"வகுப்பறை மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2015

"வகுப்பறை மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்'


வகுப்பறை மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் லதா பிள்ளை கூறினார்.செயின்ட் ஜான்ஸ் ஆசிரியர் மேம்பாட்டு மையத் தொடக்க விழா, கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் அவர் பேசியது:ஆசிரியர்களின் பணி கற்பித்தலோடு முடிவடைவதில்லை. வகுப்பறை மாற்றங்களுக்கு ஏற்ப அவர்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் தொடர்ச்சியாக புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பயிற்சிகளில் பங்கேற்று தங்களது கற்பித்தல் முறைகளைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். பாடங்கள் குறித்தும், கற்பிக்கும் முறைகள் குறித்தும் மாணவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், என்றார் அவர்.இந்த மையத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் பயிற்சிகள் வழங்கப்படும். ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தில் இல்லாமல் பொதுவாக ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும் என செயின்ட் ஜான்ஸ் பொதுப்பள்ளியின் தாளாளரும், செயின்ட் ஜான் ஆசிரியர் மேம்பாட்டு மைய உறுப்பினருமான கிஷோர் குமார் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி