தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் வரும் 25-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாலக்கோட்டில் வரும் 25-ஆம் தேதி அருள்மிகு புதூர் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் பாலக்கோடு வட்டம், நகரத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர்விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் மார்ச் 7-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளுர் விடுமுறை நாளன்று பாலக்கோடு சார்நிலைக் கருவூல அலுவலகம் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
This comment has been removed by the author.
ReplyDelete