ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து
தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை
மறுப்பு தெரிவித்துள்ளது.
வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனக்கோரி, நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியை சேர்ந்த பவுசிநேசல் பேகம், புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட 18 உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சசிதரன், ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்திக் கொள்ளலாம். ஆனால், பணி நியமனங்கள் வழங்கக்கூடாது என நேற்று (3ஆம் தேதி) உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சோமையாஜி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனக்கோரி, நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியை சேர்ந்த பவுசிநேசல் பேகம், புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட 18 உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சசிதரன், ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்திக் கொள்ளலாம். ஆனால், பணி நியமனங்கள் வழங்கக்கூடாது என நேற்று (3ஆம் தேதி) உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சோமையாஜி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
ஆனால்
தமிழக அரசின் இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க மறுத்துவிட்ட 2 நீதிபதிகள்
அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவு எங்களுக்கு இன்னும்
கிடைக்கவில்லை. எனவே, தமிழக அரசு நாளை மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என
உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி