பட்ஜெட்டில் என்னென்ன தேவை? இயக்குனர்களிடம் கருத்து கேட்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2015

பட்ஜெட்டில் என்னென்ன தேவை? இயக்குனர்களிடம் கருத்து கேட்பு


தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித் துறைக்குத் தேவையான திட்டங்கள் குறித்து, துறை இயக்குனர்களிடம், அரசு கருத்து கேட்டுள்ளது.ஆண்டுதோறும், பட்ஜெட் கூட்டத்தொடர் கூடும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நிதித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலகம் சார்பில், கருத்துரு கேட்கப்படும்.
இந்த ஆண்டு கல்வித் துறைக்கு, பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் முக்கியமாக இடம் பெற வேண்டும் என, கல்வித் துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது; இதற்காக, கருத்துக் கேட்பு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா தலைமையிலான கூட்டத்தில்,இயக்குனர்கள் கண்ணப்பன், ராஜன், அறிவொளி, பிச்சை, பூஜா குல்கர்னி, முருகன், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், துறை செயல்பாடுகளை கணினி மயமாக்க நிதி ஒதுக்கீடு; வகுப்பறைகளுக்கு உபகரணங்கள் வாங்குதல்; மத்திய பாடத் திட்டத்துக்கு இணையாக, நவீன தொழில்நுட்பம் மற்றும் பாடத்திட்டங்களை ஆய்வு செய்தல்; ஆய்வுப் பிரிவு உருவாக்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளுக்கு, இயக்குனர்கள் கோரிக்கை விடுத்து, கருத்துரு அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி