பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் செய்முறைத் தேர்வு: கல்வித் துறை திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2014

பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் செய்முறைத் தேர்வு: கல்வித் துறை திட்டம்


பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம்தேதி தொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல்கள் தேர்வுத்துறைக்கு வந்து சேர்ந்துள்ளது.
தற்போது அவற்றை சரிபார்க்கும் பணியில் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இதையடுத்து நேற்று நாமினல் ரோல் பட்டியல் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை சரிபார்க்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கூட்டம் நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறை அனுப்பிய பிரின்ட் அவுட்டுகளை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் நேரில் அந்த மையங்களுக்கு எடுத்து வர வேண்டும். திருத்தம் இருந்தால் அதே மையத்தில் திருத்தி இன்றே கொடுக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு கால அவகாசம் ஏதும் கொடுக்காமல் ஒரே நாளில் திருத்தம் செய்துகொடுக்க வேண்டும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.இந்த பணிகளை விரைவாக முடித்த பிறகு பிப்ரவரி 7ம் தேதியில் இருந்து பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை நடத்த தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. மேலும், தொழில் கல்வி பாடங்களில் இடம் பெற்றுள்ள தட்டச்சு பாடத்துக்கான எழுத்து தேர்வுடன் செய்முறைத் தேர்வும் நடப்பது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடக்கும் போதே, தட்டச்சு பாடத்துக்கான செய்முறைகளையும் முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கான நாமினல் ரோல் ஜனவரி 2ம் தேதி முதல் 6ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி