டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பதாரர் விவரங்கள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பதாரர் விவரங்கள் வெளியீடு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
4ஆயிரத்து 963 இடங்களுக்கு 13 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்கள், WWW.TNPSC.GOV.IN என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் பதிவு எண் மூலம் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்எனவும் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது. முறையான விவரங்கள் இணையதளத்தில் இல்லையெனில், விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான செலான் நகலை contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வரும் 5ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. பெயர், பதிவெண், விண்ணப்பக்கட்டணம் ரூபாய், கட்டணம் செலுத்திய இடம், வங்கிக் கிளை அல்லது அஞ்சலகத்தின் முகவரியையும் மின்னஞ்சலில் குறிப்பிட வேண்டும் என டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.

3 comments:

  1. தினம் தினம் ஏமாற்றம், நிலைத்து போய்விடுமோ இந்த தடுமாற்றம் என முடக்கப்பட்டு கிடக்கும் தலித் நாங்கள்,,, ( ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகான இடைநிலை ஆசிரியர் ேதர்வு பட்டியலுக்காக ஏங்கும் தலித் ), எங்களின் நலனில் அக்கறை கொள்ள உருவான தனி துறைகள். தன்னிச்சையான அதிகார மையங்கள், தனி அமைச்சர், இதையெல்லாம் தவிர நாங்கள் சமுக நலனில் அக்கறை கொண்டவர்கள், தலித் மக்களின் முன்னேற்றமே எங்களின் குரல் என்றல்லாம் கூறும் தலைவர்கள் இவர்களுக்கெல்லாம் நாங்கள் முடக்கப்பட்டு கிடப்பது இவ்வளவு வெளிப்படையாக தெரிந்தும் எங்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்,,,,,,,,, நாங்கள் இவ்வாறு முடக்கப்படுவது ஏன்,,,,,, இது இன்னும் எத்தனை நாள்தான் நீடிக்கும்,,,,,,

    ReplyDelete
  2. ஆசிரியர் சொந்தங்களே ஒரு முக்கிய செய்தி... வெய்ட்டேஜ் தொடர்பான,ஆசிரியர் தகுதிதேர்வு தொடர்பான உங்கள் கோரிக்கையை எங்களிடம் தெரிவிக்கவும்...


    ஆசிரியர் சொந்தங்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி.....

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பின் நிர்வாகிகள் தமிழக முதல்வர் ஒ.பன்ணீர்செல்வம் அவர்களை சந்தித்து பேச வாய்ப்பு தருவதாக முதல்வரின் நேர்முக உதவியாளர் தெரிவித்துள்ளார் ஆகவே இன்று இரவுக்குள் நாங்கள் மாதிரி கோரிக்கை மனுவினை பேக்ஸ் மூலம் அனுப்ப வேண்டி உள்ளது...

    ஆகவே போராட்டத்தில் கலந்துகொண்ட மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏதேனும் கோரிக்கை தெரிவிப்பதாக இருந்தால் இன்று மாலை உடனடியாக தொலைபேசி மூலமாகவோ மெயிலுக்கு எழுத்து மூலமாகவோ தெரிவிக்கலாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...

    இதை படித்துவிட்டு வாட்ஸப், பேஸ்புக்,மற்றும் அனைத்து கல்வி வலைதளங்களிலும் ப் தயவுசெய்து பகிரவும்

    இப்படிக்கு
    செல்லத்துரை மாநிலதலைவர், 98436 33012
    கபிலன் மாநில செயலாளர், 90920 19692
    ராஜலிங்கம் புளியங்குடி மாநில பொருளாளர் 95430 79848

    E.mail- rajalingam.rp@gmail.com

    More details visit www.pallikudam.com

    ReplyDelete
  3. pls posting increase panna sollunga sg teachers ku

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி