தொடக்க கல்வித்துறை புதிய உத்தரவு ஆசிரியர்கள் உயர்கல்வி பயில அனுமதி பெற புதிய வழிமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2014

தொடக்க கல்வித்துறை புதிய உத்தரவு ஆசிரியர்கள் உயர்கல்வி பயில அனுமதி பெற புதிய வழிமுறை


தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசுதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பயில சம்பந்தப்பட்ட துறையின் முன்அனுமதி பெறுவது அவசியம்.
இந்த அனுமதியை பெற உரிய அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

இந்த நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், ஆசிரியர்கள் அஞ்சல் வழிக்கல்வி மூலம் மேற்படிப்பு பயில அனுமதி வழங்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட உதவி மற்றும் கூடுதல்உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. எம்பில்., பி.எச்டி., ஆகிய மேற்படிப்புகளை அஞ்சல் வழியிலோ அல்லது பகுதி நேரமாகவோ, மாலைநேர வகுப்பு மூலமாகவோ பயில விரும்பும் ஆசிரியர்களுக்கு அவர்களது கடமை மற்றும் கற்பித்தலில் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சுற்றறிக்கையை அனைத்து உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு வழங்கிட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்புக்கு தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி