வைகுண்டர் அவதார தினம்–மண்டைக்காடு கோவில் விழா: குமரியில்4–ந்தேதி, 10–ந்தேதி உள்ளூர் விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2015

வைகுண்டர் அவதார தினம்–மண்டைக்காடு கோவில் விழா: குமரியில்4–ந்தேதி, 10–ந்தேதி உள்ளூர் விடுமுறை


குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–‘அய்யா வைகுண்டர் அவதார தின விழா’ நாளான வருகிற 4–ந் தேதி(புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
4–ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக ஏப்ரல் மாதம் 3–வது சனிக்கிழமையான 18.4.2015 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுபோல கலெக்டர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடைவிழாவின் முக்கிய திருவிழா நாளான பத்தாம் நாள் திருவிழாவான வருகிற 10–ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள், அரசு சார்ந்தஅலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

10–ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மே மாதம் 2–வது சனிக்கிழமையான 9.5.2015 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.4–ந் தேதி மற்றும் 10–ந் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறை தினத்தன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி