சிறப்பு ஆசிரியர்கள் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2014

சிறப்பு ஆசிரியர்கள் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு


தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தல் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோவை அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில், தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்தனர்.
சங்கத்தின் மாநில தலைவர் சோலை ராஜா, மாநில அமைப்பாளர் சேசுராஜா, துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலுள்ள 16 ஆயிரத்து 549 சிறப்பு ஆசிரியர்களும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், உள்ளாட்சி இடைத்தேர்தலில் களப்பணியில் ஈடுபடுவதாகவும் உறுதிமொழி கடிதத்தை, அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் ஒப்படைத்தனர்.

அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''பாட ஆசிரியர்கள் மட்டுமின்றி, சிறப்பு ஆசிரியர்களையும் நியமித்து, அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் பணியாற்ற ஒவ்வொரு அமைப்பினரும் ஆர்வத்துடன் வருகின்றனர். சிறப்பாசிரியர்கள் ஓட்டுகள் மட்டுமின்றி, குடும்பத்தினர், உறவினர் ஓட்டுகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்,'' என்றார்.

2 comments:

  1. yarum yaruku yathere kedaiyathu ga, ne ga la etha oru news sa potu araceyala akathe ga naill new maitu poduga, kuriya soilla kuda vaipu kedaiya tha ,nata aluravaingalu ku yaivala o problem eruku ga sela problem avuingalu ku poie sara thu, athu nala tha poraduro ga,

    ReplyDelete
  2. தனிநபர் தாக்குதல் வாழ்கைக்கு உகந்ததன்று

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி