பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புதிய நடைமுறை: தேர்வுத்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2015

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புதிய நடைமுறை: தேர்வுத்துறை உத்தரவு


பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத் தேர்வில் மாற்றங்களை செய்து தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.இத்தேர்வில் முதல் பிரிவில் 75 ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம் பெறும்.
கடந்த ஆண்டு வரை இதற்கான விடையை ஓ.எம்.ஆர்., தாளில், வட்டமிட்ட பகுதியை பென்சிலால் கருமைப்படுத்தினர். இந்த ஆண்டு முதல் கறுப்பு அல்லது நீல நிற பால் பாயின்ட் பேனாவால் கருமைப்படுத்த வேண்டும். முன்பு தேர்வுநேரம் முடியும் வரை ஓ.எம்.ஆர்., தாளை மாணவர் வைத்திருக்கலாம்.இந்த ஆண்டு முதல், 75 நிமிடங்களில் ஒரு மதிப்பெண் கேள்விக்கு விடை அளித்த உடன் அறை கண்காணிப்பாளரிடம் தாளை ஒப்படைக்க வேண்டும். பின் மீதமுள்ள இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதிக்கு தொடர்ந்து விடை அளிக்கலாம். 'விடை தெரியாதஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு கடைசி நேரத்தில் பதில் எழுதலாம்' என நினைக்கும் மாணவர்கள் இனி அவ்வாறு செய்ய முடியாது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி