அரசு பள்ளிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கும்பணி நியமன ஆணை தயார் நிலையில் உள்ளது.வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறைக்கு 1,816 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 ஆசிரியர்களும் என மொத்தம் 12,347 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த வாரம் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
பணிநியமன உத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் பணி நியமன ஆணை வழங்க இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவை எதிர்பார்த்து இருக்கிறார்கள். உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவை அவர்கள் கலந்தாய்வுசென்றுவந்த மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் மூலம் வழங்க தொடக்கக் கல்வித்துறையிலும், பள்ளிக் கல்வித்துறையிலும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணி நியமன ஆணை ஆன்லைனிலேயே தயாராக இருப்பதால், நீதிமன்ற உத்தரவு வந்தும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக உத்தரவை விரைந்து வழங்கிட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
12437 ஆசிரியர்களுக்கு பனி நியமன ஆணை தயார்- அதிகாரிகள் தகவல் - ஹிந்து -தமிழ் - நாளிதழ்.
ReplyDeleteதடை ஆணை வந்த அன்று யாருக்கு நம்பிக்கை தெரிவித்து அதிகாரிகள் மற்றும்மொரு அரசாணை வந்தால் அதற்கேற்பவும் பட்டியல் தயாரித்து வெளியிடப்படும் என்று கூறினார்களாம்?.....
Deleteகல்வி துறை அதிகாரிகள் இதுவும் தற்காலிகமானது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று கூரவில்லையா?... மற்றொரு தடை ஆணை வந்தவுடன் கூறுவார்களோ?....
DeleteDear sir
ReplyDeleteGood morning
All the best Teachers
Parpom
ReplyDeleteConfirma . this my life. This only Way I will take a decision
ReplyDeleteதேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteConfirm news yarum tension agathinga please 100% confirm Monday join panna poringa all the best all selected teachers.
ReplyDeleteநன்றி...நன்றி...நன்றி
ReplyDeleteஇதுதான் நீதி இதுதான் தர்மம் ன்னா பிறகு எதுக்கு கோர்ட்டு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதிரு.விஜயகுமார் சென்னை அவர்களை அன்புடன் www.selectedcandidates.com ற்குவவரவேற்கிறோம், தங்களின் நம்பகத்தன்மையான செய்திகளுக்காக காத்திருக்கும் நண்பர்கள்
ReplyDeleteதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் .......
ReplyDeleteபின்
தர்மம் வெல்லும் .................
Govt is not for al.. court is not for al.. this s ly govt can do.. tamil nadu s purely captured by dictatorship.. it ll b proved today r within this week.. don't worry frnz.. all s well..
ReplyDeleteமிக்க நன்றி.......
ReplyDeleteThank you for useful information....
ReplyDelete"IDIYAPPA SIKKAL"
ReplyDeleteCONTINUES......
NETRU POL INDRUM !!
ReplyDeleteDON'T EXPECT ANYTHING TODAY !!
Today case come to court
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகல்வி துறை அதிகாரிகள் இதுவும் தற்காலிகமானது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று கூறவில்லையா?... மற்றொரு தடை ஆணை வந்தவுடன் கூறுவார்களோ?........
ReplyDeleteதமிழக வரலாற்றில் 2011 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் plus 2 ,degree, Bed ல் பெற்ற மதிப்பெண்களை கொண்டு பணி நியமனம் செய்யபட்டதே கிடையாது...
ReplyDelete2012 ல் Tet எழுதி பாஸ் ஆனதால் மட்டுமே அரசு வேலை கொடுத்தது.weightage systam மூலம் பணி வழங்கப்பட்டது என தப்பி தவறி வாய் வார்த்தைக்கு கூட சொல்லி விடாதீர்கள்.
2012 ல் weightage முறை என்பது தரவரிசை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
தடை ஆணை வந்த அன்று யாருக்கு நம்பிக்கை தெரிவித்து மற்றுமொரு அரசாணை வந்தால் அதற்கேற்பவும் பட்டியல் தயாரித்து வெளியிடப்படும் என்று கூறினார்களாம்?.........
ReplyDeletesecond vacant kana selection list yepo varum.anybody ans me
ReplyDelete