அங்கன்வாடிக்கு உணவு பொருள் வாங்காததை கண்டித்து போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2014

அங்கன்வாடிக்கு உணவு பொருள் வாங்காததை கண்டித்து போராட்டம்

அங்கன்வாடிகளுக்கான உணவு பொருட்கள் சரியான முறையில் வாங்கவில்லை என, ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கோலார் மாவட்டம், ஜில்லா பஞ்சாயத்து அலுவலகம் முன், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
சுகாதாரத் துறை அமைச்சர் காதரிடம், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் மனு வழங்கினர். மனுவில், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை உதவி இயக்குனர் சகுந்தலாவுக்கு எதிராக புகார் கூறப்பட்டுள்ளது. அங்கன்வாடிகளுக்கு உணவு பொருட்கள் சரியாக வாங்குவதில்லை. உதவி இயக்குனரின் உறவினருக்கு சொந்தமான கடையிலே வாங்க வலியுறுத்துவதாக, குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்று கொண்ட அமைச்சர், "ஜில்லா பஞ்சாயத்து, மாவட்ட கலெக்டர் அறிக்கை தயாரித்து சமர்ப்பிப்பர். அறிக்கை வந்தபின், நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி