பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்குசெய்முறைதேர்வு பதிய இன்று கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2014

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்குசெய்முறைதேர்வு பதிய இன்று கடைசி

ராமநாதபுரம்:முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜ் அனுப்பிய சுற்றறிக்கை:

வரும் 2015 மார்ச், ஏப்ரலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பெயர் பதிவு செய்து பயிற்சி பெற ஏற்கனவே இரு முறை அனுமதி வழங்கப்பட்டது.


இவ்விரு வாய்ப்பில் பதிவு செய்யாமல் விடுபட்ட தனித்தேர்வர்கள், எட்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியுறும் தனித்தேர்வர்கள், 2015ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பினால் இன்று ( டிச.,1) தங்களது பெயர்களை பதிய இதுவே கடைசி வாய்ப்பு.


செய்முறை பயிற்சிக்கான விபரம் அறிய அரசுத் தேர்வு சேவை மையத்தை அணுகலாம். www.tndge.in என்ற இணையளத்தில் விபரங்களை பெறலாம். செய்முறை தேர்வுக்கு பதிவு செய்யாத தனித் தேர்வர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதியில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி