மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவது ஆசிரியர்களின் பொறுப்பு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2014

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவது ஆசிரியர்களின் பொறுப்பு - தினமலர்

"உயர்கல்வி வழங்கும் அரசு கல்லூரிகள், தொழிலதிபர்களுடன் ஒருங்கிணைந்து, மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவது ஆசிரியர்களின் பொறுப்பு,'' என, உயர்கல்வி துறை அமைச்சர் தேஷ்பாண்டே கூறினார்.

பெங்களூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஒவ்வொரு மாணவருக்கும், தரமான கல்வி பெறுவதுடன், நல்ல வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்பது முக்கிய குறிக்கோளாக இருக்கும். இதை நிறைவேற்ற, ஆசிரியர்களின் உதவி அவசியம். வெறும் கல்வியை மட்டும் போதிக்காமல், மாணவர்களுக்கு நல்ல குணநலன்களை கற்றுத் தருவதிலும், ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று, மாணவர்கள் கல்வியாளர்களாக உயர்ந்தால் மட்டும் போதாது. நல்ல நடத்தை, பின்னணி இல்லாவிட்டால், சமுதாயத்தில் கவுரவம் கிடைக்காது. கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, அரசு தயாராக உள்ளது. ???? கல்வி துறை பதவிகள், சி.இ.டி., மூலம் நிரப்பப்படும். தற்போது, 17 லட்சம் மாணவர்கள் உயர்கல்வி பெறுகின்றனர். மேலும், 53 லட்சம் மாணவர்கள், உயர்கல்வியில் இருந்து விலகியுள்ளனர். இவர்களுக்கும், கல்வி வழங்க, அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது.

வேலை வாய்ப்புக்கான போட்டி அதிகமாக உள்ளது. இதில் போட்டியிட, மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். அரசு கல்லூரிகளில், உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தொழில் அதிபர்களுடன் இணைந்து, வேலை வாய்ப்பு பெற்று தருவது, ஆசிரியர்களின் பொறுப்பாகும். அரசு கல்லூரிகளின் ஆய்வகக் கட்டணம், மாணவர்களுக்கு திரும்ப தரப்படும். அரசு கல்லூரிகளில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது அரசின் கடமையாகும். இதுவரை கல்லூரிகளில் ஆய்வக கட்டணம் பெறப்பட்டு வந்தது. இந்தாண்டு முதல், மாணவர்களிடமிருந்து பெற்றுள்ள ஆய்வக கட்டணம் திருப்பி தரப்படும்.

2 comments:

  1. ABOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......

    * தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ,கடைசி 2 நாட்களில் மட்டும் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் ,தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.

    * மேலும்,இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சுமார் 500 -1000 ஆசிரியர்கள் வழக்கில் இணைய உள்ளனர் என்பது வழக்கை மேலும் வலுபடுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது .

    *நேற்று வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
    உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
    * TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்

    * வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
    சேம்பர் எண் : 222
    *வழக்கறிஞர் திரு .சங்கரன்
    சேம்பர் எண்: 354
    * வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
    * வழக்கறிஞர் திரு .நமோ.நாராயணன்

    மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....

    நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
    திரு. கருப்பையா 9942342608

    ReplyDelete
  2. ஆசிரியர்களுக்கே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி