏற்றுக் கொள்கிறது.

      Delete
  31. Dark knight nanparuku
    en muthal vanakam(1st time meet panrom la just for fun)
    oru karuthil matum nan marupadukiraen matra padi thangaludaya karuthu muluka unmai..
    ela uyirinangalukum mozhi undu signals undu avai namaku puriamal pogalam
    for example aan thavalai pen thavalai kavara kodukum sound
    aanal mozhiai muzhumaiaga aala, payanpadutha therinthavan manithan endra vilanginam matumay nanpa
    thavaraga irunthal maniungal
    thangal natpu thodaratum

    ReplyDelete
  32. நன்றி அலெக்ஸ் பாண்டியன் அவர்களே.... நமது நட்பு என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.....

    ReplyDelete
  33. it is raining here.no power.its tough to type in mobile. so i will Certainly reply after some time.

    ReplyDelete
    Replies
    1. Ivlo pesittu mark sollamale poitare? Ungaludan vivathikkum yelloraum vaayai mooda vaipathe ungal ilakka? Neengal select aana piraku ungal pechil maattram ullathu. Select aakita yellorum arivaali, select aakathavanga muttalkal illai. Next enna vaayai modavaika plan pannathenga. This s my first an last reply to u. Nan paper1. Neenga select aanatharku naan thevai illamal relax aanen. Yethire irupavarai karuthukalal puriya vaipan it velai paakuravan madiri. Pechai niritha vaipavan cyber crime pandravan madiri. Both r brillient. But aply pandra idam murai cost marukirathu. Neengal irandam tharam.

      Delete
    2. திரு பாலா அவர்களே,

      நிச்சயமாக நீங்கள் நினைப்பது போல் இல்லை.நான் select ஆன பிறகு என் பேச்சில் மாற்றம் தெரியவில்லை.நீங்கள் சொவது போல் தேர்வானவர்கள் அனைவரும் புத்திசாலிகள் என்றும்,தேர்வாகாதவர்கள் முட்டாள்கள் என்றும் நான் எப்போதும் நினைத்ததில்லை. அப்படி நினைப்பவன் மகா முட்டாள்.நான் இப்போது தேர்வாகி இருப்பதற்கு கூட கல்விச்செய்தி நண்பர்கள் எனக்காக செய்த பிரார்த்தனையும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

      பலர் கல்விச்செய்திக்குப் புதியவர்கள் என்பதால் என்னுடைய முழுமையான வெளிப்பாடு என்ன என்பது தெரியாமல் போய்விடுகிறது.

      என்னுடன் நாகரீகமான முறையில் விவாதம் செய்பவர்களே எனக்கு இன்னும் மிக நெருக்கமான நண்பர்களாக மாறுகிறார்கள்.

      உங்களுக்கு என்னுடைய பழைய பதிவுகள் சிலவற்றைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

      நான் எப்போதுதும் ஆரோக்கியமான விவாதம் செய்ய விருப்புபவன் என்பது அப்போது உங்களுக்குப் புரியும்.

      http://www.kalviseithi.net/2014/04/blog-post_1844.html

      http://www.kalviseithi.net/2014/05/blog-post_1540.html

      http://www.kalviseithi.net/2014/05/blog-post_20.html போன்ற link இல் ஸின்று பாருங்கள்.இதைப்போன்று இன்னும் மேலும் சில பதிவுகள் இருக்கிறது.அது நினைவிற்கு வரவில்லை.இதைப் பார்த்தாலே உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. Mani sir i want to say few points regarding this. In my point of view language is only a tool for communication. Whatever ur brain thinks u are able to convey with the help of language. I hope u would have known about Helen keller who was not able to see and hear. But her teacher ANNIE sulaivan taught her the word water by making her to touch the water and she wrote the spelling of water in helen palm. Even we are learning the language with the help of brain all the words will be registered in ur brain and u r using the words with the help of brain. Even if u take a child, the child at the earlier stage express everything through actions then slowly the child learns the language from others and then a child can able to use those words. So language is only a tool for communication

    ReplyDelete
    Replies
    1. Helen keller மற்றும் பிரைய்லி முறையில் கற்றல்போன்றவை குறித்து எழுத வேண்டுமென நினைத்தேன்.நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள் அதற்கு நன்றி.

      "Even if u take a child, the child at the earlier stage express everything through actions then slowly the child learns the language from others and then a child can able to use those words" என்று எழுதியிருக்கிறீர்கள்.

      உங்கள் விளக்கத்திலிருந்தே கேள்வி கேட்கிறேன்.

      எந்த குழந்தையும் விஞ்ஞான ரீதியாக சிந்திந்து அறிவியல் கண்டு பிடிப்புகளை நிகழ்த்துவதில்லை.அதே குழந்தை மொழியறிவில் தேறி சிந்திக்கும் பொழுதுதான் அறிஞனாக மாறுகிறான்.

      ஆனால் நான் எழுதியுள்ள

      "மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு 'காட்சிக்கற்பனை' உலகில் அது அவரது மூளையால் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆகவே தனித்தனியாக அவரது சொற்களையும் சமன்பாடுகளையும் சராசரிகளான நாமோ நுண்ணறிவு மிக்க மற்ற அறிவியலாளர்களோ புரிந்துகொண்டுவிடமுடிந்தாலும் அவர் மனக்கண்ணால் கண்ட முடிவுகளைக்கூட 10ஆண்டுகள் கழித்து சோதனைகளால் மெய்ப்பித்தோ, பொய்ப்பித்தோதான் ஓரளவு 'புரிந்து'கொள்ள முடிந்தது."

      என்று நீங்கள் எழுதியிருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.உலகில் பல கண்டுபிடிப்புகள் நீங்கள் குறிப்பிட்டுள்ள 'காட்சிக்கற்பனை' என்ற முறையில்தான் நிகழ்ந்துள்ளது.அது ஆதிகால மனிதன் நெருப்பை கண்டறிந்தது முதல் நியூட்டன் புவியீர்ப்பு விசை கண்டறிந்தது, ராமன் ஒளி விளைவை கண்டறிந்தது கலிலியோவின் கண்டுபிடுப்புகள் எல்லாமே திடீரென நிகழ்ந்தவைதான்.

      ஆனால் கணித சமன்பாடுகளைத் தவிர மற்ற கண்டுபிடிப்புகள் திடீரென தனது மனக்கண்ணில் தோன்றுவதற்கு ஏதேனும் ஒரு நிகழ்வு காரணமாக இருந்திருக்கிறது.

      மரத்திலிருந்து பழம் தரையில் விழுந்ததைக் கண்ட சில மணித்துளிகளிலேயே நியூட்டன் பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்க வேண்டும் என்று உணர்ந்து விடுகிறார்.

      ஆனால் கனிதச் சமன்பாடுகள் அவர்களது மனக்கண்ணில் திடீரென தோன்றுவதற்கு காரணமான நிகழ்வு அல்லது அந்த குறிப்பிட்ட கண நேரத்திற்கு முன்பு அவர்களது சிந்தனை எதனோடு தொடர்பு கொண்டிருந்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் அல்லது மறந்து போய்விடும்.ஏனெனில் ஐன்ஸ்டைன் தனது வீட்டு முகவரியையே அடிக்கடி மறந்து விடுவாராம்.

      சிந்தனை என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.சிந்திக்கப்படப்படும் பொருளும் சிந்திப்பவரது அறிவும் அந்த குறிப்பிட்ட சிந்தனைக்கான கால நேரத்தை தீர்மானிக்கிறது.

      அதாவது ஐன்ஸ்டைன் ஒரே வினாடியில் E=MC2(Square) என்று எழுதியிருக்க முடியாது.E=MC2(Square) என்று அவர் எழுதுவதற்கு முன்பாக அவரது மூளை ஏதோ ஒன்றைக் குறித்து சிந்திருக்க வேண்டும்.அது நனவுநிலையாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.கனவு நிலையாகக் கூட இருக்கலாம்.அந்த நனவு அல்லது கனவு நிலையிலும் சிந்திக்க ஏதோ ஒன்று தேவை. அந்த ஏதோ ஒன்று மொழியறிவால்தான்(இலக்கணம் அன்று) ஏற்படும் .ஆனால் அவ்வாறு சிந்திக்க மொழியின் உட்ச பட்ச அறிவு வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை.இங்கு சிந்தனை என்பதே மொழி என்றாகி விடுகிறது.அதாவது E = mc2 என்றாவது போல சிந்தனை(அறிவு)=மொழி என்றாகி விடுகிறது.

      மொழியையும் அறிவையும் வேறுபடுத்தவே முடியாது. சிந்தனைதான் அறிவு,அறிவுதான் மொழி, மொழிதான் சிந்தனை.

      அதாவது இங்கு அறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள 6 வது அறிவை குறிப்பிடுகிறேன்.அந்த 6 வது அறிவுதான் மொழி.மொழியின் ஒரு கூறுதான் சிந்தனை.சிந்தனைதான் அறிவு. இது ஒரு உள்ளீடற்ற ஒரு புள்ளி.அந்த புள்ளியில் எது மொழி எது அறிவு எது சிந்தனை பிரிக்கவே முடியாது.அப்படிப் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தால் அங்கு அந்த புள்ளியே இருக்காது.வெற்றிடம் தான் மிஞ்சும்.

      நான் உலகிலுள்ள பல்வேறு மொழிகளின் தனமை குறித்து ஆராய விரும்பவில்லை.ஆனால் உலகிலுள்ள எந்த மொழியும் 6 வது அறிவின் வெளிப்பாடு."

      என்ற பதிலைத் தாண்டி உங்களது கேள்வியை எதிர்பார்க்கிறேன் நன்றி madam.

      Delete
  36. Mani sir i said from my point of view don't mistake me. Even i am not writing the comments i used to see this site everyday and u have given so many good articles in this site especially ur kavithai it was simply superb!. But in this article there are lot of controversies. We must love our mother language at the same time if u want to go to greater heights we must learn other languages also especially english and hindi. Even if u want to say the beauty of tamil to other country people we must know their language is it not? The world is so wide and dont stick into to the small circle. More language u know, more knowledge u can gain

    ReplyDelete
    Replies
    1. Shobi malar Madam,

      நிச்சயமாக நான் உங்களைத் தவறாக நினைக்கவில்லை.என்னோடு ஆரோக்கியமான முறையில் விவாதம் செய்யும் யாரையும் நான் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.மாறாக அவர்களது பெயர் என் மனதில் நிலையாக நின்றுவிடும்.

      http://www.kalviseithi.net/2014/04/blog-post_1844.html

      http://www.kalviseithi.net/2014/05/blog-post_1540.html

      http://www.kalviseithi.net/2014/05/blog-post_20.html போன்ற link களையும் பாருங்கள். நான் எப்பொழுதும் ஆரோக்கியமான விவாதம் செய்யவே விரும்புகிறேன்.

      கட்டுரை என்றால் controversy உருவாக்க வேண்டும்.
      கவிதை என்றால் ரசிக்கப் பட வேண்டும்.

      அப்பொழுதுதான் அது சரியான முறையில் எழுதப் பட்டிருக்கிறது என்று பொருள்.எல்லோரும் ஏற்றுக் கொண்ட சாதாரண ஒரு கருத்தை கட்டுரையாக எழுதினால் அதன் பெயர் கட்டுரை இல்லை.

      ஜெயகாந்தன்,சுஜாதா ஜெய மோகன்,சாரு நிவேதிதா போன்ற மிகப் பிரபலமான எழுத்தாளர்களும் அவர்களது கட்டுரைகளும் மிக அதிகமான controversy களை எதிர்கொண்டிருக்கிறது.

      என்னடா இவன் மிகப் பெரிய எழுத்தாளர்களோடு தன்னை ஒப்பிட்டு எழுதுகிறானே என்று நினைக்க வேண்டாம். கட்டுரை என்று யார் எழுதினாலும்ம் அது ஏதேனும் ஒரு வகையில் ஏதேனும் ஒருவரால் controversy யை சந்தித்தே ஆக வேண்டும்.

      Delete
    2. Mani sir i have a difference of opinion. Knowledge and language is two distinct one each one has separate value.
      If we want to increase our knowledge we will look to increase our experiences.
      What we get verbally is not true knowledge, it is only information.
      Information is a marvellous one it expands our thirst for knowledge. But keep it in mind it is not experience and it is not at all true

      Delete
    3. What d.k. Sir said is correct. Language is created. A language is a set of symbols. A symbol is something that references something else. This something else for the some 6000languages we humans have on Earth is something in the mind, we call this knowledge. But what is knowledge and where does it come from? Knowledge has two sources: first we receieve knowledge from the world around us through senses. This is direct experiential knowledge. Then we construct from this sensual knowledge other concepts which we create from our experience and imagination.

      Delete
    4. From our experience of 'sharp' and 'knife' we can create 'sharp knife'. Newton discovered gravitational force through his experience. Please note that: the 'meaning' is created before the language. The words were created for the meaning.

      Delete
    5. "மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு 'காட்சிக்கற்பனை' உலகில் அது அவரது மூளையால் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆகவே தனித்தனியாக அவரது சொற்களையும் சமன்பாடுகளையும் சராசரிகளான நாமோ நுண்ணறிவு மிக்க மற்ற அறிவியலாளர்களோ புரிந்துகொண்டுவிடமுடிந்தாலும் அவர் மனக்கண்ணால் கண்ட முடிவுகளைக்கூட 10ஆண்டுகள் கழித்து சோதனைகளால் மெய்ப்பித்தோ, பொய்ப்பித்தோதான் ஓரளவு 'புரிந்து'கொள்ள முடிந்தது."

      உலகில் பல கண்டுபிடிப்புகள் 'காட்சிக்கற்பனை' என்ற முறையில்தான் நிகழ்ந்துள்ளது.அது ஆதிகால மனிதன் நெருப்பை கண்டறிந்தது முதல் நியூட்டன் புவியீர்ப்பு விசை கண்டறிந்தது, ராமன் ஒளி விளைவை கண்டறிந்தது கலிலியோவின் கண்டுபிடுப்புகள் எல்லாமே திடீரென நிகழ்ந்தவைதான்.

      ஆனால் கணித சமன்பாடுகளைத் தவிர மற்ற கண்டுபிடிப்புகள் திடீரென தனது மனக்கண்ணில் தோன்றுவதற்கு ஏதேனும் ஒரு நிகழ்வு காரணமாக இருந்திருக்கிறது.

      மரத்திலிருந்து பழம் தரையில் விழுந்ததைக் கண்ட சில மணித்துளிகளிலேயே நியூட்டன் பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்க வேண்டும் என்று உணர்ந்து விடுகிறார்.

      ஆனால் கனிதச் சமன்பாடுகள் அவர்களது மனக்கண்ணில் திடீரென தோன்றுவதற்கு காரணமான நிகழ்வு அல்லது அந்த குறிப்பிட்ட கண நேரத்திற்கு முன்பு அவர்களது சிந்தனை எதனோடு தொடர்பு கொண்டிருந்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் அல்லது மறந்து போய்விடும்.ஏனெனில் ஐன்ஸ்டைன் தனது வீட்டு முகவரியையே அடிக்கடி மறந்து விடுவாராம்.

      சிந்தனை என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.சிந்திக்கப்படப்படும் பொருளும் சிந்திப்பவரது அறிவும் அந்த குறிப்பிட்ட சிந்தனைக்கான கால நேரத்தை தீர்மானிக்கிறது.

      அதாவது ஐன்ஸ்டைன் ஒரே வினாடியில் E=MC2(Square) என்று எழுதியிருக்க முடியாது.E=MC2(Square) என்று அவர் எழுதுவதற்கு முன்பாக அவரது மூளை ஏதோ ஒன்றைக் குறித்து சிந்திருக்க வேண்டும்.அது நனவுநிலையாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.கனவு நிலையாகக் கூட இருக்கலாம்.அந்த நனவு அல்லது கனவு நிலையிலும் சிந்திக்க ஏதோ ஒன்று தேவை. அந்த ஏதோ ஒன்று மொழியறிவால்தான்(இலக்கணம் அன்று) ஏற்படும் .ஆனால் அவ்வாறு சிந்திக்க மொழியின் உட்ச பட்ச அறிவு வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை.இங்கு சிந்தனை என்பதே மொழி என்றாகி விடுகிறது.அதாவது E = mc2 என்றாவது போல சிந்தனை(அறிவு)=மொழி என்றாகி விடுகிறது.

      மொழியையும் அறிவையும் வேறுபடுத்தவே முடியாது. சிந்தனைதான் அறிவு,அறிவுதான் மொழி, மொழிதான் சிந்தனை.

      அதாவது இங்கு அறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள 6 வது அறிவை குறிப்பிடுகிறேன்.அந்த 6 வது அறிவுதான் மொழி.மொழியின் ஒரு கூறுதான் சிந்தனை.சிந்தனைதான் அறிவு. இது ஒரு உள்ளீடற்ற ஒரு புள்ளி.அந்த புள்ளியில் எது மொழி எது அறிவு எது சிந்தனை பிரிக்கவே முடியாது.அப்படிப் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தால் அங்கு அந்த புள்ளியே இருக்காது.வெற்றிடம் தான் மிஞ்சும்.

      என்ற விளக்கத்திற்கு உங்களது பதில் என்ன madam?

      குறிப்பாக

      "இங்கு சிந்தனை என்பதே மொழி என்றாகி விடுகிறது.அதாவது E = mc2 என்றாவது போல சிந்தனை(அறிவு)=மொழி என்றாகி விடுகிறது.

      மொழியையும் அறிவையும் வேறுபடுத்தவே முடியாது. சிந்தனைதான் அறிவு,அறிவுதான் மொழி, மொழிதான் சிந்தனை.

      அதாவது இங்கு அறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள 6 வது அறிவை குறிப்பிடுகிறேன்.அந்த 6 வது அறிவுதான் மொழி.மொழியின் ஒரு கூறுதான் சிந்தனை.சிந்தனைதான் அறிவு. இது ஒரு உள்ளீடற்ற ஒரு புள்ளி.அந்த புள்ளியில் எது மொழி எது அறிவு எது சிந்தனை பிரிக்கவே முடியாது.அப்படிப் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தால் அங்கு அந்த புள்ளியே இருக்காது.வெற்றிடம் தான் மிஞ்சும்."

      என்ற பகுதியை குறித்து உங்கள் கருத்து கூறுங்கள்.இந்த கருத்திலேயே உங்களது அனைத்து கேள்விகளுக்கும் விளக்கங்களுக்கும் பதிலுள்ளது.

      Delete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி