முதன்மை கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்ட தலைமையாசிரியர் இடைநீக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2014

முதன்மை கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்ட தலைமையாசிரியர் இடைநீக்கம்.


அரசுப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்டது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், ஊராட்சித் தலைவர் காந்திமதி சேதுராமனை தேசியக் கொடி ஏற்ற, தலைமையாசிரியர் செல்வமணி அனுமதிக்கவில்லை. இதுகுறித்து தலைவர் காந்திமதிசேதுராமன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, புகார் குறித்து விசாரணை நடத்த கல்வி அதிகாரிக்கு ஆட்சியர் ராஜாராமன் உத்தரவிட்டார்.இதன்பேரில், தர்மபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி விசாரணைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தலைமையாசியர் செல்வமணி, கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டையைக் கேட்டுள்ளார்.

மேலும், பள்ளி அலுவலக ஆவணங்களை தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து தலைமையாசிரியர் செல்வமணியை இடைநீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.இந்த நிலையில், வட்டார உதவி தொடக்கக் கல்வி அதிகாரி திருநாவுக்கரசு வியாழக்கிழமை, போலீஸ் பாதுகாப்புடன் தர்மபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு வந்து இடைநீக்க உத்தரவை செல்வமணியிடம் கொடுத்தார். மேலும் இப் பள்ளியின்தலைமையாசிரியராக அங்கு ஆசிரியையாகப் பணியாற்றும் ரேகா என்பவர் (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.

9 comments:

  1. H.M sir u are great..!
    Neenga senchathu thapea ella..!

    ReplyDelete
  2. தலைமை ஆசிரியர் செல்வ மணி சார் மீது தவறேதும் இருப்பதாக என் கண்களுக்கு தெரியவில்லை .ஊராட்சி மன்ற தலைவரை வைத்து தான் கொடி ஏற்ற வேண்டும் என விதி அல்லது சுற்றறிக்கை ஏதும் வழங்க பட்டுள்ளதா ? நிமிர்ந்து நின்ற ஓர் தலைமை ஆசிரியரை இந்த அரசு அரசியல்வாதிகளிடம் சரணடைய கட்டாயப்படுத்தி உள்ளது .அதற்கு கல்வி மேல் அதிகாரிகளும் துணை .தனது முழு பொறுப்பிலுள்ள பள்ளிக்குள் அனுமதியின்றி உட்புகும் யாரிடமும் அடையாள அட்டை கேட்க தலைமை ஆசிரியருக்கு சுதந்திரம் உண்டு .அடையாள காட்ட மறுக்கும் எவருக்கும் தனது பொறுப்பில் உள்ள எந்தவித ஆவணத்தையும் காட்ட மறுத்ததை மனதார வரவேற்கிறேன் .ஆசிரியர் சங்கங்களே வேடிக்கை பார்க்காதீர்கள் .நாளை உங்கள் முதுகெலும்பும் வளைக்கப்படும் .

    ReplyDelete
  3. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  4. Idhil thaveredhum illaiye... evan schoolkkulla vandhalum koozhai kumbidu pottu.. avan ketkkara recorda kattanumnu avasiyame illa... avanunga enna pannuvanga?. Suspend panni utkkara vachi sambalam thara poranga.. hm s na ellarukkum adimaiya enna?.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி