மெதுவாக கற்கக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு பாடத்திலும் அவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில் தனியாக கையேடு அச்சடித்து அந்தந்த மாவட்ட கல்வி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு விநியோகித்தது. அதைக்கொண்டு ஆசிரியர்கள் பாடம் கற்பித்தனர். அதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தது. இந்த வருடம் 95 சதவீத தேர்ச்சி கொண்டு வர த.சபீதா முடிவு செய்துள்ளார்.
நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் குறைந்த தேர்ச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள பென்டிங் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அந்த 6 மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், அனைத்து பாடத்திலும் நன்றாக பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை துணை செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், இணை இயக்குனர்கள் ராஜேந்திரன், கருப்பசாமி, கார்மேகம், முதன்மை கல்வி அதிகாரிகள் அ.அனிதா, சாந்தி, பி.பொன்னையா, குமார், பாலமுரளி, சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-
அரசு தேர்வில் எந்தெந்த பிரிவில் இருந்து கேள்விகள் எடுக்கப்படும் என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காக புளூபிரிண்ட்டை வகுப்பில் ஆசிரியர்கள் ஒட்டவேண்டும். மெதுவாக கற்கும் மாணவர்களிடம் எந்த பாடத்தில் எந்த பகுதியில் பலவீனம் உள்ளவர்கள், எதில் ஆர்வம் உள்ளவர்கள் என்பதை அறிந்து அதற்கேற்ற படி அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அரையாண்டு தேர்வு விடுமுறையிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி கொடுக்கவேண்டும். இப்படி செய்தால் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்.
இவ்வாறு முடிவு செய்யப்பட்டது.
நேற்று பயிற்சி பெற்ற அந்த ஆசிரியர்களை கொண்டு அந்தந்த மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு தனியாகவும், பிளஸ்-2 பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு தனியாகவும் இன்று (சனிக்கிழமை) பயிற்சி நடத்தப்படுகிறது.
வெய்ட்டேஜை ரத்துசெய்ய கோரியும், அடுத்த பணிநியமனங்களில் முன்னுரிமை தரக்கோரியும் மீண்டும் ஓர் புரட்சி; தயராக இருங்கள்
ReplyDeleteகடந்த மாதம் செப்டம்பர் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெய்ட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தினோம் இன்று வரை நமக்கு நியாயம் கிடைக்கவில்லை...
தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பின் நிர்வாகிகள் வரும் திங்கள் சென்னை செல்ல உள்ளனர்....
வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழக சட்டபேரவை கூடவுள்ளது இந்நேரத்தில் நாம் நம் கோரிக்கைகளை முறையாக முதல்வர் மாண்புமிகு ஒ.பன்ணீர்செல்வம் அவர்களிடம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களிடமும் மேலும் திண்டுக்கல் உறுப்பினர் பாலபாரதி மேடம் போன்ற சமூக சிந்தனையாளர்களிடம் மனு கொடுத்து நமக்கக குரல் கொடுக்க வேண்டுவோம்...
ஒருவேளை நம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாள் போராடவும் தயாராக இருக்கிறோம் ஆசிரியர் சொந்தங்களே!!! நீங்களும் தயாராக இருங்கள்
இதைப் படித்து விட்டு பேஸ்புக் மற்றும் வாட்ஸப், கல்வி வலைதளம் அனைத்திலும் பதிவிடுங்கள்....உங்களால் முடிந்த சிறு உதவியாவது செய்யலாமே!!!
மேலும் உணர்வோடு பேச
செல்லத்துரை 98436 33012
கபிலன் 90920 19692
ராஜலிங்கம் புளியங்குடி
95430 79848