மக்கள் நலப் பணியாளர் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2014

மக்கள் நலப் பணியாளர் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு.


மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அக்டோபர் மாதத்திற்குள் பணி வழங்காவிட்டால் ஊதியத்தை மட்டுமாவது வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் நலப் பணியாளர்கள் 13ஆயிரத்து 500 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அரசு மேல் முறையீடு செய்தால் அதை எதிர்த்து நாமும் முறையீடு செய்ய வேண்டும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி