அரசுப் பள்ளிகளில் முழு நேர கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2014

அரசுப் பள்ளிகளில் முழு நேர கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா?


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முழு நேர கணினி ஆசிரியர்கள் இல்லாததால்,மணவர்களுக்கு கணினிக் கல்வியில் ஆர்வம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் கணினி கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கில்தமிழக அரசு கணினிக் கல்வியை மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு பாடமாகக் கொண்டுவந்தது. முதலில் தமிழக அரசின் எல்காட் மூலமாக தனியார் கணினி பயிற்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தம்செய்து, பள்ளிகளுக்கு கணினிப் பாட ஆசிரியர்கள், 10-க்கும் மேற்பட்ட கணினி மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை 15 வருட ஒப்பந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்பு, ஒப்பந்தம் முடிந்த தறுவாயில் 2008 ஆம் ஆண்டின்போது தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பணிபுரிந்தஅனைவருக்கும் தகுதித் தேர்வு வைத்து, அதில் தேர்வானவர்களை அரசுச்சம்பளத்தில் பணியமர்த்தியது. அதனிடையே, ஒருசிலரை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்தது.

ஆனால், அதன் பின்னர் முழுநேரஆசிரியராக அரசின் மூலம் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் 10-க்கும் மேற்பட்ட அரசுமற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும்தான் கணினிப் பாடத்துக்கென்று நிரந்தரமான ஆசிரியர் உள்ளார். மற்ற பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழக நிதியின் மூலமும், சில பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் மூலமும் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.ஆனால், இதில் உள்ள பிரச்னை என்னவென்றால், அரசு வகுத்துள்ள விதியின்படி சிறப்பு ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு மூன்று நாள்கள்என 12 நாள்கள்தான் பணிக் காலமாகும்.மேலும், அவர்கள் அரசின் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கணினிப் பாடம் கற்றுக் கொடுக்கநியமிக்கப்பட்டவர்கள். அவர்களால், அவர்களுக்கு இருக்கும் குறுகியநேரத்தில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான பாடத்தை முடிக்க முடியாமல் போகிறது.

மீதி நாள்களில் மாணவர்களை வழிநடத்த சரியான அதே துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் இல்லை.இதற்காக ஒருசில பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலம் தாற்காலிகமாக ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள்முழு நேரம் பணியில் உள்ளனர். ஆனால், இதில் மாணவர்களால் கொடுக்கப்படும் பணத்தின் மூலம்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது.இதனால் மாணவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்படுத்தப்படுகிறது, மேலும், மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில்போதிய பணம் வசூலாவதில்லை.இதனால் பகுதிநேர பாடமாகி விட்டது போன்ற தோற்றத்தை கணினித் துறை ஏற்படுத்துகிறது. எங்கும் கணினிமயமாகி விட்ட நிலையில் அரசுப் பள்ளிகளில் இப்படிப்பட்ட நிலை நீடிப்பது, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.

மேலும், 2013 ஆம் வருடம் தகுதித் தேர்வின் மூலம் நீக்கப்பட்டவர்கள் 15 வருடம் காலம் பள்ளிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். அவர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும் அல்லது மீண்டும் தேர்வு வைத்து முழு நேர கணினி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அரசு இந்த விஷயத்தில் ஓர் உறுதியான நிலைப்பாடை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.

3 comments:

  1. ஓராண்டாக்கு மேல் ஆகியும் நிரப்பபடாமல் இருக்கும் 652 கணினிஆசிாியா் பணியிடம்
    தமிழ்நாடு கணினி பிஎட் பட்டதாாி ஆசிாியா் நல சங்கத்தின் மாநில பொது செயலாளா் கிறிஸ்து ராஜா கூறியதாவது

    அரசு மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றிய 652 கணினி பயிற்றுநா்கள் உயா்நீதிமன்ற உத்தரவுபடி பள்ளியிலிருந்து கடந்த 27-07-14 முதல் வெளியேற்றபட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னமும் நிரப்பபடவில்ைல, இதனால் மாணவா்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது,தற்போது முதன்மை கல்வி அலுவலா் முலம் டெப்டேசன் முறயில் வாத்திற்கு 2 நாள் வீதம் வேறு பள்ளியில் பணிபுாியும் தற்சமயம் பாடம் நடத்துகின்றனா்,தரம் மேலும் தரம் உயா்த்தபட்ட மேல்நிலை பள்ளிகளில் கணினி ஆசாியா் இல்லாமல் பாடபிாிைவயே முடும் நிலை ஏற்பட்டுள்ளது,மாணவா்களின் செய்முறை பயிற்சி பாதிக்கும் நிலை உருவாகமல் இருக்க கணினியில் பிஎட் முடித்தவா்ள் 10,000த்திற்கும் அதிகமாணோா் இருந்தும் அரசு எங்கைள நியமிக்க தயங்குவது ஏணோ. என்று தனியும் இந்த பணிநியமன தாகம் .......

    ReplyDelete
  2. தமிழக அரசே எங்களையும் வாழவையுங்கள் கண்ணீருடன் கணினி ஆசிரியர்கள் கல்வி செய்திக்கு நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி