அரசு ஊழியர்கள் காப்பீட்டுத் திட்டம்: சிகிச்சை பெறும் பட்டியலில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2014

அரசு ஊழியர்கள் காப்பீட்டுத் திட்டம்: சிகிச்சை பெறும் பட்டியலில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை

காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளின் பட்டியலில் பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளது. தனியார் மருத்துவமனைகளின் பட்டியலுடன் இந்த மருத்துவமனையும் இணைக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா நிறுவனத்தின் மூலமாக இந்தக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்கள், அவரது குடும்பத்தினர் ரூ.4 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெறலாம்.

மருத்துவமனைகள் பட்டியல்: அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் காப்பீட்டுத் திட்டத்தின் வழியாக தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை பெறலாம். எந்தெந்த மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெறலாம் என்பதை தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அந்தப் பட்டியலுடன் இப்போது 22 மருத்துவமனைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. அவ்வாறு சேர்க்கப்பட்டுள்ள பட்டியலில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த மருத்துவமனையானது, இப்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி