ஆண் ஆசிரியர்கள் விவரம் சேகரிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2014

ஆண் ஆசிரியர்கள் விவரம் சேகரிக்க உத்தரவு


பெங்களூரு: சிறுமியர் பாலியல் பலாத்கார சம்பவங்கள் எதிரொலியாக, பள்ளிகளில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்கள், ஊழியர்களின் முகவரி, மொபைல் எண், விரல் அச்சு ஆகியவற்றை சேகரிக்கும்படி, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
பலாத்கார குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில், முதல்வர் சித்தராமையா சமீபத்தில், ஐந்தாம் வகுப்புக்குட்பட்ட பள்ளிகளில், பெண் ஆசிரியர்களையே நியமிப்பதாக அறிவித்தார். மேலும், அனைத்து பள்ளிகளிலும், ஆண் ஆசிரியர்களின் முகவரி, புகைப்படம், விரல் அச்சு உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மைசூரு நகர போலீஸ் கமிஷனர், அங்குள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். மேலும், ஆசிரியர்களின் முகவரியை, நேரில் சென்று விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. oru asiriyarin thavaru anaithu asiriyarkum thalaikunivu...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி