ONLINE COUNSELING: கல்வி துறைக்கு தேர்வான தட்டச்சர்கள் நாளை நியமனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2014

ONLINE COUNSELING: கல்வி துறைக்கு தேர்வான தட்டச்சர்கள் நாளை நியமனம்.


பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான 213 தட்டச்சர்கள், நாளை, 'ஆன் -லைன்'வழியில் நடக்கும் கலந்தாய்வில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:
டி.என்.பி.எஸ்.சி., மூலம் 213 தட்டச்சர்கள், பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களை பணி நியமனம் செய்வதற்கான, 'ஆன் - லைன்' கலந்தாய்வு, 20ம் தேதி (நாளை), மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.

வேலைக்கு தேர்வு பெற்றவர்கள், தங்கள் முகவரி சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்குச் சென்று, கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.கலந்தாய்வுக்கு, ஒரு மணி நேரம், முன்னதாக வர வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., வழங்கிய துறை ஒதுக்கீட்டு உத்தரவு கடிதம், கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை, தவறாமல் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் என் இனிய நண்பர்களுகல்கு மட்டும் காலை வணக்கம்.
    நேற்று பாலிமர் செய்தி: ஆசிரியர் தகுதிதத்தேர்வு வெயிட்டேஜ் தொடர்பான வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு .
    இன்று வானொலி செய்தி: ஆசிரியர் தகுதிதத்தேர்வு வெயிட்டேஜ் தொடர்பான வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு .
    **********************
    அடுத்த வார இறுதிக்குள் தீர்ப்பு வருமா?

    ReplyDelete
    Replies
    1. இடைநிலை ஆசிரியர்களுக்கு ..

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் காலிப்பணியிடங்களை அதிகப்படுத்த வலியுறுத்தி தனது கருத்துக்களை 5 நிமிடங்களில் வீடியோ கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அனைவரது பதிவும் குறுந்தகடுகள் மூலமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், அனைத்து அமைச்சர்களுக்கும் , கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இத்துடன் பதினைந்து பக்க அளவுள்ள கோரிக்கை மனுவை இணைத்து அனுப்ப வேண்டும்.
      நமக்காக யாரும் போராட வர மாட்டார்கள். நாம்தான் முன்வரவேண்டும். தயக்கம் வேண்டாம் ஆசிரிய நண்பர்களே. .
      எத்தகைய முக்கியமான வேலை இருந்தாலும் ஒரு நாள் மட்டும் சென்னை வந்து நம் கோரிக்கையை வலுப்படுத்துங்கள். நிச்சயம் கூடுதல் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அதனை பெற முடியும். .
      இது வே கடைசி முயற்சி, பின்னர் all educational website க்கும் நன்றி கூறி விடைபெறுவோம்.
      ஆதரவு அளித்த அனைத்து இதயங்களுக்கு நன்றி. .

      இப்படிக்கு
      சத்தியமூர்த்தி

      We can change everything,
      All come to chennai
      21.09.2014

      sathyamoorthy(Avinashi)
      95433 91234
      9597239898
      Sathyajith (Bangalore)
      09663091690
      Mahendran (chennai)
      7299053549.
      Ravi (kadalur)
      8675567007
      Dharmaraj (Ramnad)
      9843521163
      Kanagaraj (Theni)
      9597734532
      Karuppusamy (erode)
      7200670046
      sivadeepan (trichy)
      8012482604
      Sakthivel (dharmapuri)
      9094316566
      Kulanthaivel (kallakuruchi)
      9994282858
      Deva (vellur)
      9566203861
      Saravanan(vathalagundu)
      9003444100

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி