'பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வு கள் துறை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, இயக்குனர் தேவராஜன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: மார்ச் மாதம் நடக்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன் - லைனில் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள், விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் உள்ள சேவை மையத்திற்கு, நாளை முதல் 7ம் தேதிக்குள், நேரில் சென்று ஆன் - லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் விண்ணப்பிப்பவர்களுக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்; தனியார் பிரவுசிங் மையங்களில் விண்ணப்பிக்க இயலாது. மேலும், ஏற்கனவே ஆன் - லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், 'ஹால் - டிக்கெட்' பெற, இன்றே கடைசி நாள். கடந்த 2ம் தேதி முதல், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதுவரை, பதிவிறக்கம் செய்யாதவர்கள், www.tndge.in என்ற தேர்வுத் துறை இணையதளத்தில், இன்றைக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, இயக்குனர் தேவராஜன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: மார்ச் மாதம் நடக்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன் - லைனில் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள், விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் உள்ள சேவை மையத்திற்கு, நாளை முதல் 7ம் தேதிக்குள், நேரில் சென்று ஆன் - லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் விண்ணப்பிப்பவர்களுக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்; தனியார் பிரவுசிங் மையங்களில் விண்ணப்பிக்க இயலாது. மேலும், ஏற்கனவே ஆன் - லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், 'ஹால் - டிக்கெட்' பெற, இன்றே கடைசி நாள். கடந்த 2ம் தேதி முதல், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதுவரை, பதிவிறக்கம் செய்யாதவர்கள், www.tndge.in என்ற தேர்வுத் துறை இணையதளத்தில், இன்றைக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி