Nov 27, 2014
Home
kalviseithi
குறைந்த மாணவர்களைக் கொண்ட மாநகராட்சிப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
குறைந்த மாணவர்களைக் கொண்ட மாநகராட்சிப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
மாணவர்
சேர்க்கை 25க்கும் குறைவாக உள்ள
ஏழு மாநகராட்சி பள்ளிகளை, தனியார் மூலம் நடத்தி,
வரும் கல்வியாண்டு முதல் சேர்க்கையை அதிகரிக்க,
சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை
மாநகராட்சி பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்,
ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்த மாணவர்கள்
எண்ணிக்கை, தற்போது 80 ஆயிரமாக குறைந்துள்ளது.
தனியாருக்கு
எது?
குறிப்பாக,
திருவல்லிக்கேணி, சேத்துபட்டு, தி.நகர் ஆகிய
பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில்,
மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த
வகுப்பிலும் சேர்த்து 50 மாணவர்கள் மட்டும் உள்ள பள்ளிகள்
நகரில் அதிகமாக உள்ளன.
மொத்தம்
25 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் ஏழு
பள்ளிகள் தற்போது இயங்கி வருகின்றன.
அந்த பள்ளிகளை மூட விரும்பாத மாநகராட்சி
நிர்வாகம், 25க்கும் குறைவாக மாணவர்
சேர்க்கை உள்ள பள்ளிகளை, தனியார்
மூலம் நடத்தி, சேர்க்கையை அதிகரிக்க
திட்டமிட்டுள்ளது.
அதற்காக,
மும்பை, டில்லி, ஐதராபாத் ஆகிய
நகரங்களில் உள்ள பெரிய கல்வி
நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை நடத்திய
மாநகராட்சி கல்வித்துறை, ஏழு பள்ளிகளை தேர்வு
செய்து, அப்பள்ளிகளை வரும் கல்வியாண்டு முதல்
தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி
பள்ளி கட்டடம், உபகரணங்கள், மின் கட்டணம், பராமரிப்பு,
மாணவர்களுக்கான சலுகைகள் வழங்குவது ஆகிய பணிகளை மாநகராட்சி
மேற்கொள்ளும்.
நிர்வாகம்,
ஆசிரியர்கள் நியமனம், மாணவர் சேர்க்கை ஆகிய
பணிகளை, பள்ளியை நடத்தும் தனியார்
நிறுவனம் மேற்கொள்ளும். அதற்காக ஒரு மாணவனுக்கு
10 ஆயிரம் ரூபாய் வரை ஆண்டிற்கு
செலவிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
எந்தெந்த
பணிகள்?
இதுகுறித்து,
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தி.நகர்., திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு
உள்ளிட்ட தனியார் பள்ளிகள் ஆதிக்கம்
அதிகம் உள்ள இடங்களில், மாணவர்
சேர்க்கை குறைவாக உள்ளது. இந்த
பகுதிகளில் மட்டும் ஏழு பள்ளிகளை
தனியாரிடம் ஒப்படைக்க தேர்வு செய்யப்பட்டது.
கல்வியாண்டு
துவங்குவதற்கு முன், இந்த பள்ளிகளை
நடத்த உள்ள நிறுவனங்கள் விரும்பும்
வகையில், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
சீருடை மாற்றம் குறித்து முடிவு
செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக்க
பகுதிக்கு விடிவு எப்போது?
சென்னை
மாநகராட்சி விரிவாக்க பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய
பள்ளிகள், நகராட்சி பள்ளிகளை, மாநகராட்சி கல்வித்துறை கட்டுப்பாட்டில் எடுத்து பராமரிக்க, தொடர்ந்து
பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து அரசாணை
வெளியிட, மாநகராட்சி, அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளது. ஆனால்,
இதுவரை அனுமதி கிடைக்காததால், விரிவாக்க
பகுதி பள்ளிகள் பரிதாப நிலையில் உள்ளன.
அரசு கல்வித்துறையை காட்டிலும், மாநகராட்சி கல்வித்துறை மூலம், மாணவர்களுக்கு அதிகமான
சலுகைகள் வழங்கப்படுவதால், விரைவில் விரிவாக்க பகுதி பள்ளிகளை, மாநகராட்சியோடு
சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
Recommanded News
Related Post:
7 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Government correct ah postings pota ethukku intha problem.
ReplyDeletepesama chennai managaraiye thaniyaritam vittuvidungal pirachinai solve.
DeleteGood kuppusami Sir
ReplyDeleteTeacher patrakuraiyal than eppadi
ReplyDeleteNaama careful ah irukkanum.illaina total tn schools full ah private ku vidruvanga pola.oruvelai 7 school um sample ah irukkumo?
ReplyDeleteBrothers and Sisters, Every school must be maintain by Govt.Sectors but the situation is bad then this Process is nothing wrong. Because No one SCHOOL WILL CLOSED. That is main. Every one done their work sincerely Else this situation is come to total school. Every president, Councilor, Chairman, ward member, PTA members , OLD STUDENTS .and PUBLIC want to save our area school. Because A THOUSAND CRIMINAL IS CREATED WHEN A SCHOOL IS CLOSED . so EVERYONE realize that.
ReplyDeleteRIGHT DECISION. KEEP THE ELEMENTARY LEVEL STUDENT. PRIVATE SECTOR CAN TAKE CARE.
ReplyDeleteVENKATESWARAN