இந்திய வனப் பணி தேர்வில் சேலம் மாணவி 8 -ஆம் இடம்: தமிழக அளவில் முதலிடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2015

இந்திய வனப் பணி தேர்வில் சேலம் மாணவி 8 -ஆம் இடம்: தமிழக அளவில் முதலிடம்


இந்திய வனப் பணி தேர்வில் (ஐ.எஃப்.எஸ்.), சேலம் மாணவி எஸ்.எம்.ப்ரீத்தா அகில இந்திய அளவில் 8-ஆம் இடம் பிடித்து சிறப்புச் சேர்த்துள்ளார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில், இந்திய வனப் பணிக்கான (ஐ.எஃப்.எஸ்.) முதல்நிலைத் தேர்வு 2014, ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 2014, நவம்பரில் முதன்மைத் தேர்வும், 2015, பிப்ரவரியில் நேர்காணலும் நடைபெற்றது.

இந்த நிலையில், இந்திய வனப் பணி இறுதித் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (பிப்.18) வெளியாயின. இதில், அகில இந்திய அளவில் 85 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


எஸ்.எம்.ப்ரீத்தா

இதில், தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.எம்.ப்ரீத்தா அகில இந்திய அளவில் 8-ஆம் இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்து சிறப்புச் சேர்த்துள்ளார்.

இதுதொடர்பாக, எஸ்.எம்.ப்ரீத்தா கூறியதாவது:

நான் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக். (ஐ.டி.) படித்தேன். 2012-இல் படிப்பை முடித்ததும், ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகி வந்தேன்.

2013-இல் சிவில் சர்வீசஸ் போட்டித் தேர்வில் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றேன். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. இந்த நிலையில், இரண்டாவது முறையாக முயற்சித்து அகில இந்திய அளவில் 8-ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்திய வனப் பணியில் சிறப்பாகவும், நேர்மையாகவும் திறம்பட பணியாற்றுவேன் என்றார்.

சேலம் மாணவி...: சேலம் அழகாபுரம் பி.என்.டி. காலனி அழகு விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் எஸ்.எம்.ப்ரீத்தா. இவரது தந்தை முருகேசன், நீலகிரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் உதவிப் பொது மேலாளராகப் பணியாற்றி வருகிறார். தாய் நர்மதா, சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியராக உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி