TNTET "மிகமுக்கியம்" பணியாணை பெற்றும் பணியில் சேராதவர்கள் கவனத்திற்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2014

TNTET "மிகமுக்கியம்" பணியாணை பெற்றும் பணியில் சேராதவர்கள் கவனத்திற்கு

"பணியில் சேராத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்ய உத்தரவு" - தினமணி 



பணி நியமன ஆணை பெற்றும் பணியில் சேராத ஆசிரியர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் (ந.க.எண்: 025400, நாள் 15-10-14) கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தொடக்க கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட ஒதுக்கீடும், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களால் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பணி நியமன ஆணை பெற்ற பல இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் இதுவரை பணியில் சேரவில்லை. அப்படி பணியில் சேராதவர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காரணம் கேட்டு அறிவிக்கை அனுப்ப வேண்டும்.

அதன்பின்பும் 27-10-14-க்குள் பணியில் சேராவிட்டால் அவர்களின் பணி நியமன ஆணையை ரத்து செய்ய வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. பணம் பத்தும் செய்யும் ்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி