பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியளிக்க கல்வித்துறை முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2014

பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியளிக்க கல்வித்துறை முடிவு.


புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சியளிக்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. புதிய பட்டதாரி ஆசிரியர்கள், கவுன்சிலிங் முடிந்து, நியமன உத்தரவு பெற்றதும், உரிய அரசு பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அதைதொடர்ந்து, ஆசிரியர்களுக்கு, இடைநிலை கல்வித்திட்டம் மூலம் புத்தாக்க பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, பாடவாரியாக மூத்த ஆசிரியர்களைக் கொண்டு, பயிற்சியளிக்கப்படும்.

இதில், மாணவர்களுடனான உறவு, எளிதில் புரியம்படி வகுப்பில் பாடம் நடத்துவது போன்றவை கற்றுத்தரப்படும்" என்றார்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி