திருவண்ணாமலை
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வருடம் முழுவதும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அனைத்து விழாக்களை காட்டிலும் கார்த்திகை தீப திருவிழா மிக
விமர்சையாக கொண்டாடப்படுகிறது.கார்த்திகை தீப திருவிழா இவ்வருடம்
டிசம்பர் மாதம் 5ம் தேதி 2014-ல்
கொண்டாடப்படுகிறது.இந்த திருவிழா கார்த்திகை
பிரம்மோட்சவம் என்றும் அழைக்கப்பட்டு பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
10 நாட்கள்
நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில்முதல் நாள கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். இதை
துவாஜரகோதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் அருணாச்சலேஸ்வரர் வெள்ளி வாகனத்தில் ஊர்வலமாக காலையிலும் மாலையிலும் எடுத்து சொல்வது வழக்கமாக உள்ளது. மேலும் பஞ்ச மூர்த்திகளான கணபதி,
முருகன், சண்டீஸ்வரர், அருணாச்சலேஸ்வரர், மற்றும் பார்வதியை ஊர்வலம் எடுத்து செல்வது நடைமுறையில் உள்ளது. இங்குள்ள கல்யாண மண்டபத்தில் ஆராதனை முடிந்தவுடன் வெவ்வேறு
|
கார்த்திகை தீப திருவிழா ஐந்தாம் நாளில் பெரியநாயகர் பெருமான் இரவில் ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக செல்வார். 25 அடியுள்ள இந்த வாகனம் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். இந்த வாகனத்தில் 17 அடி கொண்ட அழகிய கொடையுடன் ஊர்வலம் செல்வது பக்தர்களுக்கு கண்கொள்ளாக்காட்சியை தரும்.
கார்த்திகை தீப திருவிழாவின் எட்டாம் நாளில் பெரியநாயகர் பெருமான் இரவில் குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வருவார். இந்த குதிரை வாகனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் குதிரையின் நான்கு கால்களும் தரையை தொடாமல் ஆகாயத்தில் மிதக்கும். இதை மக்கள் வியப்புடன் பார்க்க காத்திருப்பார்கள்.
கார்த்திகை திருவிழாவின் ஒன்பதாம் நாளில் பெரியநாயகர் கைலாச வாகனத்தில் ஊர்வலம் செல்வதை காண பக்தர்கள் காத்திருப்பார்கள். இவ்வூர்வலம் பெரும்பாலும் இரவில் நடப்பது வழக்கம்.
இரவில் பெரியநாயகர் பெருமான் தங்கத்தால் செய்யப்பட்ட ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறார். இதை காண மக்கள் திரளாக காத்திருக்கிறார்கள். இந்த தரிசனம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் சிறப்பம்சமாக விளங்குகிறது.
கார்த்திகை தீப திருவிழாவின் பதினொன்னாம் நாள் அருணாச்சலேஸ்வரர் தெப்ப குளத்தில் தெப்பத்தில் வருவது தெப்பத்திருவிழா என்று அழைக்கப்படுகிறது. அருணாச்சலேஸ்வரர் பன்னிரெண்டாம் நாள் கார்த்திகை தீப திருவிழாவில் கிரிவலம் வருவது வழக்கமாக நடைபெறுகிறது. இதை கிரி பிரதட்சனை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திருவிழாவுடன் கார்த்திகை தீபவிழா இனிதே முடிவடைகிறது. பக்தர்கள் அனைவரும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் திருவருளை பெற்று மன நிறைவுடன் அவர்கள் ஊரை நோக்கி திரும்பி செல்கின்றனர்.
கல்வி செய்தி அன்பர்ளுக்கு தீபதிருநாள் வாழ்த்துக்கள்.,
ReplyDeleteTodary ramar and sudalaimani 2 case yume hearing varuthu aftr nn 2.15 ku mela,
ReplyDeleteTheepa thirunalilavathu nam valvil oli pirakkuma
Thiru Annamalaiyarin arulal namaku vaalvil vettri kidaika vendukiren. Viraivil naam adw palliyil paniyattuvom annamalaiyarku vanakkam. Eni Evanaium nampa vendam kadavulai thavira. Nallathey nadakum.
ReplyDeleteannamalaiyar arul jothiyai katchi tharum innalil aasiriya nanbargal anaivarukum annamaliyar arul kidaika vendugiren....iraivan arulal vetri namakey
DeleteWait soon you will good news
ReplyDeleteWelcome to t.v malai
ReplyDelete