128 புதிய தொடக்கப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2014

128 புதிய தொடக்கப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?

தமிழக அரசு 128 தொடக்கப்பள்ளிகளை புதிதாக தொடங்க உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இதன்முலம் ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் கல்விபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.புதிய ஆசரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசாணை தற்போது வெளியிட்டாலும் புதிய பள்ளிகள் நடைமுறை பயன்பாட்டுக்கு வருவதற்கு ஆறுமாதங்கள் அல்லது அதற்கு மேலும் ஆகலாம்.அலுவலக நடைமுறைகள் நிதி ஒதுக்கீடு புதிய கட்டிடம் கட்டுதல் மாணவர் சேர்க்கை ஆசிரியர்களை பணியமர்த்தல் என பல்வேறு பணிகளை முடித்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என தெரிகிறது.

9 comments:

  1. அனைத்து சகோதர சகோதரி களுக்க்கும் எனது நண்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்

    ReplyDelete
  2. இன்று இந்திய சட்டத்தின் கடவுள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்நாளை செலவிட்ட சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம்

    இந்த நாளில் அவர் சுதந்திர இந்தியாவுக்காக செய்த தியாகங்களை நினைவு கூர்வோம்


    மேலும் அண்ணல் அம்பேத்கர் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் சொந்தக்காரர் கிடையாது

    இந்தியாவில் உள்ள அனைவருக்குமே பொதுவானவர் என்பதை நினைவில் இருத்தி கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  3. பல மதங்கள் கணக்கிட முடியாத சாதிகள் எண்ணற்ற வேறுபாடுகள் இந்தியாவில் இருந்தாலும் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து இருக்க காரணம் இந்தியாவில் சாதி , மதச்சண்டைகள் மிகக் குறைவு இதற்கு முக்கிய காரணம் அண்ணல் அம்பேத்கர் என்றால் அது மிகையாகாது

    வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா என்ன தான சூழ்நிலை சில நேரங்களில் நம்மை வேறுபடுத்தினாலும் , நமக்கு ஒரு பிரச்சணை அல்லது இயற்கை சீற்றம் என்று வரும் போது யாரும் சாதி மதம் வேறுபாடு பார்த்தது கிடையாது

    அங்குதான் இந்தியர், என்றும் தமிழன் என்றும் நிருபித்து காட்டுகிறோம்

    உலகில் இந்தியனாய் பிறந்தது நாம் செய்த புண்ணியம் அதிலும் தமிழனாய் பிறந்தது நமக்கு இறைவன் குடுத்த வரம்

    ReplyDelete
  4. நண்பர்களே நேற்று ADW SCHOOL, PIRANMILLAI KALLR SCHOOL , ஆசிரியர் நியமனம் தொர்பான வழக்கை முடிக்க அரசு எடுத்த முயற்சிகள் உங்களுக்கு தெரிய வாய்பில்லை அதனால் தான் விரக்தியில் அரசிற்கு எதிராக பேசுகிறீர்கள்

    உண்மையில் வழக்கின் நிலவரம் என்ன அந்த வழக்கில் பலரது சூழ்ச்சியை நீங்கள் அறிந்து கொண்டால் இவ்வாறு பேச மாட்டீர்கள்

    உங்களுக்கு பணி கிடைக்க வேண்டும் அது மட்டும் தான் தெரியும் அவ்வாறு நினைப்பது எவ்வளவு பெரிய சுயநலம் என்பது உங்கள் மனதை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்

    ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது Request பண்ண தான் முடியும் அதை தான் அரசு செய்து வழக்கை முடிக்க முயற்சி செய்கிறது

    மேலும் வழக்கை முடிக்க எளிய வழி அரசிற்கு தெரியும் அந்த இரு சகோதரர்களுக்கும் 2 பணியிடம் ஒதுக்கி வைத்து விட்டு மற்றவர்களுக்கு நிரப்பலாம் அவ்வாறு செய்வது நலத்துறை பள்ளிகளில் நமக்கு இருக்கும் முன்னுரிமையை பறிப்பதற்கு சமம் மற்றும் அது ஒரு தவறான முன்னுதாரனம் என்றும் அரசு நினைப்பதால் தான் வழக்கை நல்லபடியாக முடிக்க அரசு முயற்சிக்கிறது அதனால் தான் வழக்கு கால தாமதம் ஆகிறது

    ReplyDelete
  5. அது என்ன
    சகோதரரே உண்மையான தகவலை மட்டும் பதிவிடுங்கள் என்று கோவமாக மற்றவர்களை புரிந்து கொள்ளாமல் கமெண்ட் செய்கிறீர்கள்

    எனக்கு பொய்யான தகவலை பதிவிட வேண்டும் என்று ஒரு நாளும் எண்ணியதில்லை சகோ

    எந்த தகவலும் தெரியாமல் மன உளைச்சலில் இருப்பதை விட நமக்கு தெரிந்ததை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம் அது அவர்களது மன உளைச்சலை குறைக்கட்டும் என்பது தான் எனது எண்ணம்

    எனக்கு தெரியும் என்னுடைய நிலை என்ன என்றும் என்னுடைய ஒருவனால் 669 பேருடைய தலையெழுத்தை மாற்ற
    மாற்ற இயலாது என்பது

    ஆனால் ஒன்று மட்டும் முடியும் அவர்களது தன்னம்பிக்கையை குறைந்து விடாமல் பார்த்து கொள்ள அதற்காக தான் தகவல் பதிவிடுகிறேன்

    முன்பு சில காரணங்களுக்காக தகவல் பதிவிடாமல் இருந்ததும் உடனே உங்கள் சூழ்நிலையால் சென்னை வரவில்லை என்றும் தகவலை பதிவிடுங்கள் என்று கூறியதும் நீங்கள் தான் மறந்து விடாதீர்கள்

    இதுவரை நான் யார் மனதையும் புண் படுத்தி கமெண்ட் போட்ட தில்லை இந்த தகவலும் உங்களை புண் படுத்த அல்ல மற்றவர்களை பற்றியும் புரிந்து கொள்ளுங்கள் என்று தான் Sorry BROTHER


    ReplyDelete
  6. 10.12.14
    புதன்கிழமை வழக்கு வருகிறது வழக்கை முடிக்க அரசு உண்மையில் அதீத முயற்சி எடுத்து வருகிறது முடிவு நீதிபதி மனதில் மட்டுமே இருக்கிறது அவர் மனது வைத்தால் அன்றே முடியலாம் இல்லையெனில் ஜனவரி மாதம் தான் இதான் உண்மை

    நமக்கு Dec 20 க்குள் வழக்கு முடிந்தால் அது அரசின் மிகப்பெரிய முயற்சி யால் தான் இருக்கும்

    Dec 20 க்குள் முடிக்க முடியவில்லை என்றாலும் ஜனவரியில் இவ்வழக்கு மிக எளிமையாக முடிந்துவிடும்


    இதுதான் உண்மை காரணம் பகிர்ந்து கொள்ள முடியாது


    இனிமேல் நானும் எனது நண்பர்களும் இவ்வழக்கை பற்றி தகவல் பதிவிட மாட்டோம்

    நன்றி

    ReplyDelete
  7. இப்போது என்னிடம் வாங்கி கொண்டிருக்கும் புத்தகம் முதலில் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கவில்லை. கடந்த 2012 டெட் தேர்வு முடிந்த பின் டெட் தேர்வு மீண்டும் வருமா என்ற கேள்வி எழுந்தது. முதல் டெட் தேர்வு 66 மதிப்பெண் இரண்டாவது டெட் தேர்வு 78 மதிப்பெண் எடுத்தேன். இந்த இரண்டு தேர்விலும் எப்படி படிப்பது எது வரை படிப்பது என்பது எனக்கு தெரியவில்லை

    ஆனால் இரண்டு தேர்வுகளும் எப்படி படிப்பது எதை படிப்பது என்ற பாடத்தை கற்று கொடுத்தது. ஆனால் தேர்வு மீண்டும் வரும் வராது என்பதை பற்றி கவலை படாமல் ஒவ்வொரு வகுப்பாக தயார் செய்தோம் தினமும் தேர்வுகள் எழுதினோம். குறிப்பிட்ட வகுப்பை முடித்தபின் டெட் தேர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது புத்தகத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கபடுகின்றன அப்படியென்றால் ஏன் நாம் புத்தகத்தின் அனைத்து வரிகளையும் கேள்விகளாக மாற்ற கூடாது என்ற எண்ணம் உதித்தது அதை செயல்படித்தினோம்.
    நான் வேலை செய்து கொண்டு தான் படிக்கும் நிலை. என்னால் வேலையை விட முடியவில்லை குடும்ப சூழ்நிலை அப்படி.ஒவ்வொரு நாளும் நான் தூங்கியது வெறும் மணி 4 நேரம் தான். ஆனால் என்னால் தமிழ் மற்றும் சமூக அறிவியல் மட்டுமே தயார் செய்ய முடிந்தது. மற்ற இரண்டு பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏனென்றால் நேரம் இல்லை.இந்த இரண்டு பாடங்களில் நம்மை மீறி எந்த கேள்வியும் வர கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இறுதியில் நல்ல மதிப்பெண் பெற்றோம். அவ்வாறு உருவாக்கிய பேப்பர் எல்லாத்தையும் சும்மா ஒரு இடத்தில் வைத்து பார்க்க மனமில்லை. நான் கஷ்ட பட்டு எனக்காக உருவாக்கியதை உங்களுக்கு கொடுக்கிறேன் இது முழுவதும் புத்தகமாக மட்டுமே என்னிடம் கிடைக்கும் என்னுடைய தொடர்பு எண் 9976715765 Now I am Working as a Teacher In Tiruvannamalai Dist

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி