ஆசிரியர் நியமனத்தில் மோசடி: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2014

ஆசிரியர் நியமனத்தில் மோசடி: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை


அரசு உதவிப்பெறும் துவக்கப் பள்ளிக்கு, புதியதாக ஆசிரியர் நியமனம் செய்ததில், ஊழல் நடந்ததாக எழுந்த புகார் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், அரசு பள்ளியை போலவே, மாணவ, மாணவியருக்கு நலத்திட்டம், ஆசிரியருக்கு சம்பளம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் பகுதியில் அரசு உதவிப்பெறும் துவக்கப்பள்ளி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இந்த பள்ளியில், 80க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர். பள்ளியில், ஒரு தலைமையாசிரியர், நான்கு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொருஆண்டும் பதிவு புதுப்பிக்க வேண்டும்.

இந்த ஆண்டு கட்டட உறுதிச்சான்று, கட்டட உரிம சான்று, சுகாதார சான்று, தீயணைப்பு சான்று பெறவில்லை. கடந்த, ஐந்தாண்டுக்கு முன், ஒரு உபரி இடைநிலை ஆசிரியரை நியமனம் செய்தனர். அந்த ஆசிரியர், தகுதி தேர்வு மூலம் தேர்ச்சி பெறாதவர். இதற்கான ஒப்புதல் பெற, அப்போது இருந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் அனுப்பிய, 'பைல்' திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால்,சம்பந்தப்பட்ட உபரி இடைநிலை ஆசிரியருக்கு, டி.ஆர்.பி., விதிமுறையை மீறி, தற்போது பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, பல லட்சம் ரூபாய் லஞ்சமாக,வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. முறையற்ற பணி நியமனம் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாபு கூறியதாவது: சம்பந்தப்பட்ட பள்ளியின் உபரி ஆசிரியர் நியமனம், விதிமுறைக்கு உட்பட்டு நடந்தது. இந்த அலுவலகத்தில் பணியாற்றிய உதவியாளர் ஒருவர், தற்போது வேறு மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்று, அங்கிருந்து, 'மொட்டை பெட்டிஷன்' போட்டு பிரச்னை செய்து வருகிறார். நியமனத்தில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார். ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் மற்றும் லஞ்சம் பெற்றது தொடர்பான புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை நடந்து வருவதாக, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல்தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதிராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி