வருவாய்த்துறையில் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெறும் விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., மூலம் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெற்றிருந்தால் மட்டும் துணை தாசில்தார் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவராக அறிவிக்கப்படுவர். இத்தேர்வு மூலம் ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதால், 5 ஆண்டுகளில் கலெக்டர் அலுவலக பயிற்சி முடிக்க இயலாத நிலையுள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த ஊழியர்கள் துறை தேர்வுகளில் பயிற்சி பெற்று, மூன்றாண்டுகள் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் இரண்டாண்டு வருவாய் ஆய்வாளர் பணி முடித்திருப்பின் துணை தாசில்தார் பதவி உயர்வுக்கு தகுதியானவராக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். நேரடி நியமன உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்பதற்கு பதில், வருவாய் கட்டுப்பாட்டிலுள்ள ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளர் நிலையில் பணிபுரிய அமைச்சு பணி விதியில் திருத்தம் செய்யலாம் என வருவாய் நிர்வாக கமிஷனரும் சிபாரிசு செய்தார். அதை ஏற்று அமைச்சு பணி விதிகளில் திருத்தம்(அரசாணை எண்: 93, 20.2.15) செய்து அரசு செயலாளர் வெங்கடேசன் உத்தரவிட்டார்.
டி.என்.பி.எஸ்.சி., மூலம் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெற்றிருந்தால் மட்டும் துணை தாசில்தார் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவராக அறிவிக்கப்படுவர். இத்தேர்வு மூலம் ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதால், 5 ஆண்டுகளில் கலெக்டர் அலுவலக பயிற்சி முடிக்க இயலாத நிலையுள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த ஊழியர்கள் துறை தேர்வுகளில் பயிற்சி பெற்று, மூன்றாண்டுகள் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் இரண்டாண்டு வருவாய் ஆய்வாளர் பணி முடித்திருப்பின் துணை தாசில்தார் பதவி உயர்வுக்கு தகுதியானவராக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். நேரடி நியமன உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்பதற்கு பதில், வருவாய் கட்டுப்பாட்டிலுள்ள ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளர் நிலையில் பணிபுரிய அமைச்சு பணி விதியில் திருத்தம் செய்யலாம் என வருவாய் நிர்வாக கமிஷனரும் சிபாரிசு செய்தார். அதை ஏற்று அமைச்சு பணி விதிகளில் திருத்தம்(அரசாணை எண்: 93, 20.2.15) செய்து அரசு செயலாளர் வெங்கடேசன் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி