கடலில்...:
ராமேஸ்வரத்தில் இருந்து, பிப்., 16ல், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற, தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர், மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, குணேந்திரன், 37, என்பவரின் இடது காலில், விஷ மீனின் முள் குத்தி முறிந்தது; அவர், மயங்கி படகிற்குள் விழுந்தார்; உடன் வந்த மீனவர்கள் தவித்தனர். அங்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள், மயக்கமடைந்த மீனவரின் உடலில் இருந்து, முறிந்த மீன் முள்ளை அகற்றி, 'குளுகோஸ்' ஏற்றி முதலுதவி அளித்தனர். பின், ராமேஸ்வரம் கரைக்கு சென்று சிகிச்சை பெறும்படி கூறி அனுப்பினர்.
சித்ரவதை:
முந்தைய ஆட்சியில் கடலில் ரோந்து வரும் இலங்கை வீரர்கள், தமிழக மீனவர்களை தாக்கி, சிறையில் அடைத்து சித்ரவதை செய்தனர். புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன, இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதால், அந்நாட்டு ராணுவ வீரர்கள், மனித நேயத்துடன் மருத்துவ உதவி செய்துள்ளதாக, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
M.A (ACADEMIC YEAR ADDMISSION)-2010-12,B.ED (IGNOU)(CALENDER YEAR)-2011-13 COMPLETED .PG KU ELIGIBLE OR NOT?PLS REPLY
ReplyDelete