அரசு பள்ளிகளில் 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2014

அரசு பள்ளிகளில் 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப முடிவு.


அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) தலைமையில், நேர்முகத் தேர்வு குழு அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
தேர்வுக்கான, 50 மதிப்பெண்ணில், 40 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.மூன்று ஆண்டு பணி நியமனம் தொடர்பான வழிமுறைகளை, பள்ளிக்கல்வித் துறை செயலர், சபிதா வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கல்வி மாவட்ட அளவில், மூன்று ஆண்டுகள், முறையாக பணி முடித்த, பதிவறை எழுத்தர் (ரெக்கார்டு கிளர்க்) மற்றும் அடிப்படை பணியாளர்களுள், ஆய்வக உதவியாளர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட, 10ம் வகுப்பு கல்வித் தகுதியை பெற்று உள்ளவர்களின் முன்னுரிமை பட்டியலை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்தயாரிக்க வேண்டும்.

இன சுழற்சி முறை:

நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி, தகுதியானவர்களுக்கு, பணி மாறுதல் வழங்க வேண்டும். இந்த முறையில் நிரம்பிய இடங்கள் போக, மீதியுள்ள இடங்களை நிரப்ப, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து, பட்டியலை பெற்று, நேரடியாக நியமனம் செய்ய வேண்டும். இன சுழற்சி, வயது வரம்பு உள்ளிட்ட விதிகளை பின்பற்றி, பதிவுதாரர் பட்டியலை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெற வேண்டும்.பின், பட்டியலில் இடம்பெறும் பதிவுதாரர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு, நேர்முகத் தேர்வு நடத்தி, தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

குழு விவரம்:

அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், நேர்முகத் தேர்வு குழுவின் தலைவர்.நேர்முக தேர்வுக்கு, 40 மதிப்பெண் ஒதுக்கீடு மாவட்ட கல்வி அலுவலர், செயலர்.ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆகியோர், உறுப்பினர்களாக இருப்பர்.வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமைக்கு, அதிகபட்சமாக, 5 மதிப்பெண், உயர்கல்வி தகுதி (பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பு) இருந்தால், அதற்கு, 5 மதிப்பெண் வழங்க வேண்டும்.மேலும், நேர்முகத் தேர்வு குழு தலைவர், செயலர், உறுப்பினர்கள் ஆகிய நான்கு பேரும், தலா, 10 மதிப்பெண் வீதம், 40 மதிப்பெண் வழங்குவர்.மொத்தம், 50 மதிப்பெண் அடிப்படை யில், தகுதி வாய்ந்தவர்களை, தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு, சபிதா தெரிவித்து உள்ளார்.

நேர்மையாக நடக்குமா?:

நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் அதிகபட்சமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால், இந்த மதிப்பெண் தான், நியமனத்தை தீர்மானிக்கும்.மாவட்ட அளவில், கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியரும் சேர்ந்து நடத்தும் நேர்முகத் தேர்வு, நேர்மையான முறையில் நடக்குமா என, கேள்வி எழுந்துள்ளது.

கல்வியாளர் கருத்து:

இதுகுறித்து, கல்வியாளர், பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகை யில்,”நேர்முகத் தேர்வுக்கு, 40 மதிப்பெண் என்பது, நியாயம் கிடையாது. ஒன்று, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டும், பணி நியமனம் நடக்க வேண்டும். இல்லை எனில், போட்டித்தேர்வு மூலம், தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்,” என்றார்.

23 comments:

  1. 40 question kapathu saatheyam ma ?

    ReplyDelete
  2. ST marainthura poraga kuijam athega ma placement thara soilluinga sir, ST 1 aillathu 2 ippude tha tharaga sir, ples inform tnvellaivaaippu office sir

    ReplyDelete
  3. GO71 & 5% சம்பந்தமான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்ய தேவையான அனைத்து ஆவனங்களும் சுப்ரீம் கோர்ட் சீனியர் லாயர் நளினி சிதம்பரம் ஆபிசில் ரெடியாகிவிட்டது. நாளை இறுதி செய்யப்படுகிறது. திங்களன்று சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் பைல் செய்வது உறுதியாகிவிட்டது. காலம் தாழ்த்தாமல் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் கீழ்கண்ட முகவரியில் சென்று பெயர் சேர்த்து கொள்ளவும்.

    ஆபீஸ் முகவரி.:-

    கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அருகில், டாக்டர் ரங்கராஜன் டவர்ஸ், 7 வது மாடி. ஆபிஸ் நெம்பர். 04426416803

    ReplyDelete
    Replies
    1. Dear Teachers
      donot miss the chance.enrole enmass and you will win.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. yeanda prakash nollakai un velaya paruda

    ReplyDelete
  6. matravarai avamadhikum nea ellam teacher

    ReplyDelete
  7. BC & MBC TAMIL MAJOR 67.50 ABOVE CANDIATES ONLY CALL 8883773819

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. சிறப்பாசிரியர் நியமனம் எப்போது ?.... யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்...

    ReplyDelete
  10. திரு.விஜயகுமார் சார் ,சிலபேர் சொல்லுகிறார்கள் ஆ.தி & மை நொடிபிக்கேசன் கேன்சல் ஆகிவிடுமுனு.அது உண்மையா லிஸ்ட் வருமா வரதா. ப்ளீஸ் சொல்லுங்கள்.

    ReplyDelete
  11. JJ BAIL KIDAVILLAI ENTRAL ENTHA POSTINGUM PODA MATTANGA...............

    MAY BE ALL VACANCY FILL FOR NEXT GOVERMENT FORM AFTER - 2016

    ReplyDelete
  12. List வரும் பொறுமையாக இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Sir,Thanking You very much. I believe only your comments. If know details of adw &minority list pls update your valuable comments.Always ur comments accurately Correct & very useful.

      Delete
    2. Mr Vijayakumar sir that am uyarthapatta schools Ku posting epdi pods poranga visarithu solunga plz trb contact no kudunga plz

      Delete
    3. I'm waiting for ur reply or if u can give ur no or mail I'd plz

      Delete
  13. hai dear friends tommorrow may be ADW and MINORITY list vida vaippu ullathu appadi ellai endral one month kuda akalam this is con firm news so nalaikku list varanumnu god ta vendikonka

    nalai varavillai endral nam 13.10.14 (monday) nam chennai sendru trb and adw welfare and sc/st commison and minority commison akiya edankaluku sendru virainthu pani niyamam seyya valiyuruthuvom nam amaithiyaka erunthal kandippaka late aki konduthan erukum en namakkum minoruty people kum list ida villai endra karanathai kettu pin avarkalin pathilai vaiyhu adutha katta nadavadikkaikalil erankuvom

    ReplyDelete
  14. Akilan sir sekaram list vara vendikaran....

    ReplyDelete
  15. I am also waiting for minority language postings

    ReplyDelete
  16. Akilan sir nalaike list vanda nala irukum la. Romba kastama iruku sir nanum elorukitayum kekuren no use sir

    ReplyDelete
  17. Wt about relaxation case trb appeal porangala any news pls update ur valuable suggestion sir v r from minority lang

    ReplyDelete
  18. Mr.VIJAYKUMAR CHENNAI SIR, I HAVE A DOUBT. PLS CLARIFY IT. IN MINORITY VACANT REPORT ONLY LIST FROM SCHOOL EDUCATION WAS PUBLISHED. IS THERE ANY CHANCE FOR VACANCY REPORT FROM ELEMENTARY EDUCATION. I MEAN IS THERE ANY CHANCE FOR 2 LIST LIKEW DSE( DIRECTORATE OF SCHOOL EDUCATION ) AND DEE( DIRECTORATE OF ELEMENTARY EDUCATION) AND ALSO PLS GIVE UR MOB NO AND EMAIL ID. THANK U SIR...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி