ஊதிய குழு பரிந்துரை அரசு பணியாளர்கள் சங்கம் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2015

ஊதிய குழு பரிந்துரை அரசு பணியாளர்கள் சங்கம் கோரிக்கை


தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் நேற்றுவெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் கீழ் பணிபுரியும் அரசு பணியாளர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஆண்டு ஊதிய உயர்வு பெற தகுதியான நாளுக்கு முந்தைய தினம் ஓய்வு பெற்றாலும்,
அவர்களுக்கு அந்த ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊதிய குறை தீர்ப்பு பிரிவின் படி இந்த உத்தரவு 31.12.2014 முதல்அமுலுக்கு வருவதாக கூறப்படுகிறது. 31.12.2014 அன்றும் அதற்கு பின்னரும் ஓய்வு பெறுபவர்கள் மட்டுமே இவ்வாணையினால் பயனடைய இயலும், தற்போதுநடைமுறையிலுள்ள ஊதிய குழு அமுலுக்கு வந்த 1.1.2006 முதல் (31.12.2005) செயல்படுத்த வேண்டும் என்று எங்கள் சங்கம் சார்பில் கேட்டு கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி