பள்​ளி​க​ளில் கூடுதல் தமிழாசிரியர்கள் நியமிக்க கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2015

பள்​ளி​க​ளில் கூடுதல் தமிழாசிரியர்கள் நியமிக்க கோரிக்கை


அர​சுப்​பள்​ளி​க​ளில் தமிழ் மொழிப்​பா​டத்தை,​​ முதல் பாட​மாக கொண்டு வந்து பள்​ளி​க​ளில் கூடு​தல் தமி​ழா​சி​ரி​யர்​கள் நிய​மிக்க அரசு நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என தமி​ழா​சி​ரி​யர்​கள் மற்​றும் தமிழ் ஆர்​வ​லர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ள​னர்.​ ​ ​​
தமி​ழ​கத்​தில் உள்ள அர​சுப் பள்​ளி​க​ளில் ஒரு பள்​ளி​யில் 150 மாண​வர்​கள் படித்​தால் ஐந்து ஆசி​ரி​யர்​கள் நிய​ம​னம் செய்​ய​லாம் என்ற அரசு உத்​த​ரவு உள்​ளது.​அதே​போல் கூடு​த​லாக 30 மாண​வர்​கள் இருந்​தால் ஒரு ஆசி​ரி​யர் நிய​ம​னம்செய்து கொள்​ள​லாம்.​ கடந்த 2012க்கு முன்​னர் வரை பள்​ளி​க​ளில் தமிழ்மொழிப்​பா​டம்,​​ கால அட்​ட​வணை மற்​றும் வகுப்​ப​றை​யில் முதல் பாட​மாக இருந்​தது.​ இத​னால் கூடு​தல் மாண​வர்​கள் பள்​ளி​க​ளில் சேரும்​போது முத​லில் தமிழ் மொழிப்​பாட ஆசி​ரி​யர்​க​ளுக்கு முக்​கி​யத்​து​வம் வழங்​கப்​பட்​டது.​

அதன்கார​ண​மாக,​​ தமி​ழக அரசு நடத்​தும் போட்​டித் தேர்​வு​க​ளில்​(டிஎன்​பி​எஸ்சி)​ தமிழ் மொழிப்​பா​டத்தி​லி​ருந்து அதி​க​மான வினாக்​கள் கேட்​கப்​ப​டு​வ​தால் அதற்கு முக்​கி​யத்​து​வம் வழங்கி தமி​ழா​சி​யர்​கள்,​​ மாண​வர்​களை தயார் படுத்தி வரு​கின்​ற​னர்.​ ​ இந்​நி​லை​யில் 2012 ஜூலை 6 இல்,​​ பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் 266-இல் புதிய அர​சாணை பிறப்​பிக்​கப்​பட்​டது.​ அதில்,​​ கணி​தம்,​​ அறி​வி​யல்,​​ சமூக அறி​வி​யல்,​​ ஆங்​கி​லம்,​​ தமிழ் என பாடங்​கள் வரை​யறை படுத்​தப்​பட்​டுள்​ளன.​இதன் கார​ண​மாக பள்​ளி​க​ளில் கூடு​தல் மாண​வர்​கள் சேர்​கின்ற போது முத​லில் கணி​தம்,​​ அடுத்து அறி​வி​யல் என அரசு வரி​சைப் படுத்​தி​யுள்​ள​ப​டியேஆசி​ரி​யர்​கள் நிய​ம​னம் செய்ய முடி​கி​றது.​ கடைசி நிலை​யில் தமிழ் மொழிப்​பா​டம் உள்​ள​தால் பள்​ளி​க​ளில் 300 மாண​வர்​கள் இருந்​தால் மட்​டுமே கூடு​த​லாக ஒரு தமி​ழா​சி​ரி​யர் நிய​மிக்க முடி​யும்.​உதா​ர​ண​மாக ஒரு அர​சுப் பள்​ளி​யில் 280 மாண​வர்​கள் படித்​தால் அங்கு ஒரு தமி​ழா​சி​ரி​யர் மட்​டுமே பணி​பு​ரி​யும் இக்​கட்​டான நிலை உள்​ளது.​ இதன் கார​ண​மாக தமிழ் மொழிப் பாடத்தை கற்​பிப்​ப​தி​லும்,​​ மாண​வர்​களை போட்​டித் தேர்​வு​க​ளுக்கு தயார் படுத்​து​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது.​ எனவே தமிழ் மொழிப் பாடத்தை,​​ முதல் பாட​மாக வைக்க அரசு உத்​த​ர​விட வேண்​டும் என தமிழ் ஆர்​வ​லர்​கள் கோரிக்கை வைத்​துள்​ள​னர்.​​ ​

தமி​ழக தமி​ழா​சி​ரி​யர் கழ​கத்​தின் மாநில பொதுச் செய​லர் நீ.இளங்கோ கூறி​யது:​ ​ அனைத்து மாநி​லங்​க​ளி​லும் அவர்​க​ளது தாய்​மொ​ழியே பள்​ளி​க​ளில் முதல் மொழிப் பாட​மாக வைத்​துள்​ள​னர்.​ அதே​போல் தமி​ழ​கத்​தில் தமிழ்மொழியை ​ முதல் பாட​மாக கொண்டு வர அரசு நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​ பள்​ளிக் கல்​வித்​துறை சார்​பில் வெளி​யி​டப்​பட்​டுள்ள புதிய அர​சா​ணையை ரத்துசெய்ய வேண்​டும் என்​றார்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி