'மெரிட்' அடிப்படையில் பதவி : மத்திய அரசு அதிரடி உத்தரவு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2014

'மெரிட்' அடிப்படையில் பதவி : மத்திய அரசு அதிரடி உத்தரவு - தினமலர்

அனைத்து துறைகளிலும், முக்கிய பதவிகள் நியமனத்தில், 'மெரிட்' எனப்படும் தகுதி அடிப்படையிலான பட்டியலை பரிந்துரைக்குமாறு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.


இதுகுறித்து, மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து துறைகளின் முக்கிய பதவிகள் நியமனத்தில், தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல், 'அபாயின்மென்ட் கமிட்டி ஆப் கேபினட்' எனப்படும், ஏ.சி.சி.,க்கு பரிந்துரைக்கப்படுகிறது. இதில், மெரிட் அடிப்படையிலான பட்டியல் பரிந்துரைக்கப்படாதது, தெரிய வந்துள்ளது. எனவே, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறைகளின் இணைச் செயலர், வாரியத் தலைவர், இயக்குனர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளின் நியமனத்தின் போது, மெரிட் அடிப்படை பட்டியலை அனுப்புமாறு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்படுகிறது.

3 comments:

  1. டி.என்.பி.எஷ்.ஷி. போலவே டி.ஈ.டி. மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டு தேவையான அளவிற்கு மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணியமர்த்தப்பட வேண்டும். இது மட்டுமே நல்ல தீர்வாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. those who are fighting for this weitage system why don't you fight at fist tet exam it self because at that time it self govt announced about weitage system but now peoples are fighting why and also G.O 71 was a altered form of ola weaitage system thats all why no one understand this dear teachers

      Delete
  2. Good decision is made by central government . If its applicable to all central and state government in all departments .if TN govt follows this in TET then its good for all. To select candidates follow rank list.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி