இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அந்த விமானத்தின் பைலட் அகமது ஷா வேண்டுமென்றே பிராண வாயு தொடர்பைத் துண்டித்திருக்கலாம் என்ற பீதி எழுந்துள்ளது. இந்த புதிய தகவலை நியூசிலாந்தில் உள்ள விமான விபத்துக்கள் பற்றிய ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிகையில் இது பற்றிய கட்டுரை வெளிவந்திருக்கிறது. ஆனால் அது பற்றி இன்னமும் தெளிவாக ஒன்றும் கூற முடியவில்லை.
அதனால்தான் விமானத்தின் பாகங்கள் எதுவும் கூட கிடைக்கவில்லை என்று அவர் டெய்லி மிரர் கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் வெளியிட்டுள்ளப் பார்வையிலும் இதே கருத்தைக் கூறியிருந்தது. மேலும் மலேசிய விமானம் எம்.எச்.370-ன் விமானி அகமது ஷா மீது பெரும் சந்தேகங்களை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது இவான் வில்சனின் கருத்துப்படி,கேபினில் பைலட் பிராண வாயு தொடர்பை துண்டித்திருக்கலாம். பயணிகள் தூங்கிக்கொண்டிருந்ததால் பிராண வாயு மாஸ்க்குகளை பயணிகள் பயன்படுத்த வாய்ப்பே இல்லாமல் போயிருக்கலாம் என்கிறார்.
bad news
ReplyDelete