TNPSC:சுகாதார அலுவலர் பதவிக்கான அறிவிக்கை : டிஎன்பிஎஸ்சி வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2014

TNPSC:சுகாதார அலுவலர் பதவிக்கான அறிவிக்கை : டிஎன்பிஎஸ்சி வெளியீடு


சுகாதார அலுவலர் (Health Officer) பதவிக்கான
அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,

தமிழ்நாடு பொது சுகாதார பணியிலுள்ள
சுகாதார அலுவலர் (Health Officer) பதவியில் 33
காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம்
நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இப்பதவிக்கு B.S.Sc., (Bachelor of Sanitary
Science) அல்லது Diploma in Public Health
அல்லது Licentiate in Public Health
அல்லது M.B.B.S அல்லது DMS அல்லது LMP
கல்வித்தகுதியினை உடைய விண்ணப்பதாரர்கள்
விண்ணபிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் www.tnpscexams.net
என்ற முகவரியில் உள்ளன. இணைய வழியில் (Online) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பதவிக்கான எழுத்து தேர்வு 22.02.2015 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் சென்னை மையத்தில் நடைபெறும்.

இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 09.01.2015.

மேலும் இப்பதவிக்கான
வயதுவரம்பு, கல்வித்தகுதி, பொதுவான தகவல்கள், தகுதி குறித்த விவரங்கள்,எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம்,
தேர்வு திட்டம், தேர்வு மையம்,
விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்,தடையின்மைச் சான்று, சலுகைகள் மற்றும் பிற
முக்கிய அறிவுரைகள் தொடர்பான
விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளமுகவரியான www.tnpsc.gov.in–ல் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிக்கையில்காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி