திருக்குறளுக்கு தேசிய நூல் அங்கீகாரம்: தமிழ்ச் சங்கங்கள் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2014

திருக்குறளுக்கு தேசிய நூல் அங்கீகாரம்: தமிழ்ச் சங்கங்கள் வலியுறுத்தல்

திருக்குறளுக்கு தேசிய நூல் அங்கீகாரம் அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழக ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர்.

மேலும் மத்திய அரசிடமும், குடியரசுத் தலைவரிடமும் மனு அளிப்பதற்காகக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் திங்கள்கிழமை இரவு புதுதில்லி புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உடையார்கோயில் குணா கூறியது:

இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். திருவள்ளுவர் இயற்றிய குறள்கள் தனிப்பட்ட ஜாதி மதத்தைச் சாராமல், நடுநிலையுடன் மனித வாழ்வியலுக்கான வழிகாட்டுதலை எக்காலத்துக்கும் ஏற்ற வகையில் வழிகாட்டுபவையாகும்.

இப்படிப்பட்ட நூலை தேசிய நூலாக மத்திய அரசு அறிவித்தால், இந்தியாவுக்கே பெருமை சேர்ப்பதாக அமைவதோடு தேசிய ஒருமைப்பாடும் மேலோங்கும்.

இதைக் கருத்தில் கொண்டே தமிழக சட்டப்பேரவையிலும் கடந்த 13-04-2005 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், உலகின் பிற நாடுகளில் தேசிய அடையாளங்களாக பல இருந்தாலும், நூல் என்ற வகைப்பாடு எந்த நாட்டிலும் முன்னுதாரணமாக இல்லை என்று கூறி, முந்தைய காங்கிரஸ் அரசு தமிழகத்தின் தீர்மானத்தை நிராகரித்து விட்டது.

எனவே, உலகிலேயே அறிவு இலக்கிய வாழ்வியல் நூலுக்கு அங்கீகாரம் அளித்து, முன்னுதாரணமாக இந்தியா திகழும் வகையில், இப்போதைய பாரதிய ஜனதா அரசு வருகிற 2015-இல் திருக்குறளுக்கு தேசிய நூல் அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.

திருவள்ளுவரின் உருவப் படம் அல்லது உருவச் சிலையை நாடாளுமன்றத்தில் நிறுவுவதோடு, இந்திய மொழிகள் அனைத்திலும் திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டும். மேலும் 2015-ஆம் ஆண்டை திருவள்ளுவர் ஆண்டாக அறிவிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக ஆளுநர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்தோம். தொடர்ந்து புதுதில்லி சென்று நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்யை சந்தித்து ஒரு அடி உயர திருவள்ளுவர் சிலையை ஒப்படைப்பதோடு, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரையும் வருகிற 11-ஆம் தேதி சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றார்.

3 comments:

  1. Sri sir supreme court case hearing yeppo

    ReplyDelete
  2. மொழி பெயர்தலைவிட தமிழ் மொழியிலேயே நடத்த சொல்லலாமே.!

    ReplyDelete
  3. மொழி பெயர்தலைவிட தமிழ் மொழியிலேயே நடத்த சொல்லலாமே.!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி