பிராண வாயு சப்ளையை துண்டித்து, பயணிகளை கடலில் மூழ்கடித்த மலேசியா விமானி:பரபரப்பு தகவல்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2014

பிராண வாயு சப்ளையை துண்டித்து, பயணிகளை கடலில் மூழ்கடித்த மலேசியா விமானி:பரபரப்பு தகவல்கள்

கடந்த மார்ச் 8ல் எம்.எச்.370 என்ற போயிங் விமானம் அதன் 239 பயணிகளுடன் மாயமானது. மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ல் பயணம் செய்த பயணிகள் பிராண வாயு இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியிருக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

 இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அந்த விமானத்தின் பைலட் அகமது ஷா வேண்டுமென்றே பிராண வாயு தொடர்பைத் துண்டித்திருக்கலாம் என்ற பீதி எழுந்துள்ளது. இந்த புதிய தகவலை நியூசிலாந்தில் உள்ள விமான விபத்துக்கள் பற்றிய ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிகையில் இது பற்றிய கட்டுரை வெளிவந்திருக்கிறது. ஆனால் அது பற்றி இன்னமும் தெளிவாக ஒன்றும் கூற முடியவில்லை.

மாயமான மலேசிய விமானம் புதிய தகவல்:
 நியூசிலாந்தின் கிவி ஏர்லைன்ஸ் நிறுவனரும், பைலட்டுமான இவான் வில்சன், தற்போது புதிய தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். விமானத்தின் பைலட் வேண்டுமென்றே பிராண வாயு தொடர்பைத் துண்டித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

மாஸ்டர் பிளான்:
பைலட்டின் மாஸ்டர் பிளான் தனது சக பைலட்டை கேபினிலிருந்து வெளியேற்றிவிட்டு அகமது ஷா தனது ஆக்சிஜன் மாஸ்க்கைப் பயன்படுத்தி ராடார் பார்வையிலிருந்து விமானத்தை மறைத்திருக்கலாம். இதுதான் அந்த பைலட்டின் மாஸ்டர் பிளான் என்கிறார்.கடலில் மூழ்கிய விமானம் அதன் பிறகு கட்டுப்பாட்டுடனும், நிபுணத்துவத்துடனும் அவர் கடலில் விமானத்தை இறக்கியிருக்கலாம்.

அதனால்தான் விமானத்தின் பாகங்கள் எதுவும் கூட கிடைக்கவில்லை என்று அவர் டெய்லி மிரர் கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் வெளியிட்டுள்ளப் பார்வையிலும் இதே கருத்தைக் கூறியிருந்தது. மேலும் மலேசிய விமானம் எம்.எச்.370-ன் விமானி அகமது ஷா மீது பெரும் சந்தேகங்களை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது இவான் வில்சனின் கருத்துப்படி,கேபினில் பைலட் பிராண வாயு தொடர்பை துண்டித்திருக்கலாம். பயணிகள் தூங்கிக்கொண்டிருந்ததால் பிராண வாயு மாஸ்க்குகளை பயணிகள் பயன்படுத்த வாய்ப்பே இல்லாமல் போயிருக்கலாம் என்கிறார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி