'சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை குறைப்பதற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் நேற்று, மத்திய பணியாளர் நலத் துறை இணை அமைச்சர், ஜிதேந்திர சிங் கூறியதாவது:ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோரின் வயது வரம்பை குறைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இப்போதைக்கு அதுபோன்ற திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை. அதேபோல், தேர்வு எழுதும் தவணையும் குறைக்கப்படாது. மேலும், ஆங்கில திறனறி தேர்வுக்கான மதிப்பெண்களும் தேர்ச்சியில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி