தேவகோட்டை -ஆக -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் கலைமாமணி விருது பெற்ற தஞ்சைகண்ணாடி ஓவியக் கலைஞர் கண்டனூர் ஆவுடையப்பன் மாணவ,மாணவிகளுக்கு ஓவியங்கள்வரைவது தொடர்பாக ஒரு நாள் பயிற்சி அளித்தார்.
முதலில் மாணவ,மாணவிகள் ஏற்கனவே வரைந்த ஓவியங்களைபார்வையிட்டு திருத்தம் செய்தார் .அனைத்து மாணவர்களையும் வெள்ளைத்தாளில்முதலில் பென்சில் ஓவியமாக தாமரையை வரைய சொன்னார்.பென்சிலால் வரையும்போதுஎப்படி எல்லாம் வரைய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினார்.அவருடைய மனைவி உமையாள்ஆச்சியும் உடனிருந்து பயற்சி அளித்தார்.கலைமாமணிஓவியர் ஆவுடையப்பன் பயற்சியில் பேசும்போது கூரியதாவது , குழந்தைகளின் ஓவியம்எப்பொழுது முழுமையடையும் என்றால் என்னைப் போன்ற ஓவிய ஆசிரியர்களால் திருத்தம்செய்யப்படும்போதுதான் அவை முழுமையடையும் .பென்சில் ஓவியம்,வண்ண ஓவியம்இவற்றிற்கு தனித் தனியே நோட்டு வைத்து வரைய வேண்டும்.ஓவியம் வரைந்து பழகவேண்டும் என்பது அச்சடிக்கப்பட்ட படத்தைப் பார்த்து வரையாமல் வரைந்த ஓவியத்தைபார்த்து வரைவது ஆகும்.முதலில் வெளி வட்டம் வரைந்து பழக வேண்டும்.வரைந்து பழககூடிய நோட்டுக்களை வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.தாளில் கோடு போட்டு பாதியாக
வரைந்து பழகுதல் வேண்டும்.எப்பொழுதும்நிதானமாக,பொறுமையாக வரைய கற்றுக் கொள்ளவேண்டும்.
ஓவியம் வரைய அதிக நேரம்எடுத்துக் கொண்டால் ஓவியம் சிறப்பாக அமையும் இவ்வாறு பேசினார்.மாணவிகள்சொர்ணம்பிகா,கிருஷ்ணவேணிபரமேஸ்வரி,,காயத்ரி,சௌமியா,பவனா ,மங்கையர்க்கரசி மற்றும் மாணவர்கள்நடராஜன்,பவித்ரன் ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு பதில்கள் பெற்றனர்.பயிற்சியின்நிறைவாக ஓவியர் சில மாதிரி படங்களை மாணவர்களுக்கு வழங்கி பயிற்சிஅளித்தார்.பயிற்சியினை ஆசிரயர் முத்துலெட்சுமி தொகுத்து வழங்கினார்.மாணவன்கண்ணதாசன் நன்றி கூறினார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள்செய்திருந்தார்.
பட விளக்கம் :
1) IMJ-1209 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் ஓவியம் வரைவது தொடர்பான பயற்சி முகாமில் கலைமாமணி விருது பெற்றதஞ்சை கண்ணாடி ஓவியக் கலைஞர் கண்டனூர் ஆவுடையப்பன் மாணவ,மாணவிகளுக்குஓவியங்கள் வரைவது தொடர்பாக ஒரு நாள் பயிற்சி அளித்தார்.உடன் உமையாள்ஆச்சி,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்
2) IMJ-1214,1216,1201 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்ஓவியம் வரைவது தொடர்பான பயற்சி முகாமில் கலைமாமணி விருது பெற்ற தஞ்சை கண்ணாடிஓவியக் கலைஞர் கண்டனூர் ஆவுடையப்பன் மாணவ,மாணவிகளுக்கு ஓவியங்கள் வரைவதுதொடர்பாக ஒரு நாள் பயிற்சி அளித்தார்.உடன் உமையாள் ஆச்சி
hai! iam intreasted arts !
ReplyDelete