மக்கள் நலப் பணியாளர் வழக்கு: பிப். 27க்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2015

மக்கள் நலப் பணியாளர் வழக்கு: பிப். 27க்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்


மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கோரியது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வரும் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

மேலும் தமிழக அரசு இதில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி