வளரும் பொருளாதார நாடுகளின் பல்கலைக் கழகங்களில், இந்தியாவின் 11 பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்து உள்ளன. எனினும், முதல் 20 இடங்களுக்குள், எந்த இந்திய பல்கலைக் கழகமும், உயர்கல்வி நிறுவனமும் வரவில்லை. அந்த பட்டியலில், முன்னணி இடத்தை பிடித்த கல்வி நிறுவனம், பெங்களூருவில் செயல்படும், இந்திய அறிவியல் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.எஸ்சி., மட்டும் தான்.
'பிரிக்ஸ்' கூட்டமைப் பில் இடம்பெற்றுள்ள, பிரேசில், இந்தியா, சீனா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா நாடுகளின், 100 உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில், சீனாவின் பீகிங் பல்கலைக் கழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.வளரும் பொருளாதார நாடுகளின் பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலில், சீனாவின் 27 பல்கலைக் கழகங்கள் உள்ளன; தென் கிழக்கு ஆசிய நாடான தைவானின், 19 பல்கலைக் கழகங்கள், அந்த பட்டியலில் உள்ளன.
தரம் குறைந்து வருகிறதா?கடந்த ஆண்டின், டைம் ஹையர் எஜுகேஷன் பல்கலைக் கழக பட்டியலில், முதல் 40 பட்டியலில் இடம்பிடித்திருந்த, ஐ.ஐ.எஸ்சி., பெங்களூரு மற்றும் ஐ.ஐ.டி., பாம்பே உயர்கல்வி நிறுவனங்கள், இந்த ஆண்டில் தரம் தாழ்ந்துள்ளன.ஐ.ஐ.டி., பாம்பே 37, ஐ.ஐ.டி., ரூர்கி 38, பஞ்சாப் பல்கலைக் கழகம் 39, ஐ.ஐ.டி., மெட்ராஸ் 44, ஐ.ஐ.டி., டில்லி 46வது இடங்களைப் பிடித்துள்ளன. இதில், சில கல்வி நிறுவனங்கள், கடந்த ஆண்டில் பட்டியல் இடப்படவில்லை. இந்த ஆண்டில் பட்டியலிடப்பட்டதில், சில கல்வி நிறுவனங்கள், முந்தைய ஆண்டை விட, பல இடங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன.கடந்த ஆண்டில், 47வது இடத்தில் இருந்த ஜாதவ்பூர் பல்கலை, இந்த ஆண்டு, முதல் 100 பல்கலை பட்டியலுக்குள் வரவே இல்லை.
சர்வதேச அளவில், நம் நாட்டின்
கல்வி நிறுவனங்களையும் தரம் உயர்த்த, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என,
கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மேற்பார்வையில், இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சித்நாத் சிங் ஐ.ஐ.டி., டில்லி துணை இயக்குனர்
போட்டிகள் நிறைந்த இந்த காலத்தில், தர நிர்ணயத்தை காட்டவும், சில மார்க்கெட்டிங் யுக்திகளை பின்பற்ற வேண்டிஉள்ளது. அதற்காக, சர்வதேச தர அமைப்புகளான, டைம்ஸ் ஹையர் எஜுகேஷன், க்யு.எஸ்., போன்றவற்றுடன், தொடர்பில் இருக்க வேண்டியது அவசியம். அது போன்ற தர அமைப்புகளை, நம் நாட்டிலும் ஏற்படுத்த வேண்டியதும் கட்டாய தேவை.கவுதம் பருவா ஐ.ஐ.டி., கவுகாத்தி, முன்னாள் இயக்குனர்
Good morning Sri,
ReplyDeleteஇந்தியாவில் தரம் கேள்விகுறியாக உள்ளது என்பததையே தெளிவு படுத்துகிறது.
வணக்கம் அலெக்ஸ் சார்...
Deleteஅரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலை கழகங்கள் நிலை இப்படியென்றால், நாங்கள் தான் NO -1 என்று மார்தட்டிக்கொள்ளும் பல நிகர்நிலை பல்கலை கழகங்கள் தரம் மிகவும் கேள்விக்குறியே ? வருடா வருடம் மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாறுகிறார்கள் அல்லது எமற்றபடுகிரர்கள்.
ReplyDeleteவேலை வாய்ப்பே இல்லாத பல பாடத்திட்டங்களை வைத்து வியாபாரம் செய்யும் அவலநிலையை யார் திருத்த போகிறார்கள்.