நிரந்தர பதிவாளர், தேர்வு ஆணையர் இல்லாத திறந்த நிலை பல்கலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2014

நிரந்தர பதிவாளர், தேர்வு ஆணையர் இல்லாத திறந்த நிலை பல்கலை

மூன்றாண்டுகளாக, நிரந்தர பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இன்றி, பொறுப்பு அதிகாரி களை கொண்டே, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை செயல்பட்டு வருவதாக, புகார் எழுந்துள்ளது.

விதிகளை மீறி...:

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை, துவக்கப்பட்டு, 10 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பேராசிரியர்களே, கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். இதில், பல்கலை பொறுப்பு பதிவாளராக இருந்த, பேராசிரியர் முருகனுக்கு, விதிகளை மீறி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது குறித்து, கவர்னர் வரை பிரச்னை சென்றது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. 'ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக இருப்பவர், அக்குழுவின் செயலரான பதிவாளர் பதவியில் இருக்கக்கூடாது' என, பல்கலை விதி இருப்பதால், பேராசிரியர் முருகன், சில தினங்களுக்கு முன், பதிவாளர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, அப்பதவிக்கு, கணிதத்துறை மூத்த பேராசிரியர், முருகன், பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அதே போல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கும், பதவியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: பல்கலையில், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவிகளுக்கு நிரந்தர நியமனத்திற்கு, கடந்த ஆண்டு டிசம்பரில், விளம்பரம் வெளியிடப்பட்டது. அதற்கு, பலர் விண்ணப்பித்தும் இதுவரை நியமனம் நடக்கவில்லை.

6 மாதங்களுக்குள்...:

விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளில் இருந்து, 6 மாதங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு, நியமனம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், விண்ணப்பங்கள் இயல்பாகவே ரத்தாகி விடும். ஆனால், இந்த விளம்பரம் வெளியிடப்பட்டு, 11 மாதங்கள் முடிந்து விட்டது. அதற்கு விண்ணப்பங்களையும் பரிசீலிக்க முடியாது. எனவே, இந்த விவகாரத்தில், அரசு தலையிட வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி