இளமைகாலம்:
* பிறந்த ஊர்: உறையூருக்கு அருகிலுள்ள "கோவூர்"
* மரபு: வேளாளர் மரபு.
* பாடியவை: நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகியவற்றில் இவரின் 18 * பாடல்கள் உள்ளன.
* அவைக்களத் தலைவர்: நலங்கிள்ளி என்ற மன்னன் கோவூர்கிழாரின் புலமையை அறிந்து அவரை "அவைக்களப் தலைவர்" ஆகினான்.
போரைத் தவிரித்த புலவர்:
* சோழர் மரபில் தோன்றிய நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் நெடுங்காலம் பகைமை இருந்து வந்தது.
* நலங்கிள்ளி உறையூருக்கு அருகில் உள்ள ஆவூர்க்கோட்டையை முற்றுகையிட்டான்.
* கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் "நீ வீரனாக இருந்தால் போரிடு; அல்லது கோட்டையை ஒப்படைத்துவிடு; இரண்டில் எதையும் செய்யாமல் கோட்டை மதிலுக்குள் ஒடுங்கியிருப்பது நாணும் தன்மையுடையது" என்றார்.
* கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம், "நெடுங்கிள்ளியே! உன்னோடு போர் புரிய, கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டிருப்பவன் பனம்பூ மாலையணிந்தசேரனும் அல்லன்; வேப்பம்பூ மாலையணிந்த பாண்டியனும் அல்லன்; சோழருக்குரிய அத்திமாலை அணிந்தவனே. உம் இருவருள் எவர் தோற்பினும் தோற்பது சோழர் குடியே" என்றார்.
* ஆதலால் "போரை ஒழிமின்" என்றார்.
மலையமான் பிள்ளைகளை காத்தல்:
*குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் புகார் நகரை தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். இவன் சிறந்த கவிஞன்.
*கிள்ளிவளவனுக்கும், கடையேழு வள்ளல்களுள் ஒருவனான மலையமான் திருமுடிக்காரிக்கும் பெரும் பகை இருந்தது. கிள்ளிவளவன் காரியின் இரு பிள்ளைகளையும் கவர்ந்து வந்து யானை காலில் இடறிக் கொள்ள முடிவு செய்தான்.
*கோவூர்கிழார் கிள்ளிவலவனிடம் சோழ முன்னோர்கள் பெருமை எடுத்துக்கூறி காரியின் இரு பிள்ளைகளையும் மீட்டார்.
சிறை மீட்ட செம்மல்:
*நலங்கிள்ளியை பாடி பரிசு பெற்ற இளந்தரையனார், நெடுங்கிள்ளியிடம் சென்று பாடினார்.
இளந்தரையனாரை நலங்கிள்ளியின் ஒட்டட்ரன் என்று கருதிய நெடுங்கிள்ளி அவரை *சிறையிலிட்டான்.
*கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் புலவர்களின் இயல்புகளை எடுத்துக்கூறி அவரை மீட்டார்.
திரிகடுகம்
இல்லர்க்கொன் றீயும் உடைமையும், இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள.
நல்லாதனார்
சொற்பொருள்:
*பால்ப்பற்றி - ஒருபக்கச் சார்பு
*சாயினும் - அழியினும்
*தூஉயம் - தூய்மை உடையோர்
*ஈயும் - அளிக்கும்
*நெறி - வழி
*மாந்தர் - மக்கள்
*வனப்பு - அழகு
*தூறு - புதர்
*வித்து - விதை
ஆசிரியர் குறிப்பு:
*திருகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்.
*நூறு வெண்பாக்களை கொண்டது.
*"சுக்கு, மிளகு, திப்பிலி" ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய மருந்துக்கு "திரிகடுகம்" எனப் பெயர்.
*அதுப்போல், திருகடுகம் என்னும் இந்நூல், மூன்று கருத்துக்களை உள்ளடக்கி மனிதனின் மனமயக்கத்தை நீக்குகிறது.
கணித மேதை இராமனுஜம்
*பிறப்பு: 22.12.1887
*ஊர்: ஈரோடு
*பெற்றோர்: சீனுவாசன் - கோமளம்
*இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.
*தனது தாயாரின் தந்தை ஊரான காஞ்சிபுரத்தில் திண்ணை பள்ளியில் படித்தார்.
கும்பகோணம்:
*இராமனுஜனின் தாத்தாவின் பணிநிமித்தம் "கும்பகோணம்" வந்தால், பின்பு அவரின் கல்வி கும்பகோணத்தில் தொடர்ந்தது.
பூஜ்யத்திற்கு மதிப்புண்டு:
*ஒருமுறை வகுப்பில் அவரின் ஆசிரியர் "பூஜ்யத்திற்கு மதிப்பில்லை" என கூற, அதற்கு இராமானுஜன் பூஜ்யத்திற்கு மதிப்புண்டு என்று விளக்கி எடுத்துரைத்தார்.
*இராமானுஜர் தமது சிறுவயது முதலே கணிதப்பாடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
கார்:
*1880இல் இலண்டன் நகரில் "கார்" என்பவர் பதினைந்தாவது வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கியதுப்போல, இவரும் சிறு வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்.
எழுத்தர் பணி:
*தந்தை சீனுவாசனின் முயற்சியால் இவருக்கு சென்னை துறைமுகத்தில் "எழுத்தர்" சிறந்து விளங்கினார்.
பெர்னெளலிஸ் எண்கள்:
* தான் கண்டுபிடித்த தேற்றங்களையும், எடுகோள்களையும் கேள்விகளாகத் தொகுத்து இந்தியக் கணிதக் கழகப் பத்திரிகைக்குச் சென்னை துறைமுகத்தின் தலைமை பொறியாளர் ஃபிரான்சிஸ் ஸ்ப்ரிங் என்பார் மூலம் அனுப்பினார். "பெர்னெளலிஸ் எண்கள்" எனும் தலைப்பில் வெளியான அவரது கட்டுரை, மிகந்த வரவேற்பை பெற்றது.
*தனது கண்டுப்பிடிப்புகளை இந்தியக் கணிதக் கழகப் பத்திரிகைக்கு இராமானுஜம் யார் மூலம் அனுப்பினார்? - ஃபிரான்சிஸ் ஸ்பிரிங்
*பெர்னெளலிஸ் எனும் தலைப்பில் வெளியான இராமானுஜத்தின் கட்டுரை கணித வல்லுநர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
*இராமானுஜம் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார்.
* இராமானுஜம் தனது கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிகள் ஆகியவற்றை விவரமாக எழுதி இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹார்டி என்பவருக்கு கடிதமாக அனுப்பினார்.
*இலண்டன் கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரியின் பெயர் - திரினிட்டி கல்லூரி.
* கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப் பெற்ற பிறவிக் கணித மேதை என்று கூறியவர் - இந்திரா காந்தி.
* ஐகோபி எந்த நாட்டில் வாழ்ந்தார் - ஜெர்மனியில்
* ஐகோபி எந்த நூற்றாண்டின் கணிதமேதை - 19 ஆம் நூற்றாண்டு.
* ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஐகோபி என்று கூறியவர் - லிட்டில் வுட்டு
* ஆய்வர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - சுவிட்சர்லாந்தைச்
* ஆய்வர் 18 ஆம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை ஆவார்.
* திரினிட்டி கல்லூரியின் பேராசிரியர் ஈ.எச். நெவில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சொற்பொழிவாற்ற வந்தார்.
* இராமானுஜம் எந்த ஆண்டு 1914 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் நாள் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார்.
* திரினிட்டி கல்லூரியில் 18.04.1914 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார்.
* கிங்ஸ் கல்லூரியின் கணிதப் பேராசிரியர் - ஆர்தர் பெர்சி.
* இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்ந்தவர் - ஹார்டி
* ஹார்டி ரோசரஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டார்.
* இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் உறுப்பினராக இராமானுஜம் 1918 ஆண் ஆண்டு சேர்க்கப்பட்டார்.
* இங்கிலாந்து பல்கலைக்கழகம் இராமானுஜத்திற்கு எஃப்.ஆர்.எஸ் பட்டம் வழங்கியது.
* எஃப்.ஆர்.எஸ் பட்டம் பெற்ற இராமானுஜத்தை திரினிட்டி கல்லூரி பாராட்டிச் சிறப்பித்தது.
* ஹார்டியின் பரிந்துரையின் பேரில் சென்னைப் பல்கலைக் கழகமும் 250 பவுண்டுத் தொகையை ஐந்து ஆண்டுக்கும் கொடுக்க முன்வந்தது.
* இராமானுஜம் 50 பவுண்டைத் தம் பெற்றோருக்கும் 200 பவுண்டை ஏழை எளிய மாணவர்களுக்கும் வழங்கி வருமாறு கடிதம் எழுதினார்.
* இராமானுஜத்தைப் பார்க்க வந்த ஹார்டி 1729 என்ற எண் கொண்ட வாடகை மகிழுந்தில் வந்தேன் எனக் கூறினார்.
* இராமானுஜம் இந்தியாவிற்கு திரும்பி வந்த ஆண்டு - 1919 ஆம் ஆண்டு மார்ச் 27ம் தேதி.
* இராமானுஜம் மறைந்த ஆண்டு 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி.
* இராமானுஜம் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் - பேராசிரியர் ஈ.டி. பெல்
* இராமானுஜன் முதல்தரமான கணித மேதை என்று கூறியவர் - பேராசிரியர் சூலியன் கக்சுலி
* இராமானுஜத்தின் குறிப்பேடுகளில் 3000 முதல் 4000 தோற்றங்கள் இருந்தன.
* 1957 ஆம் ஆண்டு டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையம் இராமானுஜத்தின் தேற்றங்களை ஒளிப்படம் எடுத்து நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
* 1962 டிசம்பர் 22 ஆம் தேதி இராமானுஜத்தின் 75வது பிறந்த நாள் ஆகும்.
* இராமானுஜத்தின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு நடுவணரசு பதினைந்து காசு அஞ்சல்தலை இருத்தைந்து இலட்சம் வெளியிட்டது.
* பேராசிரியர் இராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு 1971 ஆம் ஆண்டு சென்னையில் அமைக்கப்பட்டது.
* சென்னையில் 03.10.1972 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
* சென்னை துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர்க்கப்பலுக்கு, சீனுவாச இராமானுஜம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
* ரிச்சர்ட்டும் ஆஸ்கேயும் இணைந்து 1984 ஆம் ஆண்டு இராமானுஜத்தின் மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்குக் கொண்டு வந்து வழங்கினர்.
* கணிதக் குறிப்புகள் அடங்கிய எத்தனை குறிப்பேடுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இராமானுஜம் விட்டுச் சென்றுள்ளார்.
* இராமானுஜன் எண்: 1729 என்பதை இராமானுஜன் எண் என்பர்.
கூட்டுறவு உதவியாளர் தேர்வு முடிவு
ReplyDeleteதேர்வு முடிவு எப்போது? மாவட்ட வாரியாக நேர்காணல் முடிந்து 3 மாதங்களாகியும் தேர்வு முடிவு வெளியாகாமல் உள்ள கூட்டுறவு உதவியாளர் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என 2 வருடங்களாக காத்திருப்போருக்கு அரசின் பதில்?
தமிழக கூட்டுறவு துறை சிறப்பு விருதுகள் பெரும் இவ்வேளையில் இன்னும் ஏன் தேர்வு முடிவை அறிவிக்காமல் இழுத்தடிக்கிறார்கள்.
மக்கள் முதல்வர் முடிவை அறிவிக்க வேண்டும் என தேர்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேர்வு நடைபெற்ற நாள்:09/Dec/2012
மாவட்ட வாரி நேர்காணல்: Sep- 21 - 30 /2014.
Dear கல்வி செய்தி pls dont ignore/remove this news:
Please share your comments friends,