சென்னை பல்கலையின் ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஆட்சிமன்ற குழுவில் கடும் ஆட்சேபம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2014

சென்னை பல்கலையின் ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஆட்சிமன்ற குழுவில் கடும் ஆட்சேபம்


சென்னை பல்கலை யின் ஆசிரியர்களை தேர்வு செய்வதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக, ஆட்சி மன்ற குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.சென்னை பல்கலை யின், ஆட்சி மன்ற குழு (சிண்டிகேட்) கூட்டம், துணைவேந்தர் தாண்ட வன் தலைமையில் நடந்தது.
இதில், உயர்கல்வித் துறை செயலர் ஹேமந்த் குமார் சின்கா, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் பிரவீன்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற னர். இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் சிலர் கூறியதாவது: சென்னை பல்கலைக்கு, நானோ தொழில்நுட்பவியல், நானோ அறிவியல், உயிர் அறிவியல் உள்ளிட்ட துறைகளுக்காக, இரண்டு கட்டமாக ஆசிரியர்களை தேர்வு செய்தனர். அதில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன; அதை பற்றி விசாரிக்க வேண்டும் என, உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஆட்சி மன்ற குழு கூட்டத்தில், தொழில்நுட்ப கல்வி கமிஷனர் பிரவீன் குமார், தான் பேசியதை அவைக்குறிப்பில் சேர்க்காமல், தான் பேசாத தகவல்களை சேர்த்து, சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி, எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர், கல்வி தகுதி மதிப்பீட்டின் அடிப்படையில், தர நிர்ணய கட்டுப்பாட்டு மையத்தின் ஒப்புதலோடும்,தொடர்புடைய குழுக்களின் ஒப்புதலோடும் தான், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என, தெரிவித் தார். உயர்கல்வி துறையின் கூடுதல் தலைமை செயலர், ஹேமந்த் குமார் சின்கா உள்ளிட்டோரும் இதையே வலியுறுத்தினர். அதை தொடர்ந்து, வரும் கூட்டங்களில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நியாயமான பதில்களை, தொடர்புடையோர் அளிப்பர் என, நம்புகி றோம். மேலும், அவ்வாறு நியாயம் கிடைக்க வேண்டும் எனில், உயர்கல்வி துறை கூடுதல் செயலரும், தொழில்நுட்ப கல்வி கமிஷனரும், தொடர்ந்து கூட்டங்களுக்கு வரவேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி